முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்துப்பேட்டை சமத்துவ பூமியில் செய்கு தாவூத் ஒலியுல்லா தர்கா

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      ஆன்மிகம்
Image Unavailable

முத்துப்பேட்டை இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் சம அளவில் தாங்கி நிற்கும் சமத்துவபூமி. பெருமை மிகுஇவ்வூர் பகுதியில் ஒன்று ஜாம்பவானோடை, ஜாம்புவானோடைக்கு மகுடம் சூட்டியது போல திகழ்வது செய்கு தாவூத் ஒலியுள்ள மகானின் மகத்துவமான தர்கா.

மனிதர்களின் மான்பு மறைந்துபோகும் அளவிற்கு இன்றைய காலகட்டத்தில் ஜாதி மற்றும் மத சண்டைகள் சில இடங்களில்  மனிதர்களை புற்றுநோய் அழித்து கொண்டிருந்தாலும், இனங்களை கடந்து மனிதர்கள் அனைவரும் ஓர் குலம் என்ற ரீதியில் தமிழக புண்ணியதலங்களில் பட்டியலில் முத்துப்பேட்டை செய்கு தாவூத் ஒலியுள்ள தர்காவும் ஒன்று என்று கூறுவதில் நூறு சதவீதம் உண்மை அடங்கி உள்ளது.

700 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் யாதவர் குலத்தை சேர்ந்த கருப்பையா என்பவர் வசித்து வந்தார். தரிசாக கிடந்த தனது நிலத்தை அவர் உழுது கொண்டு இருந்தார். திடீரென்று பூமிக்கடியில் இருந்து ரத்தம் பீறிட்டு அடித்துள்ளது. அந்த ரத்தம் கருப்பையாவின் கண்ணில்பட்டதால் அவரது கண்கள் குருடானது தனக்கு நேர்ந்த இந்த சம்பவத்தால் கதி கலங்கி தட்டுத் தடுமாறி வீட்டிற்க சென்றுள்ளார் கருப்பையா.

ஓர் நாள் அவர்  உறங்கி கொண்டு இருந்தபோது கனவல் ஒரு உருவம் தோன்றியது. அந்த உருவம் பேசத்தொடங்கியது. மனிதனே கலங்காதே, நீ உழுத இடத்தில் பீறிட்ட குருதி என் குருதியே, நான் அந்த இடத்தில் அடங்கி காலங்கள் பல கடந்துவிட்டன. எனது பெயர் செய்க தாவூத் என்றார். நாச்சிகுளம் என்ற ஊரில் வடமாநிலத்தை சேர்ந்த கபீர்கான், ஹமீத்கான் என்ற நல்லடியார்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவரிகளிடம் இதனை கூறிவிட்டு நீங்கள் மூவரும் குருதி பீறிட்ட இடத்திற்கு வாருங்கள், அங்கு பூத்து குலுங்கும் புத்தம் புதிய பூக்களை காண்பீர்கள்ஃ இறை அருளாhல் உனது இழந்த கண்பார்வை மீண்டுமு; கிட்டும் எனக்கூறி மறைந்தது.

கருப்பையா உள்ளிட்ட மூன்று நபர்களும் நாச்சிகுளம் சென்றனர். கனவில் கூறியது போல் ரத்தம் பீறிட்ட இடத்தில் பூக்கள் பூத்து குலுங்கின. கருப்பையா கண் பார்வை பெற்றார். அவரின் ஆனந்தம் எல்லை அடங்காதது. அந்த இடத்தில் தனது சொந்தமான இன்று பலகோடி மதிப்பிலான சொத்தை சுமார் 5 வேலியை இலவசமாக கொடுத்து கட்டப்பட்டது தான் தாவூத் ஒலியுள்ள தர்கா.

அன்றிலிருந்து இன்று வரை பலதரப்பட்ட மக்களுக்கு தீராத நோய் தீர்க்கும் தலமாக ஓங்கி புகழ் உச்சியில் நின்று கருணை மழை பொழிந்து வருகிறது. அதுமட்டுமின்றி அல்லா நம் வேண்டுதலை ஏற்று தீமைகளை அழிக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்