முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் 68-ஆவது குடியரசு தினவிழா

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமநாதபுரம், - ராமநாதபுரத்தில் நடைபெற்ற 68-வது குடியரசு தினவிழாவில் கலெக்டர் முனைவர் நடராஜன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ராமநாதபுரம், காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில்  நடைபெற்ற  68-ஆவது குடியரசு தினவிழாவில்  மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சுதந்திரப் போராட்டத் தியாகிகளைக் கௌரவித்தார். அதன்பின்பு சிறப்பாகப் பணியாற்றிய 31 காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கத்தினையும், 37 காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 114  அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து முன்னாள் படைவீரர்கள் நலத்துறை, வருவாய்த்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், தாட்கோ, புதுவாழ்வுத் திட்டம், மகளிர் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத்துறை ஆகிய துறைகளின் சார்பாக மொத்தம் 550 பயனாளிகளுக்கு ரூ.1கோடியே 10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் மானியத்துடன் கூடிய கடனுதவிகளையும் வழங்கினார்.

பின்னர் ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கும்பரம் அரசு உயர்நிலைப்பள்ளி, ராமநாதபுரம் ஜவஹர் சிறுவர் மன்றம், தேவிப்பட்டிணம் புகாரியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேவிப்பட்டிணம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி, ராமநாதபுரம் புனித அந்திரேயா மேல்நிலைப்பள்ளி  ஆகிய பள்ளிகளைச் சார்ந்த 200 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.  இவ்விழாவில் காவல்துறை கூடுதல் இயக்குநர் ஜாபர் சேட், ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் கபில்குமார் சி.சரத்கர்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மு.அலி அக்பர், பரமக்குடி சார் ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரா.ராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி, மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ்.சேதுமாதவன், உதவி காவல் கண்காணிப்பாளர் சர்வேஸ்ராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாத்துரை, உதவி அலுவலர்கள் கயிலைசெல்வம், விஜயகுமார் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், முக்கியப் பிரமுகர்கள், மாணவ மாணவியர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள்   கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்