முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் ம.தி.மு.க சார்பில் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம்:

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2017      மதுரை
Image Unavailable

 திருமங்கலம்.- திருமங்கலம் நகரில் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட ம.தி.மு.க மாணவரணி சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க அரசியல் ஆய்வு மையச் செயலாளர் மு.செந்திலதிபன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

திருமங்கலம் நகர் தேவர் திடலில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திற்கு மதுரை புறநகர் தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கே.ஏ.எஸ்.ஜவஹர் தலைமை வகித்தார்.கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜ்,மேற்கு ஒன்றிய செயலாளர் சிவன்,நகர அவைதலைவர் திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருமங்கலம் நகர ம.தி.மு.க செயலாளர் அனிதா.வி.பால்ராஜ் வரவேற்புரையாற்றினார்.ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க அரசியல் ஆய்வு மையச் செயலாளர் மு.செந்திலதிபன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

முன்னதாக மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் அ.கதிரேசன்,வடக்கு மாவட்ட செயலாளர் மார்நாடு,மாநகர் மாவட்ட செயலாளர் புதூர்.பூமிநாதன்,மாநில மாணவரணி செயலாளர் அழகுசுந்தரம்,தொண்டரணி அமைப்பாளர் பாஸ்கரசேதுபதி,மாவட்ட அவைதலைவர் சாமி,மாநகர் அவைதலைவர் சின்னசெல்லம்,மாநில விவசாயஅணி துணை செயலாளர்கள் முனியாண்டி,சக்திவேல்,மாவட்ட பொருளாளர் துரைசெழியன்,மாவட்ட துணைச் செயலாளர்கள் சின்னராஜ்,புஷ்பலதாசீனிவாசன்,மாவட்ட மகளிரணி தலைவி பேச்சியம்மாள்,தலைமை கழக வழக்கறிஞர் சுப்புராஜ்,கோ.ரவி,வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பூப்பாண்டி ஆகியோர் உரையாற்றினார்கள்.

இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வபாண்டி,பஞ்சுராஜன்,தங்கராஜ்,தாமோதரன்,பால்பாண்டி,நகரச் செயலாளர்கள் குமார்,முருகேசன்,கணேசன் மற்றும் ஒன்றிய,பேரூர்,கிளைகழக நிர்வாகிகள்,அணி நிர்வாகிகள் மற்றும் கட்சியின் முன்னோடிகள் கலந்து கொண்டனர்.நிறைவாகநகர பொருளாளர் ஆதம்பாவா நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்