எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி திருமங்கலம் ஒன்றியம் பள்ளக்காபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணுவவீரர் சுந்தரபாண்டி மற்றும் கள்ளிக்குடி ஒன்றியம் கே.வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு ராணுவவீரர் தாமோதரகண்ணன் ஆகியோர் மரணமடைந்ததை தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் தலா ரூ.20லட்சம் நிவாரண நிதியை தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் வழங்கி ஆறுதல் கூறினார்.
ராணுவவீரர் சுந்தரபாண்டி மரணம்;: திருமங்கலம் அருகேயுள்ள பள்ளக்காபட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி-தமிழச்செல்வி தம்பதியரின் மகன் சுந்தரபாண்டி(25).விவசாய குடும்பத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டி ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்காக பல்வேறு தியாகங்கள் செய்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார்.இவருக்கு கடந்த 2014ம் ஆண்டு திருமணமாகி சிவபிரியா என்ற மனைவி உள்ளார்.சிவபிரியா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.இந்நிலையில் சில நாட்களாக ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 25ம் தேதி பந்திப்போரா மாவட்டம்,குரெஸ் செக்டாரில் ராணுவ முகாம் இருந்த பகுதியில் கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது.இந்த பனிச்சரிவில் ராணுவவீரர்கள் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். இந்த பனிச்சரிவில் சிக்கி திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராணுவவீரர் சுந்தரபாண்டியின் சடலமும் இருந்ததை மீட்புபடையினர் கண்டுபிடித்து மீட்டனர். ராணுவவீரர் தாமோதரகண்ணன் மரணம்: இதனிடையே மீட்பு படையினர் மோப்பநாய்கள் உதவியுடன் தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில் பனிச்சரிவில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 5ராணுவ வீரர்hகளை மீட்டு அருகிலுள்ள ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.எனினும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5ராணுவவீரர்களும் உயிரிழந்தனர்.
இதில் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியம் கே.வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம்-காட்டுராணி ஆகியோரது மகனான தாமோதரகண்ணன்(26) என்பவர் பலியானதாக தகவல்கள் வெளியாகின.டிப்ளமோ பட்டதாரியான தாமோதரகண்ணன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இராணுவத்தில் சேர்ந்ததும் தற்போது காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகில் உள்ள ராணுவமுகாமில் பீரங்கிபடையில் வீரராக பணியாற்றி வந்துள்ளார்.தற்போது பனிச்சரிவில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இவரது சகோரார் ஹரீஷ்குமார் என்பவர் தற்போது இந்திய ராணுவத்தில் வீரராக பணியாற்றி வருகின்றார். தலா 20லட்சம் நிவாரணநிதி அறிவிப்பு: திருமங்கலம் அருகேயுள்ள பள்ளக்காபட்டியைச் சேர்ந்த ராணுவவீரர் சுந்தரபாண்டிமற்றும் கே.வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு ராணுவவீரர் சுந்தரபாண்டி ஆகிய இருவர் பணிச்சரிவில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்ததை தொடர்ந்து இவ்விரு கிராமங்களும் சோகத்தில் மூழ்கின.மேலும் உடல்கள் வீட்டிற்கு கொண்டு வரப்படும் வரையில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்,கூட்டமாக திரண்டிருந்த கிராமமக்கள் கதறியழுத காட்சி பார்ப்போரை கண்கலங்க வைப்பதாக இருந்தது.
இந்நிலையில் உயிரிழந்த ராணுவவீரர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்;பில் நிவாரண நிதியாக தலா.ரூ.20லட்சம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். விமானம் மூலம் உடல்கள் மதுரை வருகை: இந்நிலையில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவவீரர்களின் உடல்கள் விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு 11மணிக்கு தனிவிமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து ராணுவீரர்கள் அணிவகுப்புடன் பெட்டிகளில் வைத்து கொண்டு வரப்பட்ட ராணுவவீரர்களின் உடல்களுக்கு பழைய விமானநிலையம் முன்பாக மரியாதை செலுத்திடும் நிகழச்சி நடைபெற்றது.அப்போது தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்;, மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ்,மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.,மாவட்ட எஸ்.பி.(பொ)சக்திவேல் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து வணங்கிமரியாதை செலுத்தினார்கள்.இதையடுத்து ராணுவ வீரர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு ராணுவத்தினர் புடைசூழ கொண்டு செல்லப்பட்டது. நிவாரணநிதி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்: இந்நிலையில் பள்ளக்காபட்டி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட ராணுவவீரர் சுந்தரபாண்டியின் உடலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் சுந்தரபாண்டியின் பெற்றோர் சின்னச்சாமி-தமிழச்செல்வி மற்றும் மனைவி சிவபிரியா ஆகியோரிடம் தமிழக அரசின் சார்பில் நிவாரணநிதியாக ரூ.20லட்சத்திற்காக காசோலையை அமைச்சர் ஆர்.பிஉதயகுமார் வழங்கி ஆறுதல் கூறினார்.பின்னர் கே.வெள்ளாகுளத்தில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு ராணுவவீரர் தாமோதரகண்ணனின் உடலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,கலெக்டர் கொ.வீரரகவராவ் ஆகியோர் மலர்வளையம் வைத்த அஞ்சலி செலுத்தினார்கள்.பின்னர் மரணமடைந்த தாமோதரகண்ணனின் பெற்றோர் மாணிக்கம்-காட்டுராணி ஆகியோரிடம் தமிழக அரசின் சார்பில் நிவாரண நிதியாக ரூ.20லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி ஆறுதல் கூறினார்.
21குண்டுகள் முழங்க இறுதிச்சடங்குகள்: இதனிடையே நேற்று காலை பள்ளக்காபட்டி சுடுகாட்டில் ராணுவவீரர் சுந்தரபாண்டியன் உடலுக்கு 21துப்பாக்கி குண்டுகள் முழங்கிட இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் நடைபெற்றது.அப்போது பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து சுந்ரபாண்டிக்கு இறுதியஞ்சலி செலுத்தினார்கள்.பின்னர் கே.வெள்ளாகுளம் சுடுகாட்டில் ராணுவவீரர் தாமோதரகண்ணனின் உடலுக்கு 21குண்டுகள் முழங்கிட இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் நடைபெற்றது.அப்போது சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அஞ்சலி நிகழ்சிகளில் கலந்து கொண்டோர்: மதுரை கலெக்டர் கொ.வீரராகவராவ்,வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.,முன்னாள் எம்.எல்.ஏ.,தமிழரசன்,முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.ஜெயராமன்,மாவட்ட கழக துணை செயலாளர் பி.அய்யப்பன்,மாவட்ட சார்புஅணி செயலாளர்கள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி, திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன்,திருமங்கலம் ஒன்றிய அம்மா பேரவை தலைவர்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன்,முன்னாள் தொகுதி கழகச் செயலாளர் ஆண்டிச்சாமி,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் ரமேஷ்,திருப்பரங்குன்றம் ஒன்றிய துணை செயலாளர் நிலையூர்முருகன்,கட்சி நிர்வாகிகள் கபிகாசிமாயன்,சாமிநாதன்,வேல்முருகன்,சிவன்காளை,பிரபுசங்கர்,கண்ணன்,தாத்தப்பன்,பாண்டியன்,அன்னக்கொடி,சுகுமார்,நிரஞ்சன்,சிவா,உசிலம்பட்டி ஆர்.டி.ஓ சுகன்யா, திருமங்கலம் தாசில்தார் மலர்விழி,துணை தாசில்தார் தனபாண்டி மற்றும் கட்சி நிர்வாகிகள்,அரசுஅலுவலர்கள் ராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.