முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.டி.ஐ பணிமனையின் கட்டுமான பணிகள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      மதுரை
Image Unavailable

  திருமங்கலம்.- மதுரை மாவட்டம்,திருமங்கலம் ஒன்றியத்திலுள்ள செக்காணூரணி அரசு ஐ.டி.ஐயில் புதிதாக கட்டப்பட்டு வரும் பணிமனை கட்டிடங்களின் கட்டுமான பணிகளை தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 அமைச்சர் ஆய்வு:

தமிழகத்தில் தொழிற் கல்வித்தரத்தை மேம்படுத்திடும் வகையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு ஐ.டி.ஐகளில்  கூடுதல் பணிமனை கட்டிடங்கள் கட்டிட மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்கள் உத்தரவிட்டிருந்தார்.அதன்படி மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் செக்காணூரணியில் சிறப்புடன் செயல்பட்டு வரும் அரசு ஐ.டி.ஐ.யில் கூடுதல் பணிமனை கட்டிடங்கள் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ரூ.39லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்த பணிமனைகளின் கட்டுமான பணிகளை தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பயிற்சியாளர்களின் நலனுக்காக பணிகளை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
 நலத்திட்ட உதவிகள் வழங்கினார்:

பின்னர் செக்காணூரணி அரசு ஐ.டி.ஐ.யில் நடைபெற்ற விழாவில் தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மதிவண்டிகள் மற்றும் விலையில்லா மடிக்கணிணிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.மேலும் பயிற்சியாளர்களுக்கு தேவையான விலைஉயர்ந்த புத்தகங்களை தமிழக அரசின் சார்பில் இலவசமாக வழங்கி வாழ்வில் முன்னேற்றம் கண்டிட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாழ்த்து தெரிவித்தார்.
 கலந்து கொண்டோர்:
 இந்த ஆய்வின் போது முன்னாள் மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஜெயராமன்,முன்னாள் எம்.எல்.ஏ.,தமிழரசன்,மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன்,மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் தமிழ்செல்வம்,திருப்பதி,போத்திராஜா, திருமங்கலம் ஒன்றிய செயலாளர் வக்கீல். அன்பழகன்,ஒன்றிய அம்மா பேரவை தலைவர்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,முன்னாள் நகர்மன்ற துணை சேர்மன் சதீஸ்சண்முகம்,ஒன்றிய துணை செயலாளர் சுகுமார்,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,கள்ளிக்குடி முன்னாள் துணை சேர்மன் கண்ணன்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரபுசங்கர்,கட்சி நிர்வாகிகள்  கபிகாசிமாயன்,சோலைராஜா,சிவா,செல்வம், சிவன்காளை, சாமிநாதன், வேல்முருகன், பாண்டியன்,செல்வம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்