எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்போது விவசாயிகளின் கவனம் அங்கக வேளாண்மை என்னும் இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய்களைக் கட்டுப்படுத்துவது சவாலாகவே இருந்துவருகிறது. எனினும் சில குறிப்பிட்ட உயிரியல் மருந்துகள் (காரணிகள்) , இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு உற்ற தோழனாக இருந்து வருகின்றன.
இதுகுறித்து நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குனர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளதாவது. : ‘வேளாண்மையில் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளை அளவு கடந்து பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு மண்வளம் குன்றி, நீர்வளமும் பாதிப்பு அடைகின்றன. இரசாயன வகைஇடுபொருள்களை வயல்களில் பயன்படுத்துவதை தவிர்த்து பயிர் சுழற்சி, இயற்கை உரங்கள், இயற்கைப் பூச்சி, நோய் மருந்துகளைப் பயன்படுத்துதல் போன்ற இயற்கை வேளாண்மை முறையை தற்போது பல விவசாயிகள் கடைப்பிடித்து வருகிறார்கள். இதில் பல்வேறு நோய்களைத் திறம்படக் கட்டுப்படுத்துவதில் ‘டிரைகோடெர்மா விரிடி” மற்றும் ‘சூடோமோனாஸ்” - என்ற இரண்டு உயிரியல் மருந்துகளும் இயற்கை விவசாயத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.
1.டிரைகோடெர்மா விரிடி (டி.விரிடி) : இது ஒரு நன்மை செய்யும் பூஞ்சாணம் ஆகும். பவுடர் வடிவத்திலும், திரவமாகவும் கடைகளில் கிடைக்கிறது. விதை, வேர், இலைகளில் உள்ள தீமைசெய்யும் பூஞ்சாணங்கள் - அதாவது நோய் ஏற்படுத்தும் கிருமிகள் மீது இந்த உயிரியல் பூஞ்சாண மருந்து சிறப்பாக செயல்பட்டு நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. குறிப்பாக வேர் அழுகல், தண்டு அழுகல் நோய் (நிலக்கடலை, எள் பயறுவகைகள் காய்கறிகள் பயறுவகை, பழங்கள்) – போன்ற நோய்களிலிருந்து பயிர்களைக் காக்கிறது. மேலும் விதை முளைத்தலைத் தூண்டுவதுடன், பூக்கள் உருவாவதையும், பயிர் வளர்ச்சியையும் தூண்டி மகுந்த நன்மை செய்கிறது. மேலும் இது மனிதர்கள், விலங்குகள், தேனீக்கள், பறவை, மீன்களுக்கும் தீங்கு விளைவிப்பதில்லை.
இதை உயிர் உரங்கள் (அசோஸ்பைரில்லம், ரைசோபியம்.... போன்றவை) தொழு உரம், இயற்கை உரங்களுடன் கலந்து பயன்படுத்தலாம். திரவ வடிவில் டிரைகோடெர்மா விரிடியைப் பயன்படுத்தும் போது வெகு எளிதில் பயிர்களின் மீது பட்டுப் பரவி நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இதில் என்சைம்களின் செயல்பாடு அதிகமாக இருக்கும் மேலும், 70 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையும் தாங்கி செயல்படக்கூடியதாகும்.
பயன்படுத்தும் முறை : ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் அரிசிக்கஞ்சி சிறிதளவு சேர்த்து விதைகளுடன் நன்கு கலந்து ஒரு நாள் வைத்திருந்து, விதைக்கும் போது, விதைகள் மற்றும் மண் மூலம் பரவும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும், மட்கிய குப்பையுடன் ஏக்கருக்கு 2 கிலோ என்ற அளவில் டிரைகோடெர்மா விரிடியை கலந்து அடியுரமாக இடும்போது நல்ல பலன் கிட்டுகிறது. திரவ வடிவில் ஏக்கருக்கு 100 மில்லி டி.விரிடி மருந்தை தண்ணீரில் கலந்து பயிர்களின் மீது தெளிக்கும் போது, நோய்கள் நன்கு கட்டுப்படுத்தப்படுகிறது. டி.விரிடியைப் பயன்படுத்தும் போது இரசாயன பூஞ்சாண மருந்துகளை சேர்த்துக் கலந்து தெளிக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
டி.விரிடியை நோய் உண்டாக்கும் பூஞ்சாணங்களின் செல்சுவரைக் கரைத்து நச்சுப் பொருள்களை சுரந்தும் நோய்காரணிகளை அழிப்பதாலும், மண் வழிப்பரவும் நோய்க்கிருமிகள் நுழையாதவாறு பயிர்களின் வேர்களுக்கு புறப்பாதுகாப்பை அளிப்பதாலும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
2. சூடோமோனாஸ் ‡புளோரோசன்ஸ் : இது ஒரு நன்மை செய்யும் பாக்டீரியா ஆகும். இது தூள் மற்றும் திரவ வடிவில் கிடைக்கிறது. இதன் மூலம் தீமை செய்யும் பல்வேறு பாக்டீரியாக்களும், தீமை செய்யும் பல்வேறு பூஞ்சாணங்களும் கட்டுப்படுத்தப்பட்டு நோய்களிலிருந்து பயிர்களை காக்கிறது. சூடோமோனாஸ் நெல், கரும்பு, பருத்தி, பயறு வகைகள், நிலக்கடலை, எள், காய்கறிகள், மஞ்சள், வாழை, தென்னை – உட்பட பல்வேறு பயிர்களில் ஏற்படும் இலைப்புள்ளி, இலைக்கருகல், குலைநோய், வாடல்நோய், நாற்றழுகல் மற்றும் கிழங்கு அழுகல் போன்ற பல்வேறு நோய்களை சிறப்பாகக் கட்டுப்படுத்துகிறது.
நோய் உண்டாக்கும் கிருமிகளின் செல்சுவரை கரைக்கும் ‘என்சைம்களை” உற்பத்தி செய்தும், ‘ஹைட்ரஜன் சயனைடு” மற்றும் இரும்புச் சத்தினை தக்க வைக்கும் ‘சிட்ரோபோர்கள” – ஆகியனவற்றை உற்பத்தி செய்தும் நோய்களை அழித்து பயிர்களைக் காக்கிறது. மேலும், தாவர வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்து பயிர் விளைச்சலை அதிகரிக்கிறது.
பயன்படுத்தும் முறை : ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் ஆறிய அரிசிக்கஞ்சியுடன் „சூடோமோனாஸ்;… கலந்து பின் விதைக்கலாம். ஒரு கிலோ „சூடோமோனாஸ்;… உடன் தேவையான தண்ணீர் கலந்து ஒரு ஏக்கருக்கான நாற்றுக்கள் ஃ கிழங்கு ஃ விதைக் கரனைகளை நனைத்து அரை மணி நேரம் வைத்திருந்து பிறகு நடவு செய்யலாம். இலைமேல் தெளிப்பதற்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் கரைத்து 2 -3 முறை தெளிக்கலாம். மேலும், நடவு வயலில் இடுவதற்கு ஏக்கருக்கு 1 முதல் 2 கிலோ ‘ ‘சூடோமோனாஸ்;” - தூளை மட்கிய தொழுஉரத்துடன் கலந்து இடலாம். இதை உயிர் உரத்துடன் கலந்தும் பயன்படுத்தலாம்.
எனவே, இயற்கை விவசாயத்தையும், அங்கக வேளாண்மையும் விரும்பும் விவசாயப்பெருமக்கள் மேற்கண்ட இரண்டு முக்கியமான உயிரியல் மருந்துகளை பல முறைகளில் பயன்படுத்தி, மிகக் குறைந்த செலவில் எண்ணற்ற பலன்களை அடையலாம்”
இவ்வாறு நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.
கோபி சிவம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.