முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோல்வி பயத்தால்தான் சோனியா பிரசாரம் செய்யவில்லை : வெங்கையா நாயுடு கிண்டல்

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2017      அரசியல்
Image Unavailable

பாலியா  - தோல்வி பயம் காரணமாகத்தான் தேர்தல் பிரசாரத்திற்கு சோனியா காந்தி வரவில்லை என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கிண்டலாக கூறியுள்ளார்.பஞ்சாப்,கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்துமுடிந்துவிட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் 7 கட்ட தேர்தலில் 4 கட்ட தேர்தல் முடிந்துவிட்டது. மீதி 3 கட்ட தேர்தல் நடக்கவுள்ளது. மணிப்பூர் மாநிலத்திலும் தேர்தல் நடக்க உள்ளது.

இந்த 5 மாநில தேர்தலிலும் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி,மற்றும் கட்சியின் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரசாரம் செய்யவில்லை. இதுகுறித்து வெங்கையா நாயுடு கூறுகையில் தேர்தலில் தோல்வி பயத்தால்தான் சோனியா காந்தி பிரசாரத்திற்கு வரவில்லை என்று கூறினார். உத்தரப்பிரதேசத்தில் பாலியா பகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு மேற்கண்டவாறு கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்