எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த உலகில் செல்வம் இருந்தும் மனநிம்மதி இன்றி வாழ்பவர்கள் ஏராளம். அதுபோல் செல்வம் இல்லாமல்; வாழ்வில் முன்னேற முடியாமல் வாழ்க்கையை போராடி கழிப்பவர்களும் அதைவிட அதிகம் உள்ளனர். பணம் இருப்பவர்களுக்கு மனக்கஷ்டத்தை போக்கவும், அதேபோல பணத்தட்டுப்பாட்டுடன் வாழ்பவர்களுக்கு செல்வவளம் பெருக்க உதவும் திருத்தலம் ஒன்று உள்ளது.
திருத்தவத்துறை என்னும் லால்குடியை அடுத்த நன்னிமங்கலம் சென்னிவாய்க்காலில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர், லட்சுமி நாராயணபெருமாள் கோவில் தான் இந்த சிறப்புகளை பெற்று உள்ளது.
திருச்சியிலிருந்து திருத்தவத்துறை என்னும் லால்குடி வழியாக சாத்தமங்கலம் செல்லும் சாலையில் லால்குடியிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் நன்னிமங்கலம் சென்னிவாய்க்கால் கோவில் உள்ளது. திருச்சி சத்திரம் பஸ்நிலையத்திலிருந்து லால்குடி வழியாக சாத்தமங்கலம் ஆனந்திமேடு கிராமம் செல்லும் பஸ்ஸில் ஏறி நன்னிமங்கலம் சென்னிவாய்க்கால் சிவன்கோவில் என்று இறங்கவேண்டும். இந்த கோவில் செல்ல லால்குடி பஸ்நிலையத்திலிருந்து அதிக அளவில் ஆட்டோக்கள் உள்ளது. கோவிலுக்கு செல்லும் பேருந்து திருச்சி வழ ஆனந்திமேடு டவுன்பஸ் 80யு. லால்குடியிலிருந்து கோவிலுக்கு பஸ் புறப்படும் நேரம் காலை 6.00, 8.00, 10.30 மணி பகல் 1.10, 3.20 மாலை 5.40 மணி.
பவுர்ணமி அன்று திருவண்ணாமலையை கிரிவலம் வரும் பக்தர்கள் கிரிவலம் முடிந்து நேரே திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், நன்னிமங்கலம் கிராமத்தில் எழுந்தருளி, கரும்பச்சை வண்ணத்தில் பேரளவினராய் மரகத மேனியாய் அருள்பாலிக்கும் ஸ்ரீ மீனாட்சி சமேத ஸ்ரீ சுந்தரே~;வரரை வலம் வந்து வணங்கி பின் ஆலய ஸ்தல விருட்சமான வில்வ மரத்தை அடிபிரதட்சனம் செய்து வழிபட்டால் ஸ்ரீ குபேர மூர்;த்தியின் அருட்கடாசத்துக்கு பாத்திரமாவார்கள் என்று இந்த வரிகள் திருவண்ணாமலை கோவிலில் உள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டள்ளது. இதற்கு காரணம் ஸ்ரீ சிவபெருமான் குபேரனுக்கு அளித்த பொன் வில்வசாரம் இவ்வாலயத்தில் பன்மடங்காக பெருகி அற்புதம் அளித்ததே ஆகும்.
பொன்வில்வசாரம்
பொன்னாலாகிய மூன்று வில்வ தலங்களை உடைய பொன் வில்வசாரம் எந்த தேவலோகத்திலும் கிடைக்காத அருமை, பெருமைகளை உடையது. எந்த ஒரு சுயம்பு லிங்கத்தின் மீது வைத்து ஓம் நமச்சிவாயா என்று ஓதி ஒரு முறை அர்ச்சித்து வழிபட்டால் உடனே அது பன்மடங்காக பெருகி பிரகாசித்து நிறைந்த செல்வத்தை தரும் அற்புதம் உடையது ஆகும். குறித்த யோக, தவ, ஜெப சக்திகளை பெற்றிருப்பவர்களை தவிர இந்த பொன்வில்வ சாரமானது எவர் கண்களுக்கும் தென்படாது. ஏவர் கரங்களிலும் நிலைத்து நிற்காது. இவ்வளவு மஹிமையுடைய பொன் வில்வசாரத்தைச் சிவபெருமான் ஸ்ரீ குபேரனிடம் அளித்தார். இந்த அற்புதமான சிவன் அளித்த பொன்வில்ல சாரத்தை ஸ்ரீ குபேரன் தனது குமாரர்கள் மணிகிரீவன், நலகூபன் ஆகிய ஆகிய இருவரிடமும் அளித்து பூலோகம் எங்குமுள்ள சுயம்பு மூர்த்தி லிங்கங்களிடம் வைத்து வழிபட்டு இதன் மஹிமையை அறிந்து வரும்;படி கட்டளையிட்டார். சுயம்பு லிங்க பூஜையில் சிறப்பு பெற்றவர்களும் சிவ சேவகர்களுக்குமான ஸ்ரீ குபேரனின் புதல்வர்கள் கண்களில் பொன்வில்வசாரம் தென்பட்டது. அவர்தம் கரங்களில் நிலைத்து நின்றது. இதைக்கண்டு ஸ்ரீ குபேரன் பெருமகிழ்ச்சி பெற்றார்.
திரு அண்ணாமலையார் அருள்வழி
சிவபெருமான் தன் தந்தைக்கு அளித்த தெய்வீக மருத்துவம் வாய்ந்த பொன்வில்வசாரம் எந்த சிவாலயத்தில் பன்மடங்காக பெருகும் தெய்வீக தன்மையுடையது என்ற தேவ ரகசியம் அறியாமல் பூலோகம் எங்குமுள்ள சிவாலயங்களில் உள்ள சுயம்புலிங்க மூர்த்திகளின் மீது வைத்து ஸ்ரீ குபேரனின் குமாரர்கள் நலகுகன், மணிகிரீவன் இருவரும் வழிபடி ஸ்வர்ண வில்வதலம், சாதாரண வில்வதலம் போல் பசுமையான காட்சிதர சில இடங்களில் மறைந்தும் காணப்பட்டது. பலகோடி யுக தல யாத்திரையின் பயனாக கோடிக்கணக்கான சுயம்புலிங்க மூர்த்திகளை தரிசித்ததின் பலனாக அவர்களை பிரபஞ்சத்தின் தெய்வீக மையமாக விளங்கும் திரு அண்ணாமலை அடையும் பேறுபெற்று பவுர்ணமி அன்று கிரிவலம் வந்து கலியுக மக்களுக்கு தேவையான தர்ம நிதி மற்றும் ~pப்ரநிதி செல்வத்திற்காக சங்கல்பம் செய்துகொண்ட ஸ்வர்ண வில்வதலத்தை ஓம் நமச்சிவாயா என்று ஓதி திருஅண்ணாமலை ஆண்டவன் பாதங்களில் வைத்து இதன் மஹிமையையும், தெய்வீக ரகசியத்தையும் உணர்த்துமாறு மனமுருகி பிரார்த்தனை செய்தனர். திரு அண்ணாமலையாரிடம் வில்வதலம் ஸ்வர்ணயாக பிரகாசித்து மேலும் திரு அண்ணாமலையார், ஸ்ரீ குபேரன் குமாரர்களிடம் இதன் மஹிமையையும், தெய்வீக ரகசியத்தையும் அறிய வேண்டுமெனில்
“ தென்திசை காவேரி இயல்சீர் சேர்
சென்னிச் சிவக்கயல் சுந்தரம் பார் ” என்று அருள்வழி காட்டினார்.
ஸ்வர்ண வில்வசார மஹிமை
திரு அண்ணாமலையார் அருள்வழி காட்டியதில் மகிழ்வுற்ற இருவரும் தென்திசை நோக்கி பயனித்து ஏழ்தலம் புகழ்க் காவிரியார் விளை சோழமண்டல மீது உள் திருத்தவத்துறை என்னும் லால்குடியை அடைந்தனர். அங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீ சப்தரி~pஸ்வரர் ஆலயத்தின் சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி நீராடினர். நீராடி எழுந்த அவர்கள் தாங்கள் இன்னொரு ஆலயத்தில் இருப்பதை உணர்ந்தனர். தங்கள் கரங்களில் இருந்த பொன்வில்வ சாரமும் மறைந்துவிட்டதை கண்டு சிவன் சொத்திற்கு என்னவாயிற்றோ என்று பதறினர். எல்லாம் சிவனருள் என்று எண்ணி மூலஸ்தானம் நோக்கி சென்றனர்.
அங்கே ஓர் அற்புதத்தை கண்டு பரவசமும், பேரானந்தமும் கொண்டனர். கரும்பச்சை வண்ணத்தில் பேரளவினராய் மரகதம் போல் ஜொலிக்கும் சுயம்புலிங்க மேனியில் தாங்கள் கொண்டு வந்த பொன்வில்வசாரம் பொங்கிப் பொங்கி பன்மடங்காக பெருகி வாசைன நிறைந்து, ஸ்வர்ண வில்வ தலங்களாக மஞ்சள் நிறத்தில் ஜொலித்து பிரகாசிக்க கண்டனர். ஓம் நமச்சிவாயா என்று ஓதி அர்ச்சிக்க அது மேலும் மேலும் பொங்கி நிறைந்து பொலியக் கண்டனர். கரும்பச்சை வண்ண மரகத மேனியில் ஸ்வர்ணதளம் பன்மடங்கு பொங்கிப் பிரகாசித்ததைக் கண்டு பேருவுவகை அடைந்தனர்.
குபேரனருள்
தன் புதல்வர்களுக்கு தனக்கு கிட்டாத தரிசனம் கிட்டியது பற்றியும் பொன்வில்வசாரத்தின் மகிமையையும் அதன் தெய்வீக ரகசியத்தை உணர்ந்ததை பற்றியும் அறிந்து பெருமகிழ்ச்சியுற்ற ஸ்ரீ குபேரன் திரு அண்ணாமலை வாழ் அருள்வழி காட்டிய, தென்திவைக்காவேரி சோழமண்டலத்தில் உள்ள சென்னிவள நாட்டில் அருள்பாலிக்கும் கயல்விழிகளை உடைய ஸ்ரீ மீனாட்சி சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரரின் பெருமைகளையுணர்’ந்து இங்கு வந்து வழிபட்டார். மேலும் இவ்வாலயத்திற்கு பவுர்ணமி அன்று வந்து ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரரை வலம் வந்து வழிபடும் பக்தர்கள் தம் வாழ்நாளில் முறையாக ஈட்டும் ஒவ்வொரு பைசா சம்பாத்தியத்திலும் பரிபூரண சக்தி நிறைந்திடவும் பரிபூரண லெட்சுமி கடாட்சத்தை பெறவும் தன்னுடைய சங்க பதும புண்ணிய சக்திகளையும் அவற்றின் ஆசீர்வாதங்களையும் கூட்டி அவற்றை நன்முறையில் பெருக்கி நிறைவுபெற செய்து செலவிடச் செய்யவும், வியாபாரம், தொழில், பதவி போன்றவற்றில் அதர்ம முறையிலும் லஞ்சம் மூலமும் பணம் சம்பாதித்து பணக்க~;டம் இல்லாவிடினும் மனக்க~;டப்படுவோரின் சகல தோ~ங்களையும் நீக்கி அவர் தம் ஈட்டிய பொருளில் தர்மநிதி மற்றும் ~pப்ரநிதியை நிறைத்து முறையான வழயில் தர்ம காரியங்களில் செலவிடச் செய்து சொத்தை பெருக்கவும் குபேரன் அருள்பாலிக்கிறார்.
குபேர நாக தேவதைகள்
பிரபஞ்சத்தின் அனைத்து கோடி நாகலோகங்களிலும் உள்ள நாகங்களுக்கு அதிபதியாக விளங்கும் ஸ்ரீ அஸ்தீக சித்தர் யோககன யாத்திரையில் வந்து வழிபடும் நித்ய பூஜை ஸ்தலங்களுள் இதுவும் ஒன்றாகும். இங்கு குபேர சந்திர நாகங்களின் நடமாட்டம் அதிகம் ஆகும்.
இவ்வாலயத்தின் அருகேயுள்ள இவ்வாலயத்திற்கு சொந்தமான தோப்பில் பெரிய புற்று ஒன்று உள்ளது. பவுர்ணமி தோறும் திரளான பக்தர்கள் குறிப்பாக பெண்கள் பக்தர்கள் இந்த புற்று கோவிலில் வழிபாடு செய்கின்றனர். இன்றும் இவ்வாலயம் நாகங்கள் உலவும் இடமாக திகழ்கின்றது.
கல்வெட்டு கூறும் வரலாற்று தகவல்கள்
இவ்வாலயத்திற்கு அருகில் செல்லும் சென்னிவாய்க்காலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நடுக்கல் ஒன்று இவ்வாலயத்தின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது. இது பல்லவர் கால நடுக்கல் ஆகும். வலது இடது புறங்களில் பல்லவர் காலத்து கல்வெட்டு காணப்படுகிறது. இந்த நடுக்கல் தௌ;ளாறெரிந்த மூன்றாம் நந்திவர்மனின் 21-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி.867); அமைக்கப்பட்டதாகும். மேலும் இவ்வாலயத்தில் உள்ள ஒரு கல்வெட்டு மூலம் மைசூர் நகரிலிருந்து ஹொய்சாலர்கள் இங்கு வந்து இவ்வாலய நிலங்களுக்கு மதகு அமைத்து கொடுத்து விவசாயம் தழைக்க உதவி செய்ததைக் கூறுகிறது. மிகப் பழமை வாய்ந்த கோவில் என்று இங்கு உள்ள கல்வெட்டுகளில் இருந்து தெரிய வருகிறது. உள்மண்டப மேல்நிலையில் உள்ள கல்வெட்டு சோழர்காலத்தவை. குறிப்பாக இராஜராஜ சோழன் காலத்தவை என கருதப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் சுமார் 1200 ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக வழிபாடு பூஜைகள் செய்யப்பட்டு வந்துள்ளன என தெரியவருகிறது.
ஆலயஅமைப்பு
சுற்றிலும் பசுமை நிறைந்த வயல்கள், தோப்புகளுக்கு நடுவில் மேற்கு நோக்கி சுமார் 5 அடி உயரத்தில் கரும்பச்சை வண்ணத்தில் மரகத மேனியாய் ஸ்ரீ சுந்தரே~;வரர் அருள்பாலிக்கிறார். ஆலய ஸ்தல விருட்சம் பொன்வில்வ மரமும், அதனருகில் மகிழமரமும் உள்ளது. மார்ச் மாத கடைசி வாரத்தில் இருந்து ஏப்ரல் முதல் வாரம் வரை ஏறக்குறைய சுமார் 15 தினங்களுக்கு மாலையில் சூரிய கதிர்கள் இறைவன் மீது நேராக படும்போது கரும்பச்சை வண்ணத்தில் இறைவன் ஜொலிப்பது கண்கொள்ளா காட்சியாகும். இவ்வாலயத்தில் காண்பிக்கப்படும் தீபஆராதணை லிங்கத்தில் பட்டு பிரதிபலித்து லிங்கததில் ஒளிப்பிழம்பாக ஜெக ஜோதியாக தெரிவதைக்காண கண் கோடி வேண்டும்.
திருவண்ணாமலை கிரிவலம் வரும் பக்தர்கள் கிரிவலம் முடிந்து இவ்வாலயத்திற்கு வந்து வழிபடுகின்றனர். பௌர்ணமி அன்று திரளான பக்தர்கள் இவ்வாலயத்திற்கு வந்து ஆலய ஸ்தலவிருட்சம், பொன்வில்வ சாரத்திற்கு அரைத்த சந்தனம் மஞ்சள் பூசி அடிப்பிரதட்சணம் செய்து பின் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரரை வலம் வந்து வணங்கி வழிபட்டு அபிஷேக தீர்த்தத்தை பெற்று செல்கின்றனர்.
பக்தர்கள் தங்கள் பணகஷ்டம் மற்றும் மனக்கஷ்டம் நீங்கி வளமுடன் வாழ பௌர்ணமியன்று இங்கு வந்து வில்வமரத்தை அடிபிரதட்சணம் செய்து ஸ்ரீ மீனாட்சி சுந்தரே~;வரரை வலம் வந்து வணங்கி செல்கின்றனர்.
இத்திருக்கோவிலின் செயல் அலுவலராக முத்துசாமி, பரம்பரை அறங்காவலராக என்.சியாமளா ஆகியோரும் செயல்பட்டு வருகின்றனர்.
இத்திருக்கோவிலின் கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்கு பிறகு 1.2.2016-ல் நடைபெற்றது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.