முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் வங்கிச் சேவைகள் முற்றிலும் பாதிப்பு

செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2017      வர்த்தகம்
Image Unavailable

சென்னை  - பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன. ''வங்கித் துறையில் மத்திய அரசின் சீர்திருத்தங்களை கைவிட வேண்டும். வங்கிப் பணிகளை தனியாருக்கு வழங்கக் கூடாது. வாராக் கடன்களை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். கடன்களை திருப்பி செலுத்தாதவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கி ஊழியர் களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்'' என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நேற்று (பிப்ரவரி 28) நாடு தழுவிய அளவில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், இந்தியா முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகளும் தமிழகத்தில் சுமார் 80 ஆயிரம் பேரும் பங்கேற்றனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து வங்கிப் பணிகளும், சேவைகளும் பாதிக்கப்பட்டது.  வங்கி ஊழியர்கள் நேற்று இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி தங்கள் கோரிக்கைகளை கோஷங்கள் வாயிலாக வெளிப்படுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்