முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கிக்கணக்கில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ. 150 கட்டணம் :பொதுமக்கள் அதிர்ச்சி

திங்கட்கிழமை, 6 மார்ச் 2017      வர்த்தகம்
Image Unavailable

மும்பை  - வங்கிக்கணக்கில் இருந்து 4 முறை இலவச பணப் பரிவர்த்தனைக்குப் பிறகு பணம் எடுத்தாலோ, டெபாசிட் செய்தாலோ ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும் என்று தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன,  நாடு முழுவதும் கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். டிஜிட்டல் பண பரிவர்த்தனையை  ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.

வங்கிகளில் இருந்தும், ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கவும் குறைந்த பட்ச உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது படிப்படியாக நீக்கப்பட்டுள்ளது. உயர்பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டு தற்போதுதான் மூச்சுவிடத் தொடங்கிய மக்களுக்கு இடியாக இறங்கியுள்ளது தனியார் வங்கிகளின்  இந்த புதிய அறிவிப்பு. இந்த அறிவிப்புக்கு பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவி்த்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்