முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 10 ரூபாய் வெளியிடப்படும்: ரிசர்வ் வங்கி

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      வர்த்தகம்
Image Unavailable

மும்பை  - கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ரூ.10 நோட்டுக்கள் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது உள்ள பத்து ரூபாய் நாணயங்கள் போலியானவை என்று மக்கள் மத்தியில் பரவலான பேச்சு சமீபகாலமாக உலாவந்தன. இதையடுத்து, ரிசர்வ் வங்கி மக்களின் சந்தேகத்தை போக்கும் விதமாக புழகத்தில் உள்ள ரூ. 10 நாணயங்கள் செல்லும் என்று அறிக்கை மூலம் தெரிவித்தது. இந்நிலையில், கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன்  புதிய ரூ. 10 வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பழைய ரூ. 10 நோட்டுக்களும் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்