எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவிலேயே கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியின் ஒரே தலம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டமங்கலம் மட்டுமே....சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் முப்பத்து மூன்றாவது திருவிளையாடல் ஜஅட்டமாசித்தி யுபதேசித்த படலம்ஸநடந்த தலம் தான் பட்டமங்கை எனப்படும் பட்டமங்கலம். இத்தலத்து ஆலமரம் மிகவும் விசேஷமானது.ஆலமரத்தைத் தல விருட்சமாகவும், மதுரை மீனாட்சிக் கோயிலைப் போல பொற்றாமரைக் குளத்தையும் கொண்டது இந்த கோயில். தட்சிணாமூர்த்தி சன்னதி கோயிலின் வெளியே தனியாக கிழக்கு நோக்கி ஆலமரத்தடியில் அமைந்துள்ளது.
தட்சிணாமூர்த்தி பட்டமங்கலத்தில் எழுந்தருளிய வரலாற்றைப் பார்ப்போம்
திருக்கையிலையில் ஒரு கல்லால மரத்தின் கீழே சிவபெருமான் அன்பும் அருளும் நிறைந்த போக தட்சிணாமூர்த்தி திருக்கோலத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகே அம்பிகை இருந்து கொண்டிருந்தார்.சுற்றிலும் நின்ற சிவகணத் தலைவர்களுக்கும் சனகர், சனத்குமாரர் முதலிய நால்வர்க்கும் நல்லுரைகள் வழங்கிக்கொண்டிருந்தார். அந்தப் புனிதமான சூழ்நிலையில் கார்த்திகைப் பெண்களாகிய யக்ஷமாதர்கள் ஜஅம்பா, துலா, நிதர்த்தினி, அபரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி ஸஅறுவரும் சிவச்சின்னங்கள் துலங்கிட அங்கு வந்தனர்.முருகனுக்குப் பாலூட்டியவர்கள் அவர்கள்.சிவபெருமானின் அருகில் பணிந்து நின்று, பின்னர் திருவடியை வணங்கினர். "கருணைக்கடலே! எங்கள் பிதாவே! நாங்கள் எளியவர்கள். எங்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசித்து அருளவேண்டும்", என்று வேண்டிக்கொண்டனர்.
சிவபெருமான் தம்முடைய இடப்பக்கத்தில் இருந்த அம்பிகையைச் சுட்டிக்காட்டினார். "உமா தேவியே பராசக்தி. மஹேஸ்வரி. அணிமா முதலிய அஷ்டமாசித்திகளும் பணிப்பெண்களாகத் தன்னைச் சுற்றிலும் இருந்து எப்போதும் குற்றேவல் புரிந்து கொண்டிருக்க வீற்றிருப்பவள். ஆகையால் நீங்கள் அம்பிகையை உங்கள் உள்ளங்களில் இருத்தித் தியானம் செய்யவேண்டும். அப்படியானால் அவள் உங்கள் வினைகளை நீக்கி, உங்களை அஷ்டமாசித்திகளுக்குப் பாத்திரர்களாக ஆக்கி,அவளே அந்த சித்திகளை உங்களுக்குக் கொடுத்தருள்வாள்", என்றார்.
பிறகு அவர் அவர்களுக்கு அந்த சித்திகளை உபதேசித்தார். ஆனால் அந்த அறுவருமே அம்பிகையைத் தியானம் புரியாது விட்டுவிட்டனர். ஆகையால் உபதேசம் அவர்களுக்கு அறவே மறந்துபோயிற்று.இதனால் கோபமுற்ற சிவபெருமான், அவர்களைப் பட்ட மங்கை என்னும் தலத்தில் இருந்த ஓர் ஆலமரத்தின் அடியில் கற்பாறைகளாகக் கிடக்கும்படி சபித்துவிட்டார். அவர்கள் சாபவிமோசனம் கேட்டனர். ஆயிரம் ஆண்டுகள் அவ்வாறு பாறைகளாகக் கிடந்தபின்னர் தாமே மதுரையிலிருந்து அங்கே வந்து அவர்களின் சாபத்தைப் போக்கி,அவர்களுக்குப் பழைய வடிவத்தையும் தந்து, அத்துடன் அஷ்டமா சித்திகளையும் விளக்கிக் காட்டுவதாகச் சொன்னார். அவ்வண்ணமே அந்த அறுவரும் பட்டமங்கையின் ஆலமரத்தடியில் பாறைகளாகக் கிடந்தனர்.
ஆயிரம் ஆண்டுகள் கழித்து மதுரை சொக்கநாதப்பெருமான் ஞானாசிரிய வடிவம்ஜதட்சிணாமூர்த்திஸ தரித்து பட்டமங்கையில் அந்த அறுவர் கிடக்கும் இடத்தில் தோன்றினார். அவர்களுடைய வினைகள் கெட்டு, சாபவிமோசனமாகுமாறு திருக்கண் பார்வையால் அருளினார். பாறை வடிவம் நீங்கப்பெற்ற அறுவரும் பக்தியுடன் சிவபெருமானின் திருவடிகளைப் பணிந்தனர்.
கார்த்திகைப் பெண்களுக்கு சிவனருள் கிடைக்கப்பெற்ற தலம்தான் பட்டமங்கலம். இங்கே ஈசன் தட்சிணாமூர்த்தி பகவானாக அருள் தரிசனம் தருகிறார். பொதுவாக, எல்லாக் கோயில்களிலும் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்திருப்பார். இத்தலத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து, இம்மை மறுமை பயனை பக்தர்களுக்கு வழங்கி வருகிறார். இவ்வாறு ஐயன் கிழக்கு நோக்கி தரிசனம் தருவதை திருவிளையாடல் புராணமும் குறிப்பிடுகிறது. இந்த தட்சிணாமூர்த்தி பகவானின் காலடியில் பிரம்மாவை அன்னபட்சி வடிவிலும், விஷ்ணுவை வராக அவதாரத்திலும் காணலாம்.
தலவிருட்சமான ஆலமரம், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஆலமரத்தடியில் தட்சிணாமூர்த்தி பகவான் சந்நதி அமைந்துள்ளது சிறப்பான அம்சமாகும். இந்த தட்சிணாமூர்த்தி பகவானை 108 முறை வலம் வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்கிறார்கள். திருமணத் தடைகளால் தவிக்கும் கன்னியர் இந்த ஆலமரத்தில் மஞ்சள் கயிறு கட்டி, வழிபட தடைகள் நீங்கி, விரைவிலேயே திருமணம் நடைபெறும். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இம்மரத்தில் தொட்டில் கட்டினால், மழலைச் செல்வம் கிடைக்கப்பெறுவார்கள். குழந்தைகள் நாக்கில் சரஸ்வதி மந்திரத்தை எழுதி, தட்சிணாமூர்த்தி பகவானை 108 முறை வலம் வரச்செய்தால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்றும் நம்பிக்கை நிலவுகிறது.
இக்கோயிலில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சந்நதிகளும் உள்ளன. உண்டியலே இல்லாத, அர்ச்சனை, தரிசனம் எதற்கும் பணம் கொடுக்க வேண்டிய அவசியம்.
இல்லாத வித்தியாசமான கோயில் இது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது இத்தலம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
23 Apr 2024இடாநகர், அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் இன்று அங்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு