எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி.ஏப்.- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணி குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ந.வெங்கடாசலம்,தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழக அரசின் உத்தரவின்படி, மாவட்டத்தில பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணி 10.04.2017 முதல் 25.05.2017 வரை நடைபெறவுள்ளது. எனவே, கணக்கெடுப்பு பணி நடைபெறும் போது குடியிருப்புகளில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவுப்பணியாளர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரை அணுகி 6 முதல் 14 வயதுடைய குழந்தைகள் அனைவரும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்களாக என்பதனை உறுதி செய்திட வேண்டும். ஒரு குழந்தை தொடர்ந்து 7 வேலை நாட்கள் பள்ளிக்கு வராமல் இருந்தால் அப்பள்ளியின் வகுப்பு ஆசிரியர்கள் அக்குழந்தையின் பெற்றோரை சந்தித்து அக்குழந்தையை பள்ளி வரவழைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கணக்கெடுப்பு பணி நடைபெறும் போது சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொண்டு நிறவனங்கள் மற்றும் சுய உதவிக்குழுக்களை இப்பணியில் ஈடுபடுத்திக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளின் கல்வி தொடர்வதற்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில் தங்கி பயிலுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங்கள், தொழிற்சாலைகள,; தேனீர் நிலையங்கள், அங்காடிகள் போன்ற பல்வேறு தொழில் சம்பந்தப்பட்ட இடங்களில் குழந்தைகள் யாரேனும் பணியமர்த்தப்பட்டுள்ளார்களா என்பதனை கண்டறிந்து தொழிலாளர் நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை, காவல்துறை ஆகிய துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீர் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு, குழந்தைகள் ஏதேனும் பணியமர்த்தப்பட்டிருந்தால் அவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு நடவடிக்ககள் மேற்கொள்ள வேண்டும்.
மாற்றுத்திறன் மாணவர்களுக்கென உள்ளடக்கிய கல்வியின் கீழ் பல்வேறு செயல்பாடுகள் மேற்கொண்டு அதன் வாயிலாக பலதரப்பட்ட இயலா குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். 0 முதல் 18 வயதிற்குட்பட்ட அனைத்து மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை கண்டறிவதோடு, ஆசிரியர்கள், பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று எந்த ஒரு மாற்றுத்திறன் கொண்ட குழந்தையும் விடுபடாமல் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், 0 முதல் 5 வயதிற்குட்பட்ட சிறப்பு தேவையுள்ள சிறப்பு மாணவர்களையும் கண்டிப்பாக கணக்கெடுத்திட வேண்டும். அவர்களுக்கு தொடக்க நிலை ஆயத்த பயிற்சி வழங்கிட ஏதுவாக அக்குழந்தை சார்ந்த சரியான தகவல்களை அறிந்திட வேண்டும். எனவே, 6 வயது முதல் 14 வயதுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், 1 வயது முதல் 18 வயதுடைய மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிந்து சிறப்பு பயிற்சி அளிப்பதற்கும் இக்கணக்கெடுப்பு பணியினை சிறப்பாக செயல்படுத்திட அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ந.வெங்கடாசலம்தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வாசு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜா மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் திருமதி.ராஜராஜேஸ்வரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொ) திருமதி.ரோஸ்லின் உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.வனஜாகிரணாப் செல்வகுமாரி அனைவருக்கும் கல்வி இயக்க உதவித்திட்ட அலுவலா ஐய்யப்பன் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
நடத்தை விதிமீறல் புகார்: வரும் 29-ம் தேதி பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புது டெல்லி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் வரும் 29-ம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட