எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், திருப்பூர் அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவப் பெருமாள் திருக்கோயில்கள் தேர் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது.
தேர்திருவிழா
திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு வட்டம், திருப்பூர் மாநகரில் அமைந்துள்ள அருள்மிகு. விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவப் பெருமாள் திருக்கோயில்கள் தேர் திருவிழா 07.06.2017 மற்றும் 08.06.2017 ஆகிய நாட்களில் நடைபெறுவதை முன்னிட்டு இந்த திருக்கோயில்களுக்கு பெருமளவில் பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மேற்படி விழாவின் போது எவ்வித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் உரிய காவல் பாதுகாப்பு வழங்குவதுடன் இவ்விழாவின் போது கோவிலுக்கு வரும் பக்தர்களிடையே கூட்ட நெரிசலை தடுக்கும் விதமாக ஓர் ஒழுங்கு வரிசை ஏற்படுத்தி தேவைக்கேற்ப காவலர்கள், ஊர்காவல் படையினர் ஆகியோரை பணியில் அமர்த்தி சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளல். மேற்படி விழாவின் போது கோயில்களுக்கு வாகனங்களில் வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த போதிய அளவில் இடவசதி செய்தல். மேலும், வாகன போக்குவரத்தினை மாற்றி அமைப்பது தொடர்பாகவும், உரிய நடவடிக்கையினை மாநகர காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டும்.
பக்தர்கள் கூடும் இடம்
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திருக்கோயில்களின் தேர் திருவிழாவின் போது கோயில்களின் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திடவும், திருக்கோயிலில் பக்தர்கள் கூடுகின்ற அனைத்து இடங்களையும் சுத்தம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளல். தேரோடும் வீதிகளை செப்பனிடுதல், தடையின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்தல், திருக்கோயில் வளாகத்தில் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகள் ஆங்காங்கே வைத்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கல் மற்றும் தண்ணீர் வசதியுடன் கூடிய தற்காலிகமாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தேவையான கழிப்பறைகள் தனித்தனியாக அமைத்தல் மற்றும் தேவையான குப்பைத்தொட்டிகள் வைக்க வேண்டும். அப்பகுதிகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதையில் ஆக்கிரமணம் ஏற்படாது, காவல் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருடன் இணைந்து கண்காணித்தல். மேலும், திருக்கோயில்களை சுற்றியுள்ள வீதிகளில் போதிய அளவு மின் விளக்குகள் மற்றும் குடிநீர் வசதிகள் மேற்கொள்ளல். திருக்கோயில்களை சுற்றியுள்ள தெருக்களை செப்பனிடவும் வேண்டும்.
சிறப்பு பேருந்துகள்
மேலும், மண்டல மேலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருப்பூர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர், திருப்பூர்(தெற்கு) திருக்கோயில்களின் தேர் திருவிழாவினை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வரும் பொதுமக்கள் கோவிலுக்கு சிரமமின்றி வந்திட ஏதுவாக, சூழ்நிலைக்கேற்ப தேவையான அளவு சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இணை இயக்குநர், (மருத்துவம் மற்றும் சுகாதாரம்) திருக்கோயில் தேர் திருவிழாவினை முன்னிட்டு, பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் பொது சுகாதாரம் பேணுதல் மற்றும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவு மருந்துகள் இருப்பு வைப்பதோடு, மருத்துவர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் பணியில் இருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளல். தேரோட்டத்தின் போது உரிய மருத்துவர்கள் குழுவினருடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று உடன் சுற்றி வரவேண்டும். தீ தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தேர் திருவிழாவினை முன்னிட்டு தீ விபத்து ஏற்படாமல் தடுத்திடும் நோக்கில் தீயணைப்பு வாகனம் இரண்டு தயார் நிலையில் தண்ணீருடன் கோயில்களுக்கு அருகில் நிறுத்த வேண்டும்.
மின்தை ஏற்படா வண்ணம்
தமிழ்நாடு மின்சார வாரியத்தினர் திருக்கோயில்கள் தேர் திருவிழாவினை முன்னிட்டு 07.06.2017 மற்றும் 08.06.2017 வரை அப்பகுதியில் மின்தடை ஏற்படா வண்ணம் உரிய ஏற்பாடுகள் செய்தல். தேரோட்டத்தின் போது ரதவீதிகளில் குறுக்காகச் செல்லும் மின்கம்பிகளை தற்காலிகமாக தளர்த்திக்கொடுக்க வேண்டும். தேரோட்டம் முடிந்ததும் மீண்டும் மின் இணைப்பு கொடுக்க வேண்டும். இத்தேர்திருவிழாவிற்கு பெருமளவில் மக்கள் கூட வாய்ப்புள்ளது என்பதால், அப்பகுதியில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்சார கம்பிகள் உறுதி தன்மையை தணிக்கை செய்து எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நிகழா வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலைத்துறையினர் தேர் திருவிழாவினை முன்னிட்டு தேரோடும் வீதிகளில் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள விளம்பர பலகைகள் அகற்றப்படவேண்டும் மற்றும் தேரோடும் சாலைகளில் உள்ள குழிகளை தார் போட்டு நிரப்பி செப்பனிட்டு மராமத்து பணிகள் செய்ய வேண்டும்.
கூட்ட நெரிசல்
இந்து சமய அறநிலைத்துறையினர் தேர் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு இடையே கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்யும் வகையில் உரிய மூங்கில் தடுப்புகளை பொதுப்பணித்துறை மற்றும் காவல் துறையினருடன் இணைந்து மேற்கொள்ளல். பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி சுவாமி தரிசனம் செய்ய உரிய அனைத்து ஏற்பாடுகள் செய்தல் மற்றும் அனைத்து பணிகளையும் கண்காணித்திட வேண்டும். திருப்பூர் சார் கலெக்டர், அனைத்து துறை சார்ந்த பணிகளையும் ஒருங்கிணைத்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு மேற்படி திருப்பூர் தெற்கு வட்டம் மற்றும் மாநகரில் அமைந்துள்ள அருள்மிகு.விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவப் பெருமாள் திருக்கோயில்கள் தேர் திருவிழாவினை சீரிய முறையில் நடத்திட உரிய ஏற்பாடுகள் செய்து தேர்திருவிழாவினை சிறப்பான முறையில் நடத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்கள்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ஹர்சினி,திருப்பூர் மாநகர பொறியாளர் ரவி, மாநகர் நல அலுவலர் மரு. பூபதி, காவல் துறை, போக்குவரத்துத்துறை, மின்சாரத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.