எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆட்டுப்பண்ணை இலாபகரமாக இருப்பது ஆடுகளின் இனவிருத்தி மற்றும் உற்பத்தித்திறனை பொறுத்துதான் அமைகின்றது என்று கூறினால் அது மிகையாகாது. இதில் முதன்மையாக திகழ்வது இனவிருத்தி. சரியான காலங்களில் இனவிருத்திக்கு உட்படுத்தப்பட்டு குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட காலங்களில் தரமான குட்டியை ஈனச் செய்வதன் மூலம் தான் லாபகரமான பண்ணை அமையும். ஆகவே சினைப்பட்டு கருவுற்ற காலங்களில் பெட்டை ஆடுகள் பராமரிப்பு மிகவும் முக்கியமானதாகும்.
சினைப்பட்டு கருவுற்ற ஆடுகளின் முதல் மூன்றில் இருந்து ஐந்து நாட்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சினைப்பட்ட ஆடுகளை நீண்ட நேரம் நேரிடையாக கடுமையான சூரிய வெளிச்சத்தில் இருக்கச் செய்வது, மேய்ச்சலுக்காக நீண்ட தூரம் நடத்தி எடுத்துச் சென்று ஆடுகளுக்கு மிகுந்த சோர்வு ஏற்படச் செய்வது, ஆடுகளை மேய்ச்சலுக்காக விரட்டி அங்கும் இங்கும் ஓட்டிச் செல்வது மற்றும் அதிக எண்ணிக்கை ஆடுகளை குறைந்த இடவசதி உள்ள பட்டிகளில் அடைத்து வைப்பது போன்ற காரணங்களினால் உடல் கூறு செயல்பாடுகளில் மாறுபாடு ஏற்பட்டு, உண்டான கரு அழிய வாய்ப்பு உள்ளது. ஆகவே சினைப்பட்டு கருவுற்ற சில தினங்களுக்கு இளம் வெயில் நேரங்களில் மேய்ச்சலுக்கு எடுத்துச் சென்று மேய்ப்பது, வெயில் நேரங்களில் குளிர்ச்சியான நிழல் கொடுத்து நல்ல போதுமான காற்றோட்டமான இடவசதி அளிப்பது, தேவையான அளவு தண்ணீர் கொடுத்து சரியான தீவனப்பராமரிப்பு கொடுப்பதன் மூலம் ஆடுகளில் ஆரம்ப காலத்தில் ஏற்படக் கூடிய கருச்சிதைவைக் கட்டுப்படுத்தலாம்.
முன்பருவ சினைக் காலம் : முன்பருவ சினைக் காலங்களாக கருதப்படுவது கருவுற்றதில் இருந்து முதல் 100 நாட்களாகும். இக்காலத்தில் ஆடுகளின் முழு தீவனத் தேவையை பூர்த்தி செய்வது மேய்ச்சல் தரையே ஆகும். ஆகவே, நல்ல தரமான மேய்ச்சல் தரையாக இருக்கும் நிலையில் எளிதில் ஜீரணிக்ககூடிய தரமான மேய்ச்சல் கிடைக்க வாய்ப்புள்ளது. இக்கால நிலையில் ஆடுகளின் பராமரிப்புக்கு தேவைப்படும் ஆட்களின் எண்ணிக்கை மற்றும் ஆடுகள் பராமரிப்பில் ஏற்படும் செலவையும் குறைத்து வருமானத்தை கூட்ட வழி வகை செய்து கொடுக்கின்றது. தேவையான சரியான தீவனம் கிடைக்கும் நிலையில் ஆடுகளின் உடல் நலம் பாதுகாக்கப்பட்டு தாயின் வயிற்றில் குட்டிகளின் வளர்ச்சியும் சிறப்பானதாக காணப்படும்.
தரமற்ற மேய்ச்சல் தரையாக இருக்கும் நிலையில் ஆடுகள் தீவனத்தேவையை பூர்த்தி செய்து கொள்ள நிலத்துடன் ஒட்டி கிடைக்கக்கூடிய புல், பூண்டு மற்றும் விஷச் செடிகளையும் சேர்த்து உண்ண தூண்டப்படுகின்றது. இத்தகைய தரமற்ற மேய்ச்சல் தரையால் ஆடுகளுக்கு தேவையான தீவன சத்துக்கள் பூர்த்தி செய்ய இயலாமல் ஆடுகளின் உடல் பராமரிப்பு பாதிப்பதுடன் குட்டிகளின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகின்றது. மிகவும் மோசமான நிலையில் மேய்ச்சல் தரை இருக்கும் காலகட்டத்தில் ஆடுகள் தீவனத் தேவையை பூர்த்தி செய்து கொள்ள விஷச் செடிகள் மற்றும் நிலத்துடன் ஒட்டி உள்ள தீவனப் புல்லை மண்ணுடன் சேர்த்து உண்பதால் ஆடுகளின் உடல்நிலையில் அயர்ச்சி மற்றும் ஒவ்வாமை ஏற்பட்டு சினை ஆடுகளில் குட்டி வீச்சும், ஆடுகளின் உடல் நலம் பாதிப்பும் ஏற்படும்.
ஆகவே தரமற்ற மேய்ச்சல் தரையின் மூலம் ஆடுகள் தீவனத் தேவையை பூர்த்தி செய்து கொள்ள இயலாத நிலையில் ஆடுகளின் உடல் பராமரிப்பு மற்றும் குட்டிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப சரியான தீவனம் கிடைக்க வழிவகை செய்து கொடுத்தல் அவசியம். இதன் மூலம் ஏற்படக்கூடிய இழப்பை தடுத்து லாபத்தை ஈட்ட வழிவகுத்துக் கொடுக்கும்.
சினை ஆடுகளின் எடை கூடும் திறன் : இனவிருத்தி செய்யப்பட்டு கருத்தரிக்கப்பட்ட ஆடுகளின் எடை மாதமாதம் கூடுதலாகி கொண்டு இருக்க வேண்டும். சராசரியாக கருதரிக்கப்பட்டஆடுகளின் உடல் எடை 5-6 கிலோ அளவிற்கு கருத்தரித்ததில் இருந்து குட்டி ஈணுதல் வரை கூடி காணப்படும். இம்மாறு எடை கூடுதல் பலவகை காரணங்கள் கொண்டு மாறுபடும். அதாவது இனம், வயது, கருவின் வளர்ச்சி, ஈற்றுநிலை, கருவின் எண்ணிக்கை, பராமரிப்பு தன்மை போன்றவற்றை கொண்டு மாறுபடும்.
இளம் வயதில் கருத்தரிக்கப்பட்ட ஆடுகளின் வளர்ச்சியும் கருவின் வளர்ச்சியும் ஒருங்கே நடைபெறும். ஆகவே, இளம் வயதில் கருத்தரிக்கப்பட்ட ஆடுகளுக்கு ஆடுகளின் உடல் பராமரிப்பிற்கும், வளர்ச்சிக்கும் மற்றும் கருவின் வளர்ச்சிக்கும் சேர்ந்து தீவனம் கொடுக்க வேண்டும். வளர்ச்சி பெற்ற ஆடுகள் கருத்தரிக்கும்போது அதனுடைய உடல் பராமரிப்பு மற்றும் குட்டிகளின் வளர்ச்சிக்கு மட்டும் தீவனம் கொடுத்து பராமரித்தால் போதுமானது. சினை ஆடுகளின் உடல்நலன் மற்றும் குட்டிகளின் வளர்ச்சியினை சினை ஆடுகளின் வெளித்தோற்றத்தை வைத்து ஓரளவிற்கு கணிப்பு செய்யலாம். அதாவது ஆடுகள் கருவுற்ற முதல் மாதத்தில் ஆடுகளை பிடித்து ஆடுகளின் விலா எலும்புகளுக்கும், தண்டுவட எலும்புகளுக்கும் இடையே கை வைத்துப் பார்க்கும்போது எலும்புகள் எளிதாக தட்டுப்படும். இந்நிலையே கருவின் வளர்ச்சி நாட்கள் கூட இருக்குமாயின் ஆடுகளின் பராமரிப்பு சரியாக இல்லையென்பதை நிரூபணம் செய்கின்றது. ஆகவே, இந்நிலை மாறுபட குட்டியின் சரியான வளர்ச்சிக்கும், ஆடுகளின் உடல் பராமரிப்பிற்கும் ஏற்ற தீவனத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். சினைப்பட்ட ஆடுகளை தரம் வாரியாகப் பிரித்து தீவனம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து ஆடுகளுக்கும் தேவையான தீவனம் சரியாக கிடைக்கும்.
பின் பருவ சினை கால பராமரிப்பு : கருவுற்ற முதல் 3ல் இருந்து 5 நாட்கள் எவ்வாறு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றதோ அதுபோலவே கர்ப்ப காலத்தின் கடைசி 30 - 45 நாட்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. கருவுற்ற ஆடுகளின் கரு வளர்ச்சி முதல் 100 - 120 நாட்கள் வரை மிகவும் மெதுவாக நடைபெறும். சினை காலத்தின் கடைசி 30 - 45 நாட்களில் 60 - 80 சதவிகித வளர்ச்சி தரிதமாக நடைபெறும். ஆகவே, இக்கால கட்டத்தில் ஆடுகளுக்கு தேவையான அளவு தரமான புரதம் நிறைந்த புல் மற்றும் பயறு வகை தீவனத்துடன் தேவைக்கு ஏற்ப கலப்பு தீவனம் 100 -1 50 கிராம் கொடுப்பதன் மூலம் ஆடுகளின் உடல் நலன் பாதுகாப்பதுடன் குட்டிகளின் வளர்ச்சியும் சீரிய முறையில் காணப்படும். சரியான பராமரிப்பு இல்லாத காலத்தில் ஆடுகள் உடல் நலன் பாதிக்கப்பட்டு குறை பிரசவ குட்டிகள் அல்லது குறைந்த பிறப்பு எடையுள்ள மெலிந்த குட்டிகள் பிறக்கும். மேலும், ஆடுகளில் பால் உற்பத்தியும் குறையும்;. இதனால் குட்டிகளின் வளர்ச்சி குன்றி, இறப்பை தழுவ வேண்டிய நிலை ஏற்படும்.
சினை ஆடுகளுக்கு புரதம் மற்றும் தாது உப்புத்தேவையை நிவர்த்தி செய்வது மிகவும் அவசியமானது. சினை ஆடுகளுக்கு இதர தீவனத்துடன் தினம் நல்ல தரமான புரதம் நிறைந்த பயறுவகை பசுந்தீவனத்தை 1 - 2 கிலோ அளவிற்கு குறைவில்லாமல் கொடுத்தல் வேண்டும்.
தண்ணீர் : ஆடுகளின் தண்ணீர் தேவையானது தீவன முறை, மேயக்கூடிய புல்லின் தன்மை மற்றும் பிறசுற்றுப்புற சீதோஷண நிலை போன்றவற்றைப் பொருத்து மாறபடும் நன்கு வளர்ந்த இளம் புற்களை தீவனமாக கொடுக்கும்போது இத்தகைய புற்களில் நீர் அளவு அதிகம் இருப்பதால் தண்ணீர் தேவை சற்று குறைந்து காணப்படும். குறைவான தண்ணீர் குடிக்கும் காலங்களில் உண்ணக்கூடிய தீவனத்தின் அளவும் குறைந்து மாறுபட்டு காணப்படும்.
ஆகவே, சினை ஆடுகளுக்கு எப்போதும் சுத்தமான தண்ணீர் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். குளங்களில் தண்ணீர் எடுத்து கொடுக்ககூடிய நிலையாக இருப்பின் பாதுகாப்புடன் குளங்களை வைப்பதுடன் அதில் உள்ள நத்தை போன்றவற்றை அழித்து அப்புறப்படுத்தி ஆடுகளுக்கு உடல் நல தீங்கு நேரா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தாது உப்பு : தாது உப்பு ஆடுகளின் வளர்ச்சி, உற்பத்தி சினை தருணத்தை வெளிபடுத்தல், கருவளர்ச்சி, பால் உற்பத்தி போன்ற அனைத்து கால நிலைகளுக்கும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. பொதுவாக இத் தாது உப்புகளின் தேவை மனிதனால் உருவாக்கப்பட்ட நல்ல நிலையில் பராமரிக்கும் மேய்ச்சல் தரையில் கிடைக்க கூடிய புல் மற்றும் பயறுவகை தீனவங்களில் இருந்தே ஒர் அளவிற்கு சரிசெய்யப்பட்டு வருகிறது. ஆனால் இயற்கையாகவே மண்ணின் தன்மை பாதிக்கப்ட்டடு தாமிரம், கோபால்ட் போன்ற தாது உப்புக்கள் கிடைக்காத நிலையில் தாது உப்புக் கலவையை ஆடுகளுக்கு கிடைக்கச் செய்வது மிகவும அவசியம்.
பொதுவாக ஆடுகளின் தாது உப்பு பற்றாக்குறையை ஆடுகளின் செயல்பாடுகளில் இருந்து ஒர் அளவிற்கு ஊகிக்க முடியும். ஆடுகளை மேய்ச்சலுக்காக திறந்துவிடும் போது மண், மணல் போன்றவற்றை நக்கி சுவைப்பது மேலும், கொட்டகையில் அடைத்து வைக்கும் போது கொட்டகை சுவர்களை நக்கி சுவைப்பது போன்ற அறிகுறிகள் மூலம் தாது உப்பு பற்றாக்குறையை வெளிபடுத்தும், இக்கால நிலையில் ஆடுகளுக்கு தாது உப்புக்கலவையை தீவனத்துடனும் சேர்த்து கொடுத்தும் அல்லது தாது உப்பு கலவை கட்டிகளை கொட்டகையின் பல இடங்களில் கட்டி தொங்கவிடுவதன் மூலமும் தாது உப்பு பற்றாக்குறையுள்ள ஆடுகள் நக்கி சுவைப்பது தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும்.
தாது உப்புக் கலவையை தீவனத் தொட்டிகளில் கொட்டி வைக்கும் போது அதிக ஈரத்தன்மை இருப்பின் தாது உப்பு கலவைத்துகள்கள் ஒன்று சேர்ந்து கட்டி போல் ஆகி ஆடுகள் சரியாக பயன்படுத்த முடியாமல் போகலாம். ஆகவே, முடிந்த அளவிற்கு தாது உப்புக் கலவையை தீவனத்துடன் சேர்த்து கலந்து அனைத்து ஆடுகளுக்கும் கிடைக்கும்படி வைப்பது சிறந்தது. ஆகவே, சினை ஆடுகளின் உடல் பராமரிப்பிற்கும் குட்டிகளின் சரியான வளர்ச்சிக்கும் பால் உற்பத்திக்கும் குட்டி போட்ட ஆடுகளின் உடல்நலன் பாதுகாப்பிற்கும் தாது உப்புக்களை சரியான அளவு கிடைக்க வழிவகை செய்து கொடுக்கவேண்டும்.
நோய்த் தாக்கம் : ஆடுகளுக்கும் நுண்ணுயிரி மற்றும் நச்சுயிரி தாக்குதல்களினால் பல வகையான நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றன. இதனால் ஆடுகளின் வளர்ச்சித்திறன் பாதிப்படைவதுடன் சினை ஆடுகளின் குட்டி வீச்சு, குட்டிகள் பிறக்குமாயின் மெலிந்த குட்டிகள், குட்டி ஈன்ற ஆடுகளின் பால் இல்லாமை போன்றவைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆகவே, ஆடுகளை தாக்ககூடிய நோய்களில் இருந்து காக்க உரிய தடுப்பூசி செலுத்தி வரும் நோயை கட்டுப்படுத்துவதன் மூலம் உற்பத்தி நிலையை மேன்மை அடைய செய்து தரமான குட்டிகளை பெறலாம்.
ஒட்டுண்ணி தாக்கம் : ஒட்டுண்ணி தாக்குதல் சினை ஆடுகளில் ஏற்படும்போது இரத்த சோகை உண்டாகுதல் குட்டி வீச்சு, பால் உற்பத்தி குறைதல் போன்றவற்றை ஏற்படுவதுடன் சினை ஆடுகளின் உடல் நலன் பாதிக்கப்பட்டு இறப்பையும் உண்டாக்க காரண கர்த்தாவாக திகழ்கின்றது. ஆகவே சரியான மருந்தினை கொண்டு உரிய காலங்களில் குடல் நீக்கம் செய்தல் மூலம் ஆடுகளின் ஏற்படும் கருச்சிதைவு, இரத்தச் சோகை போன்றவற்றைக் கட்டுப்படுத்தி தரமான குட்டிகளை ஆடுகளில் இருந்து பெறமுடியும்.
சினை ஆடுகளின் இதர பராமரிப்பு : சினைப்பட்ட ஆடுகளில் இருந்து கிடாய்களை பிரித்து தனித்து வைக்க வேண்டும. இதர கால்நடைகளுடன் ஆடுகளை சேர்த்து மேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். சில சமயங்களில் மேய்ச்சல் போட்டியின் காரணமாக இடிபட வாய்ப்பு உள்ளது. இதனால் கருசிதைவு, ஆடுகளில் இறப்பு போன்றவைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோலவே நாய் போன்ற விலங்கினத்தின் தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பது அவசியம். மேய்ச்சல் பகுதியில் கட்டி ஈனும் போது நாய்களினால் குட்டி மற்றும் குட்டி ஈன்ற ஆடுகளுக்கு தொந்திரவு ஏற்பட வாய்ப்பு அதிகம். ஆகவே, கவனத்துடன் இருப்பது நலம்.
சினை ஆடுகளை குளிப்பாட்டும் போது கவனத்துடன் கையாள வேண்டும், தவறுதலாக அல்லது ஆடுகளை மிகவும் விரட்டி பிடித்தாலும் சினை ஆடுகளின் உடல்நலன் பாதிப்பு கருசிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. மேற்கூறிய முறைகளை சினை ஆடுகள் பராமரிப்பில் கடைப்பிடிக்கும் நிலையில் ஆரோக்கியமான நிலையில் ஆடுகளை வைத்து நல்ல தரமான குட்டிகளையும் பெற இயலும் என்பது நிச்சயம்.
தொடர்புக்கு: கால்நடை மருத்துவத் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு – 614625, தஞ்சாவூர் மாவட்டம்.
தொகுப்பு: மு.வீரசெல்வம், கோ.ஜெயலட்சுமி, சோ.யோகேஷ்பிரியா, சு.கிருஷ்ணகுமார் மற்றும் ப.செல்வராஜ்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.