முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடை அமைப்பு சார்பில் ரூ. 10 லட்சம் செலவில் கீழ்பவானி வாய்க்காலைத் தூர்வாரும் பணி தொடக்கம்

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      ஈரோடு

 

ஈரோடை அமைப்பு சார்பில் ரூ. 10 லட்சம் செலவில் கீழ்பவானி பிரதான வாய்க்காலைத் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. பவானிசாகர் அணையின் பிரதான வாய்க்காலான கீழ்பவானி வாய்க்கால் 200 கி.மீ. நீளம் கொண்டது. இதன் மூலமாக ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த வாய்க்கால் வெட்டப்பட்டு கடந்த 61 ஆண்டுகள் ஆகியும் ஒருமுறை கூட தூர்வாரப்படவில்லை. இதனால் அதில் பல இடங்களில் வண்டல் மண்ணும், மண் கப்பிகளும் சுமார் ஒரு மீட்டர் முதல் 2 மீட்டர் உயரம் வரை படிந்துள்ளன

ஈரோடை அமைப்பு

 

.இதனால், வாய்க்காலின் கடைகோடி விவசாயிகளுக்கு குறிப்பிட்ட நாள்களுக்குள் தண்ணீர் சென்று சேர்வதில்லை. இப்பிரச்னையைத் தீர்க்கும் வகையில் ஈரோடை அமைப்பு, பொதுப்பணித் துறை மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கீழ்பவானி வாய்க்காலைத் தூர்வார முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, வாய்க்காலைத் தூர்வாரும் பணிக்கான தொடக்க விழா ஈரோடு அருகே உள்ள அறச்சலூரில் நடைபெற்றது. விழாவுக்கு ஈரோடை அமைப்பின் நிறுவனர் மருத்துவர் கே.சுதாகர் தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பெரியசாமி, கீழ்பவானி முறைநீர்ப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் காசியண்ணன், மருத்துவர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.வி.பி. பள்ளித் தாளாளர் எல்.எம்.ராமகிருஷ்ணன் பணியைத் தொடக்கிவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து