முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 53 பயனாளிகளுக்கு ரூ.64,100 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      நாமக்கல்
Image Unavailable

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (19.06.2017) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார். இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை வேண்டியும், குடிசை மாற்று வாரியத்தில் வீடு வேண்டியும், புதிய குடும்ப அட்;டைகள் வேண்டியும், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மொத்தம் 478 மனுக்கள் வரப்பெற்றன.

பணிநியமன ஆணை

 

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 10 நபர்களுக்கு தலா ரூ.3,260 வீதம் ரூ.32,600 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களையும், வருவாய்த்துறையின் சார்பில் இராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்த (லேட்) பச்சமுத்து என்பவர் பணியிடையில் மரணமடைந்ததை முன்னிட்டு அவரது வாரிசுதாரான அவரது மனைவி எம்.சாந்தி என்பவருக்கு கருணை அடிப்படையில் இராசிபுரம் வட்டம், வெண்ணந்தூர் குறுவட்டம், வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் காலியாக இருந்த அலுவலக உதவியாளர் பணியிடத்தில் அலுவலக உதவியாளர் பணிநியமனம் வழங்கப்பட்டு, அதற்காக பணிநியமன ஆணையினையும், கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்.

அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார். மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.4,500 வீதம் ரூ.31,500 மதிப்பிலான மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரங்களையும், 35 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டைகளையும் என மொத்தம் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 53 பயனாளிகளுக்கு ரூ.64,100 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டைகள், பணி நியமன ஆணை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) நா.பாலச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கே.எஸ்.முரளிகிருஷ்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அசோகன், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் சுகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்ரமணி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து