முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த பொருட்காட்சியில் ரூ.9,57,310 நுழைவுக்கட்டணமாக பெறப்பட்டுள்ளது கலெக்டர் டி.பி.ராஜேஷ் தகவல்

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      கடலூர்

தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் கடலூர் மாவட்டத்தில் முதன்முறையாக 27-க்கும் மேற்பட்ட அரசுத்துறை அரங்குகள், பல்வேறு தனியார் அரங்குகள் மற்றும்  பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய மாபெரும் அரசுப் பொருட்காட்சி, கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இப்பொருட்காட்சி 04.05.2017 முதல் 18.06.2017 வரை சிறப்பாக நடைபெற்றது.கடலூர் மாவட்டத்தில் அரசுப் பொருட்காட்சி துவங்கப்பட்ட 04.05.2017 முதல் 18.06.2017 வரை 45 நாட்களில் மொத்தம் 69,757 நபர்கள் பார்வையிட்டுள்ளனர். அரசுப் பொருட்காட்சி துவங்கப்பட்ட 45 நாட்களில் மொத்தம் ரூ.9,57,310- நுழைவுக்கட்டணமாகப் பெறப்பட்டுள்ளது.

 பல்வேறு அம்சங்கள்

இப்பொருட்காட்சியானது 04.05.2017 முதல் 18.06.2017 வரை நாள்தோறும் மாலை 4.00 முதல் இரவு 10.00 மணி வரை தொடர்ந்து 45 நாட்கள் நடைபெற்றது. இப்பொருட்காட்சிக்கு நுழைவுக்கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15-ம், சிறியவர்களுக்கு ரூ.10-ம் வசூலிக்கப்பட்டது. இப்பொருட்காட்சியினை காண வரும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் பெரியோர், சிறியோருக்கான ஜெயின்ட் வீல், டோரா டோரா, இரயில், சறுக்கல், போட்டிங், இராட்டினங்கள், முப்பரிமான அனிமல் வோல்டு காட்சி உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றிருந்தன. மேலும் இப்பொருட்காட்சியில் பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் நாள்தோறும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேற்கண்ட தகவலை கலெக்டர் டி.பி.ராஜேஷ்,   தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து