முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. பா.ஜ.க எம்.பி, எம்.எல்.ஏ.க்களுடன் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் சந்திப்பு: முதல்வர் யோகியை சந்தித்து ஆதரவு கோரினார்

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ : உ.பி. பா.ஜ.க எம்.பி, எம்.எல்.ஏ.க்களுடன்  ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்   சந்தித்தார்.அப்போது  குடியரசுத் தலைவர் தேர்தலில்  அவர் ஆதரவு கோரினார் .முதல்வர் யோகியையும் சந்தித்து அவர் ஆதரவு கோரினார்.

குடியரசு தலைவர் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்கக் கோரி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள, பாஜக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட் டுள்ள ராம்நாத் கோவிந்த் (71), திட்ட மிட்டுள்ளார். இதன் தொடக்கமாக, தனது சொந்த மாநிலமான உத்தர பிரதேசத்துக்கு சென்றார்.

முதல்வர் யோகியை சந்தித்தார் ராம்நாத்

அங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இல்லத்துக்குச் சென்ற ராம்நாத், மத்திய அமைச்சர்கள் உமா பாரதி, நிதின் கட்கரி, மாநில துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். அப்போது பாஜக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களும் இருந்தனர்.

ஆதரவு தெரிவித்தார் முதல்வர் யோகி

அப்போது முதல்வர் ஆதித் யநாத் பேசும்போது, “உத்தர பிரதேசத்திலிருந்து முதல் முறையாக குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் போட்டியிடுகிறார். பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவின் ஆதரவு பெற்ற அவருக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்” என்றார்.

62 சதவீத வாக்குகள் ஆதரவு

இதையடுத்து நாட்டின் பிற மாநிலங்களுக்கு சென்று ராம்நாத் ஆதரவு கோர உள்ளதாக, குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக அவரது பிரதிநிதியாக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள பூபேந்தர் யாதவ் தெரிவித்தார்.

ராம்நாத் கோவிந்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமார் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். எனினும், ராம்நாத் கோவிந்துக்கு 62 சதவீத வாக்குகள் ஆதரவு இருப்பதால் அவர் வெற்றி பெறுவது உறுதி என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து