முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் தார் தளங்களை கான்கிரீட் தளங்களாக மாற்றி அமைக்கும் பணி: மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ் துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      சேலம்
Image Unavailable

 

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 24 ல் உள்ள பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். மத்திய பேருந்து நிலையத்தில் பராமரிப்பு மற்றும் இடைவெளி நிரப்பும் நிதியின் கீழ் ரூ. 5.00 கோடி மதிப்பீட்டில் தார் தளங்களை கான்கிரீட் தளங்களாக மாற்றி அமைக்கும் பணிகளை 26.6.2017 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் வி. பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.வெங்கடாஜலம், ஏ.பி. சக்திவேல் ஆகியோர் முன்னிலையில் தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ் பணிகளை துவக்கி வைத்தார்.

கான்கிரீட் தளங்கள்

பின்னர் ஆணையாளர் தெரிவித்ததாவது : -

பாரத ரத்னா டாக்டர்.எம்.ஜி.ஆர். மத்திய பேருந்து நிலையத்திற்கு நாளொன்றுக்கு சுமார் 1.50 இலட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயண நிமித்தமாக வந்து செல்கின்றனர். இப்பேருந்து நிலையத்தில் மொத்தம் உள்ள 4 தளங்களில் 80 பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதிகள் உள்ளது. இப்பேருந்து நிலைய வளாகத்தினுள் உள்ள சாலைகள் அனைத்தும் தார்சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இந்த சாலைகளில் உள்ள தார் தளங்களில் ஏற்படும் பாதிப்புகளினால் பேருந்துகள் இயக்குவதற்கு சிரமம் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு , மேற்படி தார்தளங்களை உறுதியான கான்கிரீட் தளங்களாக மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனடிப்படையில் பராமரிப்பு மற்றும் இடைவெளி நிரப்பும் நிதி 2016 – 17 ன் கீழ் ரூ 5.00 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அனைத்து தார் தளங்களும் கான்கிரீட் தளங்களாக மாற்றப்படும் என ஆணையாளர்

இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் அ.அசோகன், ஜி.காமராஜ், ஆர்.ரவி, உதவி ஆணையாளர் வி.திலகா , உதவி பொறியாளர் ஜி. சுமதி, சுகாதார அலுவலர்கள் /ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து