எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வான்கோழிகள் இறைச்சிக்காக வளர்க்கப்படும் பறவையாகும். வான்கோழி இறைச்சியானது மிருதுவாகவும், சுவை மிக்கதாகவும் உள்ளதால் மக்கள் இதைப் பெருமளவில் விரும்பி உட்கொள்ளுகின்றனர். தமிழ்நாட்டில் வான்கோழி இறைச்சியின் தேவையும் அதற்கான உற்பத்தியும் நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகின்றன.
இருப்பினும் தேவைக்கேற்ப வான்கோழி இறைச்சி மிகவும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மேலும் வான்கோழிகள் விரைவில் வளர்ச்சி பெறுவதாலும், குறைந்த தீவனம் உட்கொண்டு அதிக எடை கூடுவதாலும் இது மிகவும் இலாபகரமான தொழிலாக விளங்குகிறது. தற்போது நமது நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் வான்கோழிகள் கிராமப்பகுதிகளில் வீட்டின் புறக்கடைகளில் ஆங்காங்கே வளர்க்கப்படுகின்றன. வான்கோழிகளை பண்ணை முறைகளிலும் வளர்க்கலாம்.
வான்கோழி இனங்கள் : வான்கோழியின் தாயகம் தென் அமெரிக்காவாகும். 15ம் நூற்றாண்டுக்கு பிறகு ஐரோப்பா மற்றும் மற்ற நாடுகளில் வளர்க்க தொடங்கினர். வான்கோழிகள் பெருமளவில் வளர்க்கப்படுவது ஆஸ்திரேலியாவாகும். வான்கோழிகளை பலவகை இனங்கள் என்று சொல்லாமல் வகைகள் என்றே குறிப்பிடுகிறார்கள். அவற்றில் குறிப்பிடத்தக்க வகையான வான்கோழிகள் உண்டு.
1. ஹாலந்து வெள்ளை
2. பார்பான் சிவப்பு
3. நார்கான்செட்
4. பிரான்ஸ்
5. பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை
6. ஸ்லேட்
7. நார்போக்
வான்கோழி வளர்ப்பின் நன்மைகள்
• வான்கோழிகள் மற்ற கோழி இனங்களை காட்டிலும் மிக விரைவாக வளர்ச்சி பெறும்.
• குறைந்த தீவனம் உட்கொண்டு குறைந்த நாட்களில் அதிக எடை கூடும்.
• வான்கோழி இறைச்சியானது மிருதுவாகவும், சுவைமிக்கதாகவும் இருக்கும்.
• வான்கோழி முட்டைகள் சுமார் 65 முதல் 70 கிராம் வரை எடை கொண்டதாக இருக்கும்.
• ஒரு வான்கோழி ஒவ்வொரு மாதமும் 10 முதல் 12 முட்டைகள் வரை இடும்.
• வான்கோழிகளை வீட்டின் புறக்கடைகளிலும் வளர்க்கலாம், பண்ணை முறைகளிலும் வளர்க்கலாம்.
வான்கோழி வளர்ப்பு முறை : அகன்ற மார்புடைய பிரான்ஸ், அகன்ற மார்புடைய வெள்ளை மற்றும் பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை போன்ற இனங்கள் நமது பகுதிகளுக்கு மிகவும் ஏற்ற வகைகளாக கருதப்படுகின்றன. வான்கோழிகளை கீழ்கண்ட முறைகளில் வளர்க்கலாம்.
1. ஆழ்கூள முறை
2. புறக்கடை வளர்ப்பு
3. மேய்ச்சலுடன் கொட்டகை வளர்ப்பு
ஆழ்கூள முறை : கொட்டகைகள் நல்ல காற்றோட்டமான இடங்களில் அமைக்கப்பட்டு தரை சிமெண்டால் அமைக்கப்படவேண்டும். ஆழ்கூள முறையில் காகிதம், மரத்தூள், நிலக்கடலை தோல், நெல் உமி போன்றவைகளை சிமெண்ட் தரையின் 5 முதல் 6 அங்குல உயரத்திற்கு பரப்ப வேண்டும். ஒரு ஆண் வான்கோழிக்கு சுமார் 5 சதுர அடி இடவசதியும் ஒரு பெண் வான்கோழிக்கு 4 சதுர அடி இடவசதியும் தேவைப்படும். வளர்ந்த வான்கோழிகளுக்கு தனி கொட்டகையும், குஞ்சுகள் வளர்ப்பதற்கு தனிகொட்டகையும் அமைத்திட வேண்டும். இம்முறையில் குறைந்தது 200 வான்கோழிகள் கொண்ட பண்ணையாக இருந்தால் மிகுந்த இலாபமுடையதாக அமையும்.
புறக்கடை வளர்ப்பு : இம்முறையில் வான்கோழிகளை பகல் வேளைகளில் வீட்டுப்புற தோட்டத்தில் அல்லது வயல்வெளிகளில் மேயவிட்டு பிற இரவு வேளைகளில் மட்டும் கொட்டகைகளில் அல்லது கூண்டுகளில் அடைத்து வளர்க்கலாம். வீடுகளில் இருக்கும் தானியங்கள், சமையல் அறை கழிவுகள், எஞ்சிய சமைத்த உணவு போன்றவை வான்கோழிகளுக்கு உணவாக அமைகின்றன. மேலும் தோட்டங்களில் உள்ள கீரைகள், பூச்சிகள், வண்டுகள், களைகளும் போதுமான அளவு கிடைக்கின்றன.
இனவிருத்தி பராமரிப்பு : வான்கோழி பண்ணைகளில் இனவிருத்திக்காக தேவைப்படும் ஆண் மற்றும் பெண் கோழிகளை தேர்வு செய்வதில் மிகவும் கவனம் தேவை. இனவிருத்திக்காக தேர்வு செய்யப்படும் ஆண் வான்கோழிகள் துரிதமாக வளர கூடியதாகவும், அகன்ற மார்புடனும் இருக்கவேண்டும். பொதுவாக 12 வார வயதிற்குள் அனைத்து ஆண் வான்கோழிகளை விடவும் அதிக எடை அடையக்கூடிய திறன் இருக்க வேண்டும். இறகுகள் வேகமாக வளரக்கூடிய தன்மையுடனும், வால் இறகுகள் நீளமாகவும், 16 முதல் 20 வார வயது அடையும் சமயத்தில் தோகை விரித்து ஆடவும் வேண்டும்.
அதே போல் தேர்ந்து எடுக்கப்படும் பெண் வான்கோழிகள் 12 வார வயது அடையும் சமயத்தில் 2 முதல் 2.5 கிலோ எடை மட்டுமே அடைய வேண்டும். மேலும் பெண் வான்கோழிகள் அதிக எண்ணிக்கையில் தொடர்ந்து முட்டையிடும் திறன் உடையதாகவும், அடைக்காக்கும் தன்மையில்லாமலும், வேகமாக வளரும் திறன் கொண்டதாகவும் இருக்கவேண்டும். இனவிருத்திக்காக வான்கோழிகளை அவற்றின் தாய் தந்தையாரின் பாரம்பரியம் அறிந்து வாங்கி வளர்ப்பது நல்லது.
வீட்டின் புறக்கடைகளில் வளர்க்கப்படும் வான்கோழிகளை நான்கு பெண்கோழிகளுக்கு ஒரு ஆண் கோழி வீதம் சேர்;த்துவிடவேண்டும். பொதுவாக வான்கோழிகளை 6 முதல் 7 மாத வயதில் முட்டையிட தொடங்கிவிடுகின்றன. வான்கோழி முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொறிக்கும் தன்மையுடையது. இதனுடைய அடைக்காலம் 28 நாட்களாகும். வான்கோழிகள் முட்டையிடும் போது முட்டைகளை தினமும் சேகரித்து சேமித்து வைக்க வேண்டும்.
வான்கோழிகள் அடையிருக்கும் இடத்தில் தினமும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும். முட்டையிடும் பருவத்தில் அடைபடுக்கவிடாமல் முட்டையிடவைத்தால் ஆண்டு ஒன்றிக்கு 80 முதல் 100 முட்டைகள் இடும். வான்கோழி முட்டைகளை நாட்டுகோழிகளிலும் அடைவைத்து பொறிக்கலாம். ஒரு கோழியில் சுமார் 8 முதல் 10 வான்கோழி முட்டைகளை வைக்கலாம். முட்டைகளை இயந்திரங்களில் வைத்தும் பொறிக்கலாம். ஒரே சமயத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான முட்டைகளை அடைக்காப்பானில் (ஐnஉரடியவழச) வைத்து 29 நாட்களில் குஞ்சுகளை வெளியே எடுத்துவிடலாம்.
வான்கோழி குஞ்சுகள் பராமரிப்பு : கோழிகள் மூலமாக குஞ்சுகள் பொறித்து இருந்தால் தாய் கோழிகளே தம் குஞ்சுகளுக்கு தீவனத்தை பொறுக்கி எடுத்துக் கொள்வதை கற்றுக்கொடுத்துவிடும். இயந்திரங்களின் மூலம் குஞ்சுகள் பொறிக்கும் போது குஞ்சுகளை அடைக்காப்பான் அமைத்து பாராமரிக்க வேண்டும்.
அடைக்காப்பானை ஆங்கிலத்தில் புரூடர் (டீசழழனநச) என்று அழைக்கிறோம். இளம் குஞ்சுகள் பொறித்திலிருந்து 3 வார வயதுவரை அதன் உடல் வெப்பத்தை சீராக பாராமரிக்க ஏதுவாக செயற்கை வெப்பம் விளக்குகள் மூலமாக அளிக்கப்படவேண்டும்.
இதற்காக 1½ அடி உயரத்திற்கு அட்டைகளினாலோ அல்லது துருபிடிக்காத தகட்டினாலோ 6 அடி விட்டத்திற்கு மட்டமாக அமைக்கப்பட வேண்டும். 6 அடி அடைக்காப்பானின் நடுவில் 2 அடி உயரத்தில் 100 வால்ட் மின் விளக்குகள் பொறுத்தி எரியவிடவேண்டும். தரையில் சிறிதளவு நெல் அல்லது கடலை உமியை பரப்பிவிட்டு அதன் மேல் செய்தித்தாள்களை பரப்பி அதன் மேல் குஞ்சுகளை விடலாம். தினமும் செய்தித்தாள்கள் அசுத்தமாகிவிடுவதால் தினமும் தாள்களை மாற்றவேண்டும்.
திறந்த தட்டுகளில் நான்கு இடங்களில் தீவனம் வைத்திடவேண்டும். தண்ணீர் குவளைகளில் சுடவைத்து ஆரவைத்த குடிநீரை வைக்க வேண்டும். 6 அடி விட்டம் உள்ள அடைக்காப்பானுள் 100 லிருந்து 150 குஞ்சுகள் வரை வளர்க்கலாம். குஞ்சுகளுக்கு நாளொன்றுக்கு 5 அல்லது 6 முறை சிறிது சிறிதாக தீவனம் அளிக்கப்பட வேண்டும்.
அடிக்கடி தண்ணீரை மாற்றி வைக்க வேண்டும். 10 நாட்களுக்கு பிறகு அடைக்காப்பானை பிரித்துவிட்டு பெரிய இடத்தில் ஒரு குஞ்சுக்கு 0.5 சதுர அடி வீதம் இடவசதி அளித்து வளர்க்கலாம். வான்கோழி குஞ்சுகள் 3 வயதிலிருந்து சுமார் 5 வார வயதை அடையும் வரை படிப்படியாக இடவசதியை அதிகரித்து 1 சதுர அடி இடவசதியும் அதற்கு பின் 8 வார வயது அடையும் சமயத்தில் 2 சதுர அடியும் 12 வார வயது அடையும் சமயத்தில் 3 சதுர அடியும் கொடுக்க வேண்டும். புறக்கடைகளில் வளர்க்கும் வான்கோழிகளுக்கு இரவில் தங்குவதற்கு வயதிற்குயேற்றார்போல் 1 முதல் 3 சதுர அடி இடவசதியளிக்கலாம்.
தீவன பராமரிப்பு : இளகுஞ்சுகளை வளர்ப்பதற்கு நல்ல ஊட்டச்சத்துள்ள தீவனம் அளிக்கப்பட வேண்டும். வான்கோழிகள், இறைச்சி கோழி வளர்வதைவிட துரிதமாக வளர்வதால் அவைகளுக்கு குஞ்சுபொறித்த நாளிலிருந்து 3 வார வயது ஆகும் வரை தீவனத்தில் புரதம் 28 சதவிகிதமும், எரிசக்தி 2800 கிலோ கலோரி (1 கிலோவிற்கு) அடங்கிய தீவனம் அளிக்கப்படவேண்டும். 4 முதல் 8 வாரங்களுக்கு தீவனத்தில் 26 சதவிகிதம் புரதமும் 2900 கிலோ கலோரி (1 கிலோவிற்கு) எரிசக்தி இருக்கும் படி தீவனம் அளிக்கவேண்டும்.
வளரும் பருவத்தில் வான்கோழிகளுக்கு புரத்தின் தேவை படிப்படியாக குறைகிறது. அதே சமயத்தில் எரிசக்தியின் தேவை படிப்படியாக அதிகரிக்கிறது. எனவே 8 முதல் 14 வாரங்களில் வளரும் வான்கோழிகளின் தீவனத்தில் 25 சதவிகிதம் புரதமும், 3000 கிலோ கலோரி (1 கிலோவிற்கு) எரிசக்தியும் இருக்கவேண்டும். முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகளின் (14 முதல் 28 வாரம்) தீவனத்தில் 14 சதவிகிதம் புரதமும், 3200 கிலோ கலோரி (1 கிலோவிற்கு) எரிசக்தியும் அளிக்கப்பட வேண்டும். சுமார் 30 வார வயதில் வான்கோழிகள் முட்டையிட ஆராம்பிக்கின்றன.
முட்டையிடும் கோழிகளுக்கு 14 சதவிகிதம் புரதமும் 2900 கிலோ கலோரி (1 கிலோவிற்கு) எரிசக்தியும் அடங்கிய தீவனம் அளிக்கப்பட வேண்டும். முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகளுக்கும் முட்டையிடும் கோழிகளுக்கும் கிளிஞ்சல் தூள் 1 சதவிகிதம் சேர்த்து கொடுக்கவேண்டும். வான்கோழிகளின் தீவனத்தில் வைட்டமின் ஏ, பி2, டி3, கே கலவை 100 கிலோவில் சுமார் 50 கிராம் கலக்கப்பட வேண்டும்.
இத்துடன் கால்சியம், பாஸ்பரஸ் கலவை சேர்க்கப்பட வேண்டும். தினமும் பசுங்கீரைகளும், புற்களும் சிறுதுண்டுகளாக அளிக்கப்படவேண்டும். வான்கோழிகளின் தீவனம் அளித்தலில் வான்கோழி எடை, முட்டை உற்பத்தி மற்றும் மொத்த செலவு ஆகியவற்றை மனதில் கொண்டு அதற்கு தகுந்தாற்போல் தீவனம் தயாரித்து அளிக்கவேண்டும்.
கால்நடை வளர்ப்போர்கள் மேற்கூறிய இனவிருத்தி மற்றும் தீவன முறைகளை கையாண்டு வான்கோழி வளர்ப்பில் சிறந்த வருமானம் ஈட்ட வேண்டுகிறோம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகலாம்.
தொடர்புக்கு: கால்நடை மருத்தவத் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு – 614 625
தொகுப்பு: மரு.மு.வீரசெல்வம், மரு.சோ.யோகேஷ்பிரியா, மரு.கோ.ஜெயலட்சுமி, மரு.சு.கிருஷ்ணகுமார், மரு.ம.சிவகுமார், மரு.மா.வெங்கடேசன் மற்றும் முனைவர் ப. செல்வராஜ்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.