முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதித்யா நாத், ராகுல் காந்தி இன்று கோரக்பூர் வருகிறார்கள்

வெள்ளிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2017      அரசியல்
Image Unavailable

லக்னோ, பிரச்சினைக்குரிய கோரக்பூர் நகருக்கு இன்று முதல்வர் யோகி ஆதித்யா நாத் மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வருகிறார்கள்.

உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளில் 70 பேர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் ஆக்ஸிஜன் பற்றாக்குறைதான் என்று கூறப்படுகிறது.

குழந்தைகள் மரணமடைந்த கோரக்பூர் அரசு மருத்துவமனைக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று வருகிறார் என்று மாவட்ட காங்கிரஸ் தலைவர் சயீத் சமால் தெரிவித்தார். கோரக்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்தவமனையில் மூளைக்காய்ச்சல் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதில் நேற்றுமுன்தினம் வரை 71 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறைதான் காரணம் என்று கூறப்படுவதை அரசு தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கோரக்பூரில் சுகாதார திட்டத்தை தொடங்கிவைப்பதற்காக முதல்வர் யோகி ஆதித்யா நாத் இன்று வருகிறார் என்று பிராந்திய பாரதிய ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர் சத்தியேந்திரா சின்ஹா தெரிவித்தார். மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் யோகி ஆதித்யா நாத் பார்வையிடுகிறார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து