முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் சொன்னபடி சசிகலா கேட்டிருந்தால் குளுகுளு அறையில் இருந்திருப்பார் - டி.ராஜேந்தர் உருக்கம்

புதன்கிழமை, 13 செப்டம்பர் 2017      அரசியல்
Image Unavailable

சென்னை, நான் சொன்னபடி சசிகலா கேட்டிருந்தால், அவர் இருந்திருப்பார் குளுகுளு அறையிலே.., இன்று இருந்திருக்க மாட்டார் சிறையிலே.. என திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர் குறிப்பிட்டுள்ளார்.

நான் சொன்னபடி சசிகலா கேட்டிருந்தால், அவர் இருந்திருப்பார் குளுகுளு அறையிலே.., இன்று இருந்திருக்க மாட்டார் சிறையிலே.. என திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இயக்குநர் டி.ராஜேந்தர், அரியலூர் மாணவி அனிதாவின் மறைவையடுத்து விஸ்வரூபம் எடுத்துள்ள நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டங்கள், அரசியலில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் குதிப்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு தனது வழக்கமான பாணியில் பதில் அளித்தார்.

அப்போது, அரசியலில் கலைஞர், ஜெயலலிதாவோடு இருந்த நெருக்கம் தொடர்பாக குறிப்பிட்ட அவர், நான் சொன்னபடி சசிகலா கேட்டிருந்தால், அவர் இருந்திருப்பார் குளுகுளு அறையிலே.., இன்று இருந்திருக்க மாட்டார் சிறையிலே.. என்று குறிப்பிட்டார். நான் அப்பவே சொன்னேன் அந்த அம்மாவுக்கு. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலா ஆனபோது அதை நான் எதிர்க்கவில்லை. அது அவர்கள் கட்சி பிரச்சனை. ஆனால், அவர் முதல் அமைச்சராக முயற்சி செய்தபோது நான் வேண்டாம் என்றேன். இது ஒரு சூழ்ச்சி. உங்களுக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சி, நீங்கள் அடைந்து விடுவீர்கள் வீழ்ச்சி என்று நான் கூறினேன்.

சசிகலா தமிழ்நாட்டின் முதல்வராக முடியாது என்று அனைத்து மதத்தினரும் பிரார்த்தனை செய்கிறார்கள் என நான் முன்னர் கூறினேன். என்னுடைய கணிப்பு என்ன ஜாதகமா? என்று சிலர் கேட்டனர். நான் சொன்னது ஜாதகமல்ல. சசிகலாவுக்கு சூழ்நிலை இல்லை சாதகம், அதனால் விளையும் பாதகம் என்று நான் முட்டுக்காட்டை போட்டேன். காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலின்போது ஜெயலலிதாவால் மதிக்கப்பட்டு அழைக்கப்பட்டு பிரசாரத்துக்கு சென்றவன் நான். அதன்பிறகு, புதுக்கோட்டை தேர்தலின்போதும் தி.மு.க. நிற்காமல் தே.மு.தி.க.வும், அ.தி.மு.க.வும் போடியிட்டபோதும் நான் பிரசாரத்துக்கு சென்றேன்.

ஜெயலலிதாவுடனும், சசிகலாவுடனும் பல காலகட்டத்தில் நட்போடு, பல விஷயத்தில் உறுதுணையாக, பக்கபலமாக, கலந்தாலோசனை செய்யும் இடத்தில் இருந்த நான், நீங்கள் கட்சியின் பொதுச்செயலாளரானதோடு இருந்து விடுங்கள். அதற்குமேல் நீங்கள் முதலமைச்சர் ஆகாதீர்கள் என நான் சொன்னபடி சசிகலா கேட்டிருந்தால், அவர் இருந்திருப்பார் குளுகுளு அறையிலே.., இன்று இருந்திருக்க மாட்டார் சிறையிலே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து