முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேகாக் கொல்லைகிராமத்தில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நீதிபதி கணேஷ் பங்கேற்பு

வியாழக்கிழமை, 5 அக்டோபர் 2017      கடலூர்
Image Unavailable

பண்ருட்டி அருகே உள்ள வேகாக் கொல்லைகிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்புமுகாம் நடைபெற்றது. காமிற்கு  பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி தலைமை வகித்தார் நெய்வேலி ஜவஹர் பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார் இதில் பண்ருட்டி குற்றவியல்நீதிமன்ற நீதிபதிகணேஷ் சிறப்பு அழைப்பாளராககலந்து கொண்டு பேசினார்  முகாமை யொட்டி மரக்கன்று நடும் விழா, துப்புரவு பணி ஆகியவை நடந்தது இதில் நெய்வேலி ஜவஹர் பள்ளி நாட்டு நலப்பணி திட்டமாணவர்கள் கலந்து கொண்டு தூய்மை பணி செய்தனர் தொடர்ந்து சட்டம் மற்றும் சுகாதாரம் குறித்தவிழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது என்.எல்.சி அதிகாரி செல்வம், தோட்டக் கலை அலுவலர் சுப்பாராவ், பத்திரக் கோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் தெய்வசிகாமணி, உள்பட பலர் கலந்து கொண்டனர் முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட ஓருங்கிணைப்பாளர் பாலமுருகன், துணை ஓருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் ஆகியோர் செய்தனர்:

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து