எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஏடிஸ் கொசுப்புழு இருக்குமிடத்தை கண்டறியும் வகையில் உபயோகமற்ற பொருட்களை அப்புறப்படுத்தும் பணியினை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே,தொடங்கி வைத்தார்.அதனை தொடர்ந்து கடலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக ஏடிஸ் கொசுப்புழு இருக்குமிடத்தை கண்டறியும் வகையில் அங்குள்ள உபயோகமற்ற பொருட்களான டயர், டீ கப் மற்றும் வாட்டர் பாட்டில் ஆகியவற்றில் தண்ணீர் தேங்கியுள்ளதா என்பதை கண்டறிந்து அவற்றினை அப்புறப்படுத்தும் பணியினை கலெக்டர் மேற்கொண்டார். அதன் பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் அலுவலகத்திற்கு வருகின்ற பொதுமக்களிடையே டெங்கு காய்ச்சல் பரவாமல் இருப்பது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் எனவும், மேலும் அலுவலகத்தின் உட்புறமும், வெளிபுறமும் தூய்மையாக வைத்திருக்கவேண்டும். இப்பணிகள் வாரந்தோறும் வியாழக்கிழமை மேற்கொள்ளவேண்டும். அலுவலக வளாகத்தில் உள்ள உபயோகமற்ற பொருட்களான விளம்பரப்பலகைகள், டயர்கள், டீ.கட்புகள், வாட்டர் பாட்டில்கள் போன்றவைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் அவற்றினை உடடினயாக அப்புறப்படுத்துவதால் ஏடிஸ் கொசுப்புழு உருவாகாமல் தடுப்பதோடு டெங்கு காய்ச்சல் பரவாமலும் தடுக்கலாம் என தெரிவித்தார்.இதனை தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ‘நான் எனது வீட்டிலோ வீட்டின் சுற்றுப்புறத்திலோ டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உபயோகமற்ற பிளாஸ்டிக் கப்புகள் போன்ற பொருட்களை போடமாட்டேன், அவ்வாறு ஏதேனும் வீணான பொருட்கள் கிடந்தாலும் அவற்றை உடனே அகற்றி விடுவேன். எனது வீட்டில் தண்ணீர் சேமித்து வைக்கும் குடங்கள், சிமென்ட் தொட்டிகள், டிரம்கள் ஆகியவற்றை கொசு புகாதவண்ணம் மூடி வைப்பேன். வாரம் ஒரு முறை தேய்த்துக் கழுவி சுத்தம் செய்வேன். இதன் மூலம் ஏடிஸ் கொசுப்பு வளராமல் தடுப்பேன் நான் கற்றுக்கொண்டவற்றை அண்டை, அயலார்க்கும் கற்று கொடுத்து டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசு உருவாகாமல் பாத்துக்கொள்வேன். தற்பொழுது அரசு எடுத்து வரும் அனைத்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று உளமாற உறுதி மொழி கூறுகிறேன் என்ற சுகாதார உறுதிமொழியினை கலெக்டர் பிரசாந்த மு.வடநேரே , , தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.மேலும், இன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் தலைமை அலுவலர் தலைமையில் இத்துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுகாதார உறுதிமொழியினை எடுத்துக்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டு பணிகள் மற்றும் ஏடீஸ் வகை கொசுப்புழு உற்பத்தியினை தடுக்கும் நடவடிக்கைகளில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தனை பொறுத்தவரை இக்காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பினும் மேலும் இக்கொசுப்புழுக்களால் டெங்கு காய்ச்ச்ல் ஏற்படா வண்ணம் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நல்ல நீரில் மட்டுமே வாழும் தன்மை கொண்ட இவ்வகை கொசுப்புழுக்கள் சேமித்து வைக்கப்படும் நீர் ஆதாரங்கள், தொட்டிகள், பயனற்ற டயர்கள், வீடுகளில் உபயோகமற்ற பயனற்ற நிலையில் வீசி எறியப்படும் தேவையற்ற பொருட்கள் ஆட்டுறல்கள், கப்புகள், உடைந்த பாத்திரங்கள், தேங்காய் சிரட்டைகள் போன்றவற்றில் தேங்கும் மழை நீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து அதன் மூலம் கொசுப்புழுக்கள் உண்டாகி டெங்கு காய்ச்சலுக்கு வாய்ப்பாக அமைகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், தலைமை செயலாளர், சுகாதார செயலாளர் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க இம்மாவட்டத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 8 மணி முதல் 11 மணி வரை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை டெங்கு கொசுப்புழு (லார்வா) ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்களும் மாவட்ட ஆட்சியரகம் முதல் கல்வி நிலையங்கள் மற்றும் ஊட்டச்சத்து மையங்கள் வரையிலான அனைத்து துறை சார் அலுவல வளாகங்களில் தேங்கியுள்ள மழை நீர் அப்புறப்படுத்துதல், தேவையற்ற கொசுப்புழு உற்பத்திக்கு சாதகமான பொருட்கள் ஆகியவற்றை அனைத்து அலுவலர்களுடம் ஒருங்கிணைந்து அப்புறப்படுத்துதல் மற்றும் அழித்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இப்பணிகள் அரசு அலுவலக வளாகங்கள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்கள், தனியார் அமைப்புக்கள், கட்டிடங்கள், தொழிலகங்கள் ஆகிய இடங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதே போன்று அனைத்து கல்வி நிலையங்கள், மக்கள் கூடும் பொது இடங்கள் ஆகியவற்றிலும் இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அனைத்து கல்வி நிலையங்களிலும் டெங்கு காய்ச்சல் மற்றும் ஏடீஸ் வகை கொசுப்புழுக்கள் உற்பத்தியாக சாதகமான அம்சங்கள், அதனை அழிக்கும் யுக்திகள் குறித்து கல்வி நிறுவன தலைவர்கள், தலைமையாசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் இறைவணக்கத்தின் போது பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவ மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் பரவல், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு சொற்பொழிவு செய்ய வேண்டும். தொடர்ந்து குடிநீர் ஆதாரங்கள் சுத்தம் செய்தல், நீர் சேமித்து வைக்கப்படும் தொட்டிகள் மற்றும் பாத்திரங்களை கழுவி தூய்மை படுத்துதல், குளோரினேஷன் பணிகள் போன்றவையும் ஒட்டுமொத்த குழுப்பணிகளாக மேற்கொள்ளப்படும். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.ஆனந்த்ராஜ், நகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான், துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.ஜவஹர்லால், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், வட்டாட்சியர்கள் பாலமுருகன், சிவா, சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியேர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க