எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அறுவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வியாக்கிழமையும் டெங்கு தடுப்பு தினமாக அனுசரிக்க படுவதையொட்டி சேலம் கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, மாவட்ட முழுவதும் டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை தொடங்கி வைத்து செய்தியாளயர்களிடம் தெரிவித்ததாவது.
மக்கள் இயக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்பேரில் பருவமழை காலங்களில் ஏற்படும் காய்ச்சல் அதிலும் குறிப்பாக டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு போர்கால அடிப்படையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சலை பரப்புகின்ற ஏ.டி.எஸ் கொசுக்கள் வளரும் இடங்களை கண்டறிந்து அதனை அழிக்கும் பணியினை தீவிரப்படுத்தும் விதமாக தற்பொழுது ஒவ்வொரு வியாக்கிழமையும் டெங்கு தடுப்பு தினமாக அனுசரிக்க படுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள 1 மாநகராட்சி, 4 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள், 385 கிராம ஊராட்சிகளிலும், டெங்கு தடுப்பு பணிகளுக்கு தேவையான களப்பணியாளர்களை போதுமான அளவிற்கு நியமித்து குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை போர்கால அடிப்டையில் அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், ஏ.டி.எஸ் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தும் விதமாக 1,788 அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் மற்றும் 124 மாணவ, மாணவியர்களுக்கான விடுதிகளிலும் கொசு ஒழிப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள 2,696 அங்கன்வாடி மையங்கள் மற்றும் 1,789 சத்துணவு மையங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் மூலமாக கட்டுப்பாட்டில் உள்ள மையங்களில் கொசு உற்பத்தியாகாமல் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள 398 துணை சுகாதார நிலையங்கள், 83 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 21 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள 12 அரசு மற்றும் 152 தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்திடவும், போதிய மருந்து மாத்திரைகள் இருப்பில் வைத்திடவும், மருத்துவமனை வளாகங்களில் கொசு உற்பத்தியாகாத வண்ணம் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கக்கூடிய நிலவேம்பு கசாயத்தினை பள்ளி கூடங்கள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்றைய தினம் சேலம் அரசு பெண்கள் கலைக்கல்லூரி, ஓமலூர் பேருந்து நிலையம், ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி, நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் ஆவடத்தூர் ஊராட்சி சவுரியூர், மேட்டூர் என இன்று ஒருநாளில் மட்டும் மாவட்ட முழுவதும், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் , ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகள் என அனைத்து இடங்களுக்கும் நேரடியாக சென்று டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் தற்பொழுது பரவலாக மழை பெய்து வரும் சூழ்நிலையில் நேற்றைய தினம் (04.10.2017) மட்டும் சங்ககிரியில் 105.3 மி.மீ, வாழப்பாடி 102.3 மி.மீ, தம்மம்பட்டி 90.6 மி.மீ, கெங்கவல்லி 90.4 மி.மீ, ஓமலூர் 89.0 மி.மீ, ஏற்காடு 87.4 மி.மீ, எடப்பாடி 78.2 மி.மீ, சேலம் 60.0 மி.மீ, காடையாம்பட்டி 58.4 மி.மீ, பெத்தநாயக்கன்பாளையம் 58.0 மி.மீ, வீரகனூர் 52.0 மி.மீ, ஆத்தூர் 46.6 மி.மீ, மேட்டூர் 31.2 மி.மீ, ஆணைமடுவு 30.0 மி.மீ, கரியகோவில் 5.0 மி.மீ என ஆக மொத்தம் 984.0 மி.மீட்டரும், நேற்றைய தினம் மாவட்டத்தின் மொத்த சராசரி மழையளவாக 65.6 மி.மீ மழை பெய்துள்ளது. இதனால் விவசாயம், குடிநீர் தேவை உள்ளிட்ட பல்வேறு நிலைகளுக்கும் இந்த மழைநீர் மிகுந்த பயனுள்ள ஒன்றாக அமைந்துள்ளது. அதே சமயம் ஆங்காங்கு தேங்க கூடிய சுத்தமான மழை நீரில் ஏ.டி.எஸ் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெங்கு தினமான ஒவ்வொரு வியாழக்கிழமையும் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டின் உள்ளேயும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக்கும் பணியினை மேற்கொள்ளவும், பள்ளிகள், கல்லூரிகள், அரசு சார்பு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் இயக்கமாக சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தி, காய்ச்சல் இல்லாத மாவட்டமாக சேலம் மாவட்டத்தினை உருவாக்கிட முன்வர வேண்டுமென இந்த தருணத்தில் அனைவரையும் கேட்டுகொள்கிறேன். மேலும் பள்ளி மாணவியர்கள் ஒவ்வொரு நாளும் பத்து நிமிடங்கள் ஒதுக்கி தங்கள் வீடுகள், அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மேட்டூர் சார் கலெக்டர் மேகநாதரெட்டி, சுகாதார பணிகளின் துணை இயக்குநர் மரு.பூங்கொடி, ஓமலூர் வட்டாட்சியர் சித்ரா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.