எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருமணங்குடி, காமேஸ்வரம், திருப்பூண்டி ஆகிய இடங்களில் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், நேரில் ஆய்வு செய்து பின்னர் தெரிவித்ததாவது,
கொசுஒழிப்பு பணி
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் கொசு ஒழிப்பு பணிகளுக்கு தேவையான களப்பணியாளர்களை போதுமான அளவிற்கு நியமித்து குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை போர்கால அடிப்படையில் அகற்றிட வேண்டும். கொசு ஒழிப்புக்கு தேவையான கொசு நாசினி மற்றும் கொசுப்புழு நாசினி போன்றவை போதுமான அளவில் கையிருப்பில் வைத்துக்கொண்டு கொசு ஒழிப்பு பணியில் தினமும் ஈடுபட வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் தேவையான அளவில் குளோரின் கலந்து விநியோகிக்க அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், குடிநீர் வடிகால் வாரியங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து அரசு கட்டிடங்களிலும் கொசு உருவாகும் இடங்களை கண்டறிந்து கொசு ஒழிப்பு பணியை பொதுப்பணி துறையினர் முழுமையாக மேற்கொள்ள வேண்டும். அனைத்து கல்வி நிலையங்களிலும், விடுதிகளிலும், தலைமையாசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றுமு; விடுதிக்காப்பாளர்களின் மேற்பார்வையில் கொசு ஒழிப்பு பணிகளை முடுக்கி விடவேண்டும். அங்கன்வாடி, சத்துணவு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி தி;ட்டப்பணியாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் மூலமாக அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மையங்களில் கொசு உற்பத்தியாகாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் கொசக்கள் உற்பத்தியாகாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலின்படி மருத்தவரீதியாக தேவையான அனைத்து வசதிகளையும் உநுதி செய்ய வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் கட்டில் வசதிகள், மருந்துகள், நோய் கண்டுபிடிக்கும் கருவிகள், தேவையான ரத்தம் மற்றும் தட்டணுக்கள் ஆகியவை போதுமான அளவிற்கு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் நிலவேம்பு குடிநீர் அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் அனைவருக்கும் சுகாதார துறையினர் வழங்க வேண்டும்.
டெங்கு காய்ச்சல்
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஒவ்வொரு வீட்டிலும் கொசு புழு ஒழிப்பு பணி மேற்கொள்ளும் பொழுது வீட்டின் உரிமையாளர்களையும் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தி வருங்காலங்களில் அவர்களே தங்களின் வீடுகளில் கொசு புழு உற்பத்தியாகாவண்ணம் தடுக்க பயிற்சி அளிக்க வேண்டும். வீட்டின் உரிமையாளரிடம் டெங்கு கொசு புழு எவ்வாறு உற்பத்தியாகிறது, அது எவ்வாறு உற்பத்தியாகாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதை அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் சேகரிக்கப்பட்ட கொசு புழுக்களை மாதிரியாக காண்பித்து விளக்கிட வேண்டும். மேலும் டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்கும் பொருட்டு அரசு அலுவலர்கள் தங்கள்; அலுவலகங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறும் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கும் சுகாதார கல்வி அளிக்க வேண்டும். மேலும் மேல்;நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் சிமெண்ட் தண்ணீர் தொட்டிகள் மற்றும் சின்டெக்ஸ் போன்றவற்றை கொசுப்புகாவண்ணம் நன்றாக மூடிவைக்க வேண்டும். வாரம் ஓருமுறை தண்ணீரை வடிகட்டி பீளிச்சிங் பவுடரை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மேலும் பள்ளிவளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களையும் பிரதி வாரம் வியாழக்கிழமை தோறும் சுத்தம்; செய்;து எடீஸ் கொசுப்புழு உருவாகும் எந்த கலன்களும் இல்லை என்ற சான்று அறிக்கையினை துணை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.இரா. செல்வகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அலுவலர்கள், மருத்துவர்கள் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.