எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் சீரான போக்குவரத்து மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்க தீவிர போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தி.நகரில் 200 கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டும், 3 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபடுகின்றனர். மேலும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான புரசைவாக்கம், வேளச்சேரி, தாம்பரத்திலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும், பொது மக்களை பாதுகாக்கும் பணியிலும் ஈடுபடுகின்றனர்.
இம்மாதம் 18ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி, புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் சென்னையில் அதிகளவில் கூடும் இடங்களான தி.நகர், புரசைவாக்கம், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம் போன்ற பகுதிகளில் சீரான போக்குவரத்திற்கும், திருட்டு சம்பவங்கள் தடுக்கும் பொருட்டும் சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.க.விசுவநாதன் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.அதன்பேரில், 13ந் தேதி முதல் 18ந் தேதி வரை சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து மாவட்ட துணை ஆணையர்கள் தலைமையில், மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில், தற்காலிக காவல் உதவி மையங்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த இடங்களில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டு, திருட்டுச் சம்பவங்கள் மற்றும் வேறு அசம்பாவிதங்கள் நடைபெறாவண்ணம் காவல் உதவி மையங்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரங்களில் காவலர்கள் நியமிக்கப்பட்டு, ஒலிபெருக்கி மூலம் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு போக்குவரத்து சீராக செல்லும் வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடுதல் ஆணையர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து அவர்களால் நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தி.நகர்
பொருட்கள் வாங்க சென்னையிலேயே பொதுமக்கள் அதிகளவில் கூடும் தி.நகர், உஸ்மான் ரோடு, ரங்கநாதன் தெருவில் காவல் துணை ஆணையர் தலைமையில் மொத்தம் 560 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மாம்பலம் காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில் 20 போலீசார் கொண்ட க்ரைம் ஸ்பெஷல் டீம் ஏற்படுத்தப்பட்டு சாதாரண உடையில் காவலர்கள் தி.நகர், உஸ்மான் ரோடு, ரங்கநாதன் தெருவில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பேருந்து வழித்தடங்கள், தி.நகர் பேருந்து நிலையம், உஸ்மான் ரோடு, ரங்கநாதன் தெரு என அனைத்து பகுதிகளிலும் ஒரு பெண் ஆய்வாளர் தலைமையில் 20 ஆண்/பெண் காவலர்கள் என தனிக்குழு அமைக்கப்பட்டு சாதாரண உடையில் பிக்பாக்கெட் திருடர்கள் கண்காணிக்கப்படவுள்ளனர். தி.நகர் பகுதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டப்பாட்டு அறை மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படவுள்ளது. மேலும் மாம்பலம் ரெயில் நிலைய நுழைவு வாயில் ரங்கநாதன் தெரு, போத்தீஸ் அருகில் மற்றும் குமரன் ஸ்டோர்ஸ் என 3 இடங்களில் 3 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு காண்காணிக்கப்படவுள்ளது. கண்காணிப்பு கோபுரத்தில் பணியிலிருக்கும் காவலர்கள் பைனாகுலர் மூலம் மக்கள் கூட்டத்தை கண்காணித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படவுள்ளது. மேலும் விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பேனர்கள், உஸ்மான்ரோடு, ரங்கநாதன் தெரு மற்றும் தி.நகரின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்படவுள்ளது.
உஸ்மான் ரோடு சந்திப்பு மற்றும் ரங்கநாதன் தெரு ரெயிலடி ஆகிய இடங்களி எல்இடி டிஸ்ப்ளே அமைக்கப்பட்டு, விழிப்புணர் வாசகங்கள் ஒளிபரப்பப்படவுள்ளது. குற்ற சம்பவங்களுக்கு வாய்ப்பு அளிக்காவண்ணம் பொதுமக்களை உஷார்படுத்தும் பொருட்டு ஒலிபெருக்கி மூலம் இந்த இடங்களில் பிரச்சாரம் செய்ய ஏற்பாட செய்யப்பட்டுள்ளது. மாம்பலம் ரெயில் நிலைய படிக்கட்டுகளின் வழியே ரங்கநாதன் தெருவிற்கும் அங்கிருந்து ரெயில் நிலையத்திற்கு திரும்பவும் படிகளில் நடுவே தடுப்புகள் அமைத்து சிரமமின்றி நென்றுவர ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இதே போன்று ரங்கநாதன் தெருவின் நடுவில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் சிரமமின்றி செல்ல வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. உஸ்மான்ரோடு – ரங்கநாதன் தெரு சந்திப்பு, போத்தீஸ் சந்திப்பு, தி.நகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் சிரமமின்றி சாலையை கடப்பதற்கு கயிறுகள் பொருத்தப்படவுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அதை போத்தீஸ் சந்திப்பு அருகே நிறுவப்படவுள்ளது. காவல் உதவி மையம் ரங்கநாதன் தெரு, பாண்டிபஜார், வாணிமகால் மற்றும் வி.என்.சாலையில் அமைக்கப்படவுள்ளது.
புரசைவாக்கம்
புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் டவுட்டன் சந்திப்பு, வெல்கம் ஓட்டல் சந்திப்பு மற்றும் வெள்ளாளர் தெரு சந்திப்பு ஆகிய இடங்களில் காவல் துணை ஆணையர் தலைமையில் மொத்தம் 230 போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படவுள்ளனர். மேலும் சரவணா ஸ்டோர்ஸ் அருகிலும், வெல்கம் ஓட்டல் சந்திப்பிலும், வெள்ளாளர் தெரு சந்திப்பிலும் உள்ள காவல் உதவி மையங்களில் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் காவலர்கள் அடங்கிய குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது. மேலும் இந்த இடங்களில் 3 தற்காலி கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, ஒலிபெருக்கி மூலம் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நெருக்கடி இல்லாமல் செல்வதற்கான பாதைகள் குறித்தும், திருடர்களிடமிருந்து பணம், நகை மற்றும் உடைமைகளை பாதுகாக்கா முன்னெச்சரிக்கையாக இருக்க விழிப்புணர்வு உண்டாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேள்சேரி
வேள்சேரியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 1 ஆய்வாளர், 2 உதவி ஆய்வார்கள் மற்றும் 50 காவலர்கள் பணி அமர்த்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்படவுள்ளது. மேலும் ரோந்து பணியும் அதிகரிக்கப்படவுள்ளது. இதர பகுதிகளில் செக்டார் ரோந்து அலுவலர்கள் மற்றும் ரோந்து வாகனங்களின் மூலம் கண்காணிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்படவுள்ளது. வேளச்சேரி தரமணி லிங்க சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் அருகே கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு காவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்படவுள்ளது. 100 அடி ரோடு தரமணி லிங்க் ரோடு, விஜிபி செல்வா நகர், புவனேஸ்வரி நகர், விஜய நகர் பேருந்து நிலையம் மற்றும் முக்கியமாக பொதுமக்கள் கூடுமிடங்களில் எல்லாம் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது. தரமணி லிங்க்ரோடு, சரவணா ஸ்டோர்ஸ் கடையிலிருந்து வேளச்சேரி ரெயில் நிலையம் வரும் பாதசாரிகள் நடந்துசெல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டு விபத்து ஏற்படா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தாம்பரம்
தாம்பரம் தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல தாம்பரம் சானிடோரியம் அண்ணா பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் சுழற்சி முறையில் காவலர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். மேலும் ஜி.எஸ்.டி. ரோட்டில் சென்னைக்குள்ளே வரும் வாகனங்கள் மற்றும் வெளியே செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படா வண்ணம் சுழற்சி முறையில் காவலர்களை நியமித்து பொதுமக்களுக்கு போக்குவரத்தினால் பாதிப்பு ஏற்படாவண்ணம் பாதுகாப்பு பணியில் காவலர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். குறிப்பாக சண்முக சாலை, தில்லை நகர் பகுதி, தாம்பரம் பேருந்து நிலையம் ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் பிக்கெட்டிங் போடப்பட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.
வண்ணாரப்பேட்டை
முக்கிய வணிக வளாகங்கள் உள்ள பகுதிகளில் தீபாவளி வியாபாரத்தை முன்னிட்டு போக்குவரத்து தடை செய்தல், குறிப்பாக ஜி.ஏ.ரோடு, எம்.சி.ரோடு முழுவதும் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை இருசக்கர வாகனம் உள்பட போக்குவரத்திற்கு தடை செய்யப்படவுள்ளது. மேலும் காவல் துணை ஆணையாளர் தலைமையில் 149 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். எம்.சி. சாலையில் அரிஹந்த் டெக்ஸ்டைல்ஸ், வீராஸ் டெக்ஸ்டைல்ஸ் முன்பும், ஜி.ஏ. சாலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பும் 3 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதில் 6 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கூட்டத்தை கண்காணித்தும் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்படவுள்ளது. மேலும் எம்.சி. சாலை மற்றும் ஜி.ஏ. சாலையில் சாதாரண உடையில் காவலர்கள்/உதவி ஆய்வாளர்கள் குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணித்து ஏற்பாடு செய்யப்படவுள்ளது. மேலும் எச்.1 வண்ணாரப்பேட்டை, எச். 3 தண்டையார்பேட்டை மற்றும் என்.1 ராயபுரம் காவல் நிலையங்களின் பெட்ரோல் வாகனங்களில் அலுவலர்கள் குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பூக்கடை
முக்கிய வணிக வளாகங்கள் ஆடைகள், நகைகள், பட்டாசு கடைகள் மற்றும் முக்கிய கடைகள் உள்ள பகுதிகளான என்.எஸ்.சி. போஸ் சாலையில் தீபாவளி வியாபாரத்தை முன்னிட்டு காவல் துணை ஆணையாளர் தலைமையில் 117 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பிராட்வே பேருந்து நிலையம் வெளிவாயில், குறளகம், பந்தர் தெரு, என்.எஸ்.சி. போஸ் சாலை சந்திப்பு, என்.எஸ்.சி. போஸ் சாலை நாராயண முதலி தெரு சந்திப்பு மற்றும் என்.எஸ்.சி. போஸ் சாலை கோவிந்தப்பன் தெரு சந்திப்பு ஆகிய 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கூட்டத்தை கண்காணித்தும் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வாங்கபடவுள்ளது.
03 புறக்காவல் நிலையங்கள் சி1, சி2 மற்றும் பி2 காவல்நிலையங்களில் நிறுவப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அவர்கள் உடமைகள் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 02 தீயணைப்பு வாகனங்கள் என்.எஸ்.சி போஸ் சாலை டெலிபோன் எக்சேஞ்ச், பந்தர் தெரு அருகில் நிலைநிறுத்தப்பட்டவுள்ளன. கூடுதலாக தற்காலிக கட்டுப்பாட்டறை பந்தர் தெருவில் உள்ள புறக்காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டவுள்ளது. மேலும் சாதாரண உடையில் காவலர்கள்/ உதவி ஆய்வாளர்கள் குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணிக்க உள்ளனர். மேலும் சி1, சி2, பி1, பி2 என்3 மற்றும் சி3 காவல் நிலையங்களின் பெட்ரோல் வாகனங்களில் அலுவலகர்கள்குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தபடவுள்ளனர். மேலும் நகை வியாபாரிகள் சங்கத்தினர் வாயிலாக பல இடங்களில் சிசிடிவி கேமாராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
அண்ணாநகர்
கோயம்பேடு பேருந்து நிலையம், சி.எம்.பி.டி மதுரவாயல் மற்றும் திருமங்கலம் காவல் நிலையம் பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக பேருந்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்துதல், பயணியர் உடைமைகள் பாதுகாப்பு உறுதி செய்தும், பயணியரை வரிசைப்படுத்தில் பேருந்தில் அமரச்செய்யவும் 16 செக்டார் பாதுகாப்பிற்காக, காவல் துணை ஆணையாளர் தலைமையில் 639 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். முக்கிய சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும் அதில் கண்காணிப்பு கேமாராக்கள் மூலம் கூட்டத்தை கண்காணித்தும் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கபடவுள்ளது. தீயணைப்பு வாகனங்கள் கே 10 கோயம்பேடு மற்றும் கே11 சிஎம்பிடி காவல் நிலையங்களின் சரகத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டவுள்ளன. சாதாரண உடையில் காவலர்கள்/ உதவி ஆய்வாளர்கள் குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் கே10, கே11, டி4 மற்றும் வி5 காவல் நிலையங்களின் பெட்ரோல் வாகனங்களில் அலுவலர்கள் குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மாதவரம்
முக்கிய வணிக வளாகங்கள் ஆடைகள், நகைகள், பட்டாசு கடைகள் மற்றும் முக்கிய கடைகள் உள்ள பகுதிகளான செங்குன்றம் ஜி. என்.டி சாலையில் மாதவரம் மூலக்கடை சந்திப்பு, மணலி மார்க்கெட், மணலி புதுநகர், எண்ணூர் மற்றும் சாத்தாங்காடு மார்க்கெட் பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காவல் துணை ஆணையாளர் தலைமையில் 168 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டவுள்ளனர். ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கபட்டவுள்ளது. தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட உள்ளன. சாதாரண உடையில் காவலர்கள்/உதவி ஆய்வாளர்கள் குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாதாவரம் காவல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களின் பெட்ரோல் வாகனங்களில் அலுவலர்கள் குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக போக்குவரத்து கொண்ட சாலைகளான அண்ணா சாலை, சர்தார் வல்லபாய் படேல் ரோடு, துர்காபாய் தேஸ்முக் சாலை, சந்தோம் நெடுஞ்சாலை, பசுமைவழிச் சாலை, காமராஜர் சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, கத்தீட்ரல் சாலை, எல்.பி. சாலை, ஆர்கே சாலை, சேமியர் சாலை ஈவிஆர் சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, பிரகாசம் சாலை, ஜிஎஸ்டி சாலை, ஓஎம்ஆர், ஈசிஆர், சிடிஎச் சாலை, டிஎச் ரோடு, ஆகிய இடங்களில் ஒலிபெருக்கி கொண்ட ரோந்து வாகனங்களும் இழுவை வாகனங்களையும் மேற்பார்வை செய்ய காவல் உதவி ஆணையாளர் தலைமையில் 127 காவலர்களை நியமித்து போக்குவரத்து சீராக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
23 Apr 2024இடாநகர், அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் இன்று அங்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.