எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாமக்கல் மாவட்ட பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை மற்றும் தீயணைப்பு மீட்புத்துறையின் சார்பில் பேரிடர் குறைப்பு நாளை முன்னிட்டு பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பேரணியும், தீ விபத்தினை எவ்வாறு தடுப்பது என்பது குறித்த தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சியும் நேற்று (13.10.2017) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு நாமக்கல் சார் கலெக்டர் கிராந்திகுமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிகளுக்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பேரணியினை துவக்கி வைத்து, தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சியினை பார்வையிட்டார். பேரிடர் மேலாண்மை குறித்து நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கி பேசும் போது தெரிவித்ததாவது,
பேரணி
மழை காலங்களில் பேரிடர் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாத்திடவும், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், நாமக்கல் மாவட்ட பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறையும், மாவட்ட தீயணைப்பு மீட்புத்துறையும் இணைந்து பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி மற்றும் ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. மழை வெள்ள காலங்களில் மனிதர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் எதிர்பாராதவிதமாக ஏற்படுகின்ற தீ விபத்துகள், சாலை விபத்துக்கள், கட்டிட இடுபாடுகள், இயற்கையின் சீற்றங்களால் ஏற்படுகின்ற புயல், மழை, வெள்ளம், பூகம்பம், சுனாமி போன்ற பல்வேறு பாதிப்புகளிலிருந்தும் செயற்கையாக ஏற்படுகின்ற பேரிடர் பாதிப்புகளிலிருந்;தும் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதுகுறித்த விளக்கங்கள் இங்கே செயல்முறை விளக்கங்களாகவும், கருத்துக்களாகவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் நாமக்கல் மாவட்ட பேரிடர் மேலாண்மை தணிக்கும் துறையின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
பள்ளி வளாகங்களில் இதுபோன்ற பேரிடர் மேலாண்மை மற்றும் தீ விபத்தை தடுப்பது தொடர்பான ஒத்திகை பயிற்சியினை நடத்துவதன் முக்கிய நோக்கம் மாணவ, மாணவியர்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு இப்பயிற்சியினை பார்த்து பயன்பெற்றுள்ள மாணவ, மாணவியர்களும் தங்கள் இல்லங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பட்டால் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வையும், தங்களது பெற்றோர்கள் மற்றும் மற்றவர்களிடத்திலும் எடுத்துக்கூறி இது குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கும் ஏற்படுத்திட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு நடத்தப்படுகின்றன. பேரிடர் காலங்களில் விபத்துக்களை தவிர்ப்பதற்கும், மழை வெள்ள காலங்களில் குழந்தைகள், பெரியவர்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்தும், எதிர்பாராத விதமாக ஏற்படுகின்ற தீ விபத்து நேரங்களில் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்தும் தீயணைப்பு மீட்புப் பணித்துறையின் சார்பில் இங்கே விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளதோடு, செயல்முறை விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. இதனை மாணவ, மாணவியர்கள் நன்கு அறிந்து கொண்டு பேரிடர் காலங்களில் தங்களையும், தங்களைச் சார்ந்தவர்களையும், பாதிப்புக்குள்ளாகின்ற பொதுமக்களையும் பாதுகாத்திட முன்வர வேண்டும். பேரிடர் காலங்களில் ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை மற்றவர்களுக்கு ஏற்படுத்துவதோடு, பேரிடர் தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முழுமையாக கடைபிடித்திட வேண்டும். இவ்வாறு கலெக்டர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார்.
இந்த பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி மற்றும் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் கு.அழகப்பன், நாமக்கல் மாவட்ட பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் ராஜா, நாமக்கல் வருவாய் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் உட்பட வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள், ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.