முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017      கடலூர்
கடலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே,   தலைமையில்   நடைபெற்றது
இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டர் அவர்களிடம் நேரில் அளித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கென மனுக்கள் பெறுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு நேரில் சென்று மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார். இன்று நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மொத்தம் 317 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த இம்மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டும் மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என கலெக்டர்  அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு தெளிவான பதிலை அளிக்கவேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2016-17ம் ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு ஊக்க பரிசுத்தொகையாக கடலூர் வண்ணியர்பாளையத்தை சேர்ந்த செல்வி துர்கா என்கிற மோனிகா என்ற மாணவிக்கு ரூ.5,000-மும், சிதம்பரம் வைகை நகரை சேர்ந்த செல்வன் ஆர்.கீதன் என்ற மாணவனுக்கு ரூ.3000-மும் ஆகமொத்தம் ரூ.8,000-க்கான காசோலையினையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் முஸ்லீம் மகளிர் உதவி சங்கம் மூலம் 7 நபர்களுக்கு ரூ.4800- வீதம் ரூ.33,600-க்கான விதவை உதவித்தொகைக்கான காசோலையினையும் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே,   வழங்கினார். இக்குறைகேட்புக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி)  கூஷ்ணாதேவி, தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) சேதுராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் தினேஷ் ஆகியோர் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து