எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவு சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளை தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர் பொது சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன், நேரில் சென்று பார்வையிட்டு சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்விற்கு கலெக்டர் கே.விவேகானந்தன்,முன்னிலை வகித்தார்.
அரசு செயலாளர் ஆய்வு
பின்னர் தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர் பொது சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன், செய்தியாளாகளிடம் தெரிவித்ததாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசு ஒழிப்புப்பணி முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது. டெங்கு காய்ச்சலை ஒழிப்பதில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் அரசிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தற்போது உலக சுகதார நிறுவனத்தின் வழிக்காட்டுதல்படி டெங்கு பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் வகையில் நிலவேம்பு குடிநீர் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் 12 நிலவேம்பு இரதம் இயக்கப்பட்டுவருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறை கட்டடங்கள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் டெங்கு பரப்பும் ஏ.டி.எஸ் கொசுப்புழுக்களை ஒழிக்க தொடர்புடைய துறைகள் மற்றும் நிறுவனங்கள் முழு வீச்சில் ஈடுபடவேண்டும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் பொதுமக்கள் தண்ணீர் தேக்கிவைக்க புளு நிற பிளாஸ்டிக் ட்ரம்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இது முறையாக பயன்படுத்தாத காரணத்தினால் இதில் உள்ள தண்ணீரில் கொசுப்புழுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இந்த ட்ரம்களில் உள்ள தண்ணீரை சரியான முறையில் மூடிவைத்தும், அவ்வப்போது தண்ணீரை மாற்றியும் பயன்படுத்த வேண்டும். டெங்குவை ஒழிப்பதற்கு போதிய விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும். மேலும் நகர்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் புதிய கட்டடப்பணிகள் நடைபெறும் இடங்களில் தேக்கிவைக்கப்படும் தண்ணீரிலும் கொசுப்புழுக்கள் உருவாகிறது. இதை நகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை பணியாளர்கள் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சையை பொருத்தமட்டில் அரசு மருத்துவனைகள், இந்திய மருத்துவக் கழகம், இந்திய குழந்தைகள் மருத்துவக் கழகம், இந்திய மருத்துவம், சித்தா மருத்துவம் உள்ளிட்டவைகள் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. தேவையான இரத்தம் அரசு மருத்துவ மனைகளில் இருப்பில் உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் உள்ளதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருகிறது. மாவட்ட கலெக்டர் மற்றும் மருத்துவப்பணிகளின் இணை மற்றும் துணை இயக்குநர் ஆகியோருக்கு பொதுமக்கள் போலிமருத்துவர்கள் குறித்து உடனடியாக தகவல் அளிக்க வேண்டும்.
பொதுமக்கள் எக்காரணத்தைகொண்டும் போலி மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு செல்லக்கூடாது. வலி மாத்திரைகள் டெங்கு காய்ச்சலுக்கு உகந்தது அல்ல. தரமான மூத்த மருத்துவர்களிடம் சென்று தங்களுக்கு உள்ள காய்ச்சல் வகையை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவர் அலோசனையின்றி தனியாக மருந்தகங்களில் மாத்திரைகளை பெற்று சாப்பிடக்கூடாது. தேசிய வழிகாட்டு முறைகள்படி போலி மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டெங்கு காய்ச்சல் 1945 ஆண்டு ஆப்பரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டது. 1956 ஆம் ஆண்டு வேலூர் பகுதியில் டெங்குகாய்ச்சல் அறிப்பட்டது. 19 டிகிரி முதல் 49 டிகிரி வரை வெப்பமுள்ள 128க்கும் அதிகமாக நாடுகளில் டெங்கு காய்ச்சல் உள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு முக்கிய காரணம் நமது வாழ்வாதார வழிமுறைகள், பருவநில மாற்றங்கள். நல்லதண்ணீரில் உருவாகும் கொசுக்கள் மூலம் மட்டுமே டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இந்த ஆண்டு கேரளாவில் முதலில் டெங்கு காய்ச்சல் தொடங்கியது. டெங்கு காய்ச்சலால் ஏற்படும் இழப்புகள் சமூதாயத்திற்கே ஏற்படும் இழப்புகளாக கருதப்படுகிறது. இதை தடுக்க முறையான மருத்துவர்களின் கண்காணிப்பில் டெங்கு நோயாளிகள் சிகிச்சை பெற வேண்டும்.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுத்தல்படி, பொதுமக்கள், தொண்டுநிறுவனங்கள், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி மன்றங்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்தது செயல்பட்டால்தான் டெங்குவை முழுமையாக ஒழிக்க முடியும். தடுப்பு மருந்து இருப்பதால் போலியோ நோயை நம்மால் ஒழிக்க முடிந்தது. டெங்குவிற்கு தடுப்பு மருந்து இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த டெங்குவை ஒழிப்பதற்கு நல்லதண்ணீரில் வரும் கொசுவை ஒழிப்பதுதான் நிரந்தர தீர்வாக அமையும். நிலவேம்பு குறித்து தேவையற்ற வதந்திகள் வாட்ஸ்அப்பில் பரப்பப்படுகிறது. நிலவேம்பு அங்கீரகிக்ப்பட்ட ஒரு இந்திய மருத்துவம். பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பின்புதான் சித்த மருத்துவர்களின் அறிவுரைப்படிதான் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நிலவேம்பு குறித்து 40க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் உள்ளது. சந்தேசம் ஏற்படும் நபர்களுக்கு இந்த முடிவுகளை வழங்க அரசு தயராக உள்ளது என தெரிவித்தார்.
முன்னதாக காரிமங்கலம் அரசு மருத்துவமனை, காரிமங்கலம் பி.கெட்டூர் துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார். தொடர்ந்து பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சென்று காய்ச்சல் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது மருத்துவர்களிடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் பொதுமக்களிடம் கனிவாக பேசி நல்ல தரமான சிகிச்சையை வழங்க வேண்டுமென அறிவுறுத்தினார்.
கலெக்டர் கே.விவேகானந்தன்,இ.ஆ.ப., தெரிவித்தாவது:-
தருமபுரி மாவட்டத்தில் 32 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் தலா 100 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காலை 6 மணி முதல் முழு சுகாதாப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலக்கோடு அரசு மருத்துவமனையில் ரூ 1.95 கோடி மதிப்பில் மகப்பேறு மருத்துவமனை அமைக்க அரசு செயலாளர் ஆய்வு செய்து நிதிஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்துள்ளார்கள். மேலும் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அதனை முழுமையாக அழிக்க தூய்மை பணியாளர்களை கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.சீனிவாசராஜு, இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.பொன்னுராஜ், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.ஜெகதீஸ்குமார், வருவாய் கோட்டாட்சியர் இராமமூர்த்தி, மாவட்ட சித்த மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி, உள்ளிருப்பு மருத்துவர் மரு.சுரபி, வட்டாட்சியர் ஜெயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
23 Apr 2024இடாநகர், அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் இன்று அங்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்