முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளத்தில் கல்விக்கண் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

திங்கட்கிழமை, 23 அக்டோபர் 2017      தேனி
Image Unavailable

தேனி  பெரியகுளத்தில் கல்விக்கண் அறக்கட்டளையின் 7ம் ஆண்டு விழாவை முன்னிட்டு எனக்கு பிடித்த தலைவர் என்ற தலைப்பில்  பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி தென்கரை கிளை நூலகத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்விக்கண் அறக்கட்டளை நிறுவனர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். திராவிடர் கழக அன்புக்கரசன், எல்.ஐ.சி குருநாதன், ஆலிம் அகமது முஸ்தபா, காஜாமைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் சவடமுத்து வரவேற்றார். நெல்லையப்பர் நடுநிலைபள்ளி ஆசிரியர் ராஜ்குமார், அன்பு அறக்கட்டளை அன்புச்செல்வ மகரிஷி, செட் தொண்டு நிறுவனர் நித்தியானந்தம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். அதனை தொடர்ந்து பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு  நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்விக்கண் அறக்கட்டளை உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து