முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள்: கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 24 அக்டோபர் 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சி மற்றும் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை கலெக்டர் இல.சுப்பிரமணியன்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை இணைந்து டெங்கு கொசு ஒழிப்பிற்கென மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கலெக்டர் இல.சுப்பிரமணியன் அவர்களின் நேரடிப் பார்வையில், டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் தினந்தோறும் நடைபெற்று வருகிறது.

கொசு ஒழிப்பு பணி

அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் விழுப்புரம் வட்டம் வளவனூர் பேரூராட்சிப் பகுதிகளான பஞ்சாயத்துபோர்டு தெரு, கால்நடை மருத்துவமனை தெரு (தொட்டிப்பாட்டை), மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பிற்கென பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.  இந்த ஆய்வின்போது, அப்பகுதியில் செயல்பட்ட, அரிசி ஆலை நிறுவனத்தின் சுற்றுப்புற பகுதிகளில் கொசுப்புழு உற்பத்தியாகும் தேவையற்ற பொருட்கள் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டது.  அப்பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த பேரூராட்சி சார்பாக அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.மேலும் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம், மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.  தினந்தோறும் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கவும், மருத்துவமனையில் சுற்றுப்புறங்களில் மரங்களை நட்டு, பசுமையாக பராமரிக்கவும் மருத்துவர்களுக்கும், பேரூராட்சி பணியாளர்களுக்கும் அறிவுறுத்தினார்.கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குமாரமங்கலம், சிறுவந்தாடு, இராம்பாக்கம் ஊராட்சிப் பகுதிகளில், வீடு வீடாக சென்று தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழு உள்ளதா என பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.  கழிவுநீர் வாய்க்கால்கள், தேவைற்ற பொருட்களான பழைய டயர்கள், மண்பாண்டங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், ஆட்டுஉரல்கள் ஆகியவற்றில் நீர் தேங்கி உள்ளதா எனவும், நீர் தேங்கி இருப்பின் அவற்றில் கொசுப்புழுக்கள் உள்ளதா எனவும் ஆய்வு செய்தார்.  மேலும், அப்பகுதியில் இயங்கி வரும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கடன் சங்க முழுநேர நியாயவிலைக் கடையின் மூலம் வழங்கப்படும் பொருட்களை ஆய்வு மேற்கொண்டார்.  சிறுவந்தாடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, சுகாதார நிலையத்தை தூய்மையாக பராமரிக்கவும், நோயாளிகளுக்கு தினந்தோறும் நிலவேம்பு கசாயம் வழங்கவும், மருத்துவர்கள் சுழற்சி முறையில் தொடர்ந்து பணிபுரியாற்றவும் அறிவுறுத்தினார்.தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்தும், டெங்கு கொசு ஒழிப்பு குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியை சுத்தமாக பராமரித்தாலே டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்க முடியும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன்  தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் வி.மகேந்திரன், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.சவுண்டம்மாள், வட்டார மருத்துவ அலுவலர்கள் டாக்டர்.பிரியாபத்மாசிலி, டாக்டர்.ஆர்த்தி, பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதி, ஜெகதீசன், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து