முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருதுபாண்டியர் ஜெயந்தியை முன்னிட்டு மூ.மு.க சார்பில் இரத்ததான முகாம்: மாநில மகளிரணி செயலாளர் ஒ.சுந்தரச்செல்வி ஒச்சாத்தேவர் தொடங்கி வைத்தார்:

செவ்வாய்க்கிழமை, 24 அக்டோபர் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மாமன்னர்கள் மருதுபாண்டியர் ஜெயந்தியை முன்னிட்டு திருமங்கலம் அருகேயுள்ள வில்லூர் கிராமத்தில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாமினை மூ.மு.க மாநில மகளிரணி செயலாளர் மற்றும் ஓஎஸ்எம்ஆர் டிரஸ்ட் நிறுவன தலைவர் திருமதி. ஒ.சுந்தரச்செல்வி ஒச்சாத்தேவர் தொடங்கி வைத்தார்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய மாமன்னர்கள் மருதுபாண்டியரின் 216வது ஆண்டு ஜெயந்திவிழா நேற்று தமிழகம் முழுவதிலும் சிறப்பாக நடைபெற்றது.இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள வில்லூர் கிராமத்தில் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மருதுபாண்டியர் ஜெயந்திவிழாவை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் வெகுசிறப்புடன் நடைபெற்றது.இவ்விழாவில் மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில மகளிரணி செயலாளர் மற்றும் ஒஎஸ்எம்ஆர் டிரஸ்ட் நிறுவன தலைவர் திருமதி.ஒ.சுந்தரச்செல்வி ஒச்சாத்தேவர் கலந்து கொண்டு தலைமையேற்று இரத்ததான முகாமினை தொடங்கி வைத்தார்.இந்த முகாமில் கட்சி நிர்வாகிகள்,வில்லூர் மாமன்னர் மருதுபாண்டியர் இளைஞர் பேரவையைச் சேர்ந்த இளைஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர்.இதற்கான பணிகளை அரசு இரத்தவங்கியினர் மேற்கொண்டனர்.
முன்னதாக வில்லூரில் உள்ள தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கும்,மாமன்னர்கள் மருதுபாண்டியரின் திருவுருவச் சிலைகளுக்கும் மூ.மு.க மாநில மகளிரணி செயலாளர் மற்றும் ஒஎஸ்எம்ஆர் டிரஸ்ட் நிறுவன தலைவர் திருமதி.ஒ.சுந்தரச்செல்வி ஒச்சாத்தேவர் தலைமையில் மாலையணிவித்து வீரவணக்கத்துடன் மரியாதை செலுத்திடும் நிகழச்சி எழுச்சியுடன் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிகளில் இளைஞரணி பொறியாளர் ஒ.ரர்கேஷ் ஒச்சாத்தேவர்,மதுரை மாவட்ட மூ.மு.க இளைஞரணி செயலாளர் சிவரக்கோட்டை.வி.செல்வம்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரபுசங்கர்,வில்லூர் ரவி,மூ.மு.க நிர்வாகிகள் வில்லூர் பிச்சை,சிவகாசி சுரேஷ்குமார்,மதுரை காளி,தென்னமநல்லூர் செந்தில்குமார்,ஆவல்சூரன்பட்டி ஈஸ்வரன்,கல்லுப்பட்டி விஜயன்,தென்னமநல்லூர் வெயிலுமுத்து,திருமங்கலம் குட்டி(எ)ஞானசீலன்,சிவரக்கோட்டை முத்துவேல்,வில்லூர் மருதுபாண்டியர் இளைஞர் பேரவையினர் மணி,செந்தில்,வேல்முருகன்,உதயகுமார்,பாண்டி,சோழவந்தான் முத்துகுமார்,சிவா,குமார்,புளியம்பட்டி வெங்கடேஸ்வரன்,சரவணன்,கார்த்திக்,சுரேஷ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து