எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை.-மதுரை மாநகராட்சி திருநகர் மற்றும் மேல அனுப்பானடி பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து ஆணையாளர் மரு.அனீஷ் சேகர். முன்னிலையில் தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை செயலர் மரு.இராதாகிருஷ்ணன், ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 வார்டு எண்.98 திருநகர் பகுதியில் டெங்கு பாதித்த வீட்டிற்கு நேரடியாக சென்று வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைக்குமாறும், குடிநீரினை மூடி பாதுகாப்பாக வைக்குமாறும் கூறினார். மேலும் திருநகர் பகுதிகளில் வெகுநாட்களாக பூட்டப்பட்டுள்ள வீடுகளில் வருவாய்த் துறையினர் முன்னிலையில் திறந்து சுத்தம் செய்யுமாறும், அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ மூலம் பதிவு செய்யுமாறும், சுத்தம் செய்வதற்கான செலவு தொகையினை சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர்களிடம் வசூலுக்குமாறும் உத்தர விட்டார். ஒவ்வொரு வாரத்திலும் ஏதேனும் ஒரு நாள் முழுவதும் பூட்டியுள்ள வீடுகளிலும், காலிஇடங்களிலும் சுத்தம் செய்யும் பணியினை மேற்கொள்ளுமாறு கூறினார். மேலும் திருநகர் வார்டு அலுவலகம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், திருநகர் 7 வது பேருந்து நிறுத்த பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த டெங்கு தடுப்பு பணிகளை பார்வையிட்டு பொதுமக்களிடம் வீடுகளை சுற்றி நல்ல தண்ணீர் தேங்காதவாறும், குடிநீரினை மூடி பாதுகாப்பாக வைக்குமாறும், அலுவலர்கள் மழைநீர் வடிகாலினை சுத்தம் செய்யுமாறும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து மண்டலம் எண்.3 வார்டு எண்.56 மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி 6ல் டெங்கு பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு தண்ணீர் பிடித்து வைத்துள்ள பிளாஸ்டிக் டிரம்களை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கழுவி சுத்தம் செய்து பாதுகாப்பாக மூடி வைக்குமாறு கூறினார். சிந்தாமணி மெயின் ரோட்டில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள சின்டெக்ஸ் தொட்டியினை பார்வையிட்டு மூடி பாதுகாப்பாக வைக்குமாறும், மாநகராட்சியின் சார்பில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டிகளை மூடி வைக்குமாறும்,தேவையில்லாத சின்டெக்ஸ் தொட்டிகளை அகற்றுமாறும் உத்தரவிட்டார்.
இது குறித்து அரசு சுகாதாரச் துறை செயலர் அவர்கள் தெரிவித்ததாவது :
தமிழ்நாடு முழுவதும் பருவ காலங்களில் ஏற்படக்கூடிய காய்ச்சல் குறிப்பாக டெங்கு காய்ச்சல் தாக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு போர்க்கால அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர், உள்ளாட்சி அமைப்புகள், பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறையும், குறிப்பாக பொதுமக்களையும் இணைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை, திருநெல்வேலி, சேலத்தில் முக்கிய சில ஒன்றியங்கள், சென்னை அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், சிவகங்கை போன்ற இடங்களில் இதன் தாக்கம் இருந்து கொண்டிருக்கும் காரணத்தினால் எப்படியாவது இந்த பகுதிகளில் நல்ல தண்ணீர் உள்ள இடங்களை கண்டறிந்து பொதுமக்களே அதனை மூடி வைப்பதற்கும், அரசு அலுவலங்களில் வராமல் தடுப்பதற்கு நடவடிக்கை, தனியார் நிறுவனங்களில் நடவடிக்கை என இது மாதிரி கொசு உற்பத்தி காரணிகளை கண்டறிந்து அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக பூட்டிய வீடுகள், பெரிய பெரிய புளு நிற டிரம்களை மூடாமல் இருப்பது, சின்டெக்ஸ் தொட்டிகள் மூடாமல் இருப்பது, கட்டிட பணிகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர், காலிஇடங்களில் திடக்கழிவுகளில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளில் தண்ணீர் தேங்கி நிற்பது, ஷம்புகள், பிட் டேப்கள் போன்றவற்றில்தான் இந்த டெங்கு கொசு வளர்கின்றன. எனவே இவற்றை சுத்தம் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோன்று காலை நேரங்களில் கை புகை தெளிப்பான் அடிக்கும் போது வளர்ந்த கொசு புழுக்கள் அழிப்பதும், வெயில் வந்த பின்னர் டெக்னிக்கல் முறையினை பயன்படுத்தும் படியாக வழிகாட்டுதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வெயிலின் போது இந்த மருந்து பயனற்றதாக உள்ளது என்பதை கண்டறிந்து இந்த புதிய டெக்னிக்கல் முறையை மாற்றியுள்ளோம். அதற்கு தொழில்நுட்ப வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் வரும்போது பொதுமக்களிடம் எங்களது அன்பான வேண்டுகோள் என்னவென்றால் டெங்கு காய்ச்சலும் ஒருவகையான வைரஸ் காய்ச்சல்தான். டெங்கு காய்ச்சல் வந்த ஒரு விழுக்காடு நபர்களுக்கு தட்டணுக்கள் குறைந்து நீர்ச்சத்து வெளியேறும்போது, கிருமி உள்வரும் போது டெங்கு சாட்ஸ் என்றோ, மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படும் காரணத்தினால் காய்ச்சல் கண்டவுடன் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். காலம் தாழ்த்தி வர கூடாது. தமிழக அரசின் சார்பில் 837 செல் கவுண்டர்கள் ரூ.23 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. உடனுக்குடன் தட்டணுக்கள் இரத்த அணுக்கள் அளவை பார்த்து பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்குவதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கக் கூடிய காய்ச்சல் கிளினிக் அமைக்கப்பட்டுள்ளது. தேவையான மருந்துகள் கொடுக்கப்படுகிறது. அதேபோன்று பெரியவர்களுக்கு சித்த மருத்துவ மேற்பார்வையில் நிலவேம்பு கசாயம் கொடுக்கப்படுகிறது. எனவே இதுபோன்ற அனைத்து வசதிகளையும் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார்.
இந்த ஆய்வின்போது ஆணையாளர் மரு.அனீஷ் சேகர், இ.ஆ.ப. துணை ஆணையாளர் திரு.ப.மணிவண்ணன், பொது சுகாதாரத் துறை பயிற்சி நிலைய துணை இயக்குநர் செந்தில்குமார், உதவி நகர்நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையாளர்கள் ரமேஷ், கௌசலாம்பிகை செயற் பொறியாளர்கள் சந்திர சேகரன், சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், சுகாதார அலுவலர்கள் ராஜ்கண்ணன், நாகராஜ், சுகாதார ஆய்வாளர்கள் சுப்புராஜ், வெங்கடசாமி உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.