முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளத்தில் கந்தசஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாணம்

வியாழக்கிழமை, 26 அக்டோபர் 2017      தேனி
Image Unavailable

தேனி -பெரியகுளத்தில் கந்தசஷ்டி விழாவையொட்டி நேற்று திருக்;கல்யாணம் நடைபெற்றது.
கந்த சஷ்டி விழா கடந்த 20ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று காலை வராகநதிக்கரையில் வேலுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர்  அன்னப்பாவாடை சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.  அதனை தொடர்ந்து மாலையில் திருக்கல்யாண வைபவத்திற்காக யாகசாலையில் யாகம் நடைபெற்று பின்னர் முருகப்பெருமான், வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இத்திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து வழக்கறிஞர் அம்பாசங்கர் ஏற்பாட்டில் மெகா அன்னதானம் நடைபெற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து