எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : யாருடைய ஆட்சி குதிரை பேர ஆட்சி என்பது 2 ஜி வழக்கின் தீர்ப்பு வரும் போது தெரியும் என்று எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூடான பதிலடி கொடுத்துள்ளார்.
திருச்சி, அக். 27- மதுரையில் தொடங்கி...
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழக அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 30.06.2017 அன்று மதுரையில் தொடங்கிய விழா தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.
அந்த வகையில் திருச்சி ஜீ கார்னர் மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்தினை திறந்துவைத்தார்.
பல்வேறு திட்டப்பணிகள்
விழாவில் ரூ.212 கோடி மதிப்பிலான 13 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.457 கோடியே 31 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பிலான 45 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், 32,661 பயனாளிகளுக்கு ரூ.102 கோடியே 10 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
2-ஜி விரைவிலே தீர்ப்பு
பின்னர் அவர் விழாவில் பேசியதாவது.,
எதிர்க்கட்சித்தலைவர் நம் ஆட்சியைப் பற்றி விமர்சனம் செய்து கொண்டே இருக்கிறார். எப்பொழுது பார்த்தாலும், நம்முடைய ஆட்சியை குறைசொல்வது தான் வழக்கம். அவர் எப்பொழுது பார்த்தாலும் ஒரு வசனத்தை பேசுவார். இது குதிரைபேர அரசு என்று சொல்வார். யாரை சொல்வார் என்று நமக்குத் தெரியவில்லை. ஏனென்றால், விரைவிலே தீர்ப்பு வருவது உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும். அப்பொழுது யாருடைய ஆட்சியிலே குதிரைபேரம் நடந்தது என்று நாட்டு மக்களுக்குத் தெரியும். அதுமட்டுமல்ல, இன்றைக்கு ஸ்டாலின் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்திருக்கின்றார். மழைக்காலங்களிலே சீதோஷ்ண நிலை மாறுகின்றது. அப்படி சீதோஷ்ண நிலை மாறுகின்றபொழுது, இன்றைக்கு பல்வேறு காய்ச்சல் பொதுமக்களுக்கு வருவது இயல்பு. பலஆண்டுகளாக இப்படித்தான் வந்து கொண்டிருக்கின்றது. மக்களும் அதற்கு தகுந்த சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இப்பொழுது டெங்கு காய்ச்சல் வந்திருக்கின்றது. அந்தக் காய்ச்சலை வைத்து அவர் பேட்டி கொடுக்கும்பொழுது, இந்த ஆட்சி டெங்கு ஆட்சி என்று பெயர் சூட்டியிருக்கின்றார். ஆகவே அவருக்கு அவ்வளவுதான் திறமை, அவ்வளவு தான் புத்திசாலித்தனம் என்றுதான் நான் நினைக்கின்றேன்.
டெங்குக்கு உடனடியாக சிகிச்சை
ஏனென்றால், காய்ச்சல் வருவது இயற்கை, அதை குணப்படுத்துவதற்கு என்ன ஆலோசனை என்று சொன்னால், அது உண்மையிலேயே எதிர்க்கட்சித் தலைவருக்கு பாராட்டிற்குரியது. அதை விட்டுவிட்டு, வேண்டுமென்றே கிண்டல் செய்வது, கேலிசெய்வது, எந்த விதத்திலே நியாயம் என்பதை இந்த நேரத்திலே நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். ஆகவே, நம்முடைய அரசைப் பொறுத்தவரைக்கும், அம்மாவினுடைய அரசைப் பொறுத்தவரைக்கும் இன்றைக்கு விழிப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. டெங்கு காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைகின்ற சூழ்நிலையை நாம்உருவாக்கித் தந்திருக்கிறோம், அதற்குத் தேவையான வசதியையும் நாம் செய்துகொடுத்திருக்கிறோம், போதிய மருத்துவர்கள், செவிலியர்களைநியமித்திருக்கின்றோம். ஆகவே, இந்த டெங்கு கொசு கடித்துத்தான் டெங்குகாய்ச்சல் வருகிறது. டெங்கு கொசு நல்ல தண்ணீரில் தான் உருவாகிறது, பகலிலேகடிக்கின்றது. காய்ச்சல் வந்தவுடன்நாம் அரசு மருத்துவமனைக்கோ, தனியார்மருத்துவமனைக்கோ சென்று ரத்த பரிசோதனை செய்து, என்ன காய்ச்சல்என்பதைக் கண்டறிந்து, உடனடியாக அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் குணமாகி விடும். இது இயல்பான ஒன்று. நம்முடைய அரசைப் பொறுத்தவரைக்கும் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எல்லா மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உத்தரவு வழங்கியிருக்கிறது. அது மட்டுமல்ல, துறைசெயலாளர்களை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமித்து, அந்த மாவட்டத்திலே எங்கெங்கெல்லாம் டெங்கு பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதையெல்லாம் கண்டறிந்து, அதற்கு தீர்வு காணுகின்ற சூழ்நிலையை உருவாக்கியிருக்கின்றோம்.
ஒத்துழைப்பு தரவேண்டும்
டெங்கு காய்ச்சல் இன்றைக்கு படிப்படியாக குறைந்து கொண்டிருக்கின்றதுஎன்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அம்மாவினுடைய அரசு விழிப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த காய்ச்சலுக்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஆகவே, இந்த டெங்கு கொசு நல்லதண்ணீரில் உருவாகின்றது. ஆகவே, வருகை தந்திருக்கின்ற பொதுமக்கள், கழகநிர்வாகிகள், தொண்டர்கள், நீங்கள் மக்களிடத்திலே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தாங்கள் சேமித்து வைக்கின்ற தண்ணீரை மூடிவைக்கவேண்டும். இல்லாவிட்டால், டெங்கு கொசு, அதில் முட்டையிட்டு அங்கே கொசு உற்பத்தியாகி இந்த காய்ச்சல் வருவதற்கு காரணமாகி விடும். ஆகவே, இதை தடுப்பதற்குபொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தரவேண்டும்.
டெங்கு காய்ச்சலை தடுப்போம்
பொதுமக்களுடையஒத்துழைப்பு இல்லாமல் எந்த திட்த்தையும் நிறைவேற்ற இயலாது. டெங்கு கொசு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டுமென்று சொன்னால், பொதுமக்களுடைய ஒத்துழைப்பு அரசுக்கு தேவை, அவர்களுடைய முழு ஒத்துழைப்புடன் டெங்கு கொசுவை முற்றிலும் ஒழிப்போம். டெங்கு காய்ச்சலை தடுப்போம். அதுமட்டுமல்ல, எம்.ஜி.ஆர். ஆட்சியிலும் சரி, அம்மாவினுடைய ஆட்சியிலும் சரி, எண்ணற்ற திட்டங்களை நாம் செயல்படுத்தியிருக்கின்றோம்.
ஒப்பிட்டுப் பாருங்கள்
அதே நேரத்திலே, தி.மு.க ஆட்சி என்ன செய்தது என்று எண்ணிப் பாருங்கள். அவர்கள் என்ன செய்தார்கள், நம்முடைய இருபெரும் தலைவர்கள் இந்த நாட்டிற்குஎன்ன செய்தார்கள் என்று ஒப்பிட்டுப் பாருங்கள். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தையேஎடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு முன்னாலே பேசிய உங்கள் மாவட்ட அமைச்சர் கூறினார். அம்மாவினுடைய ஆட்சியிலே போடப்பட்ட திட்டங்கள், அதனால் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் ஏராளம் என்று பட்டியலிட்டு சொன்னார்கள். திமுக ஆட்சியில் ஒன்றையாவது சொல்ல முடியுமா? எண்ணிப் பாருங்கள். ஆகவே, இருபெரும் தலைவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை கொடுத்ததன் மூலம் இந்த மாவட்டம் வளர்ச்சிப் பாதையிலே சென்று கொண்டிருக்கின்றது என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.
எள்ளளவும் சிந்திக்கவில்லை
மத்தியிலே காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்திலே இருந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் அதில் பங்கு பெற்றது. அப்பொழுது காவிரி நதிநீர் பிரச்சினைவந்தது, அதற்காக குரல் கொடுத்தார்களா? காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா? இல்லை. ஆட்சி அதிகாரத்திலே, பதவி சுகத்தைக் கண்டார்கள், இந்தெந்த இலாகா வேண்டுமென்று கேட்டு பெற்றார்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்களைப் பற்றி எள்ளளவும் சிந்திக்கவில்லை. ஆனால் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி இன்றைக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடிய ஒருசூழ்நிலையை உச்சநீதிமன்றத்தின் மூலமாக நமக்கு கிடைத்தது. ஆகவே, திருச்சிராப்பள்ளி மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதியாக இருக்கின்றது. காவிரிநீர் பாசனம் பெறுகின்ற பகுதியாக இருக்கின்றது. அந்த மக்களுக்கு உச்சநீதிமன்றத்தின் மூலமாக புரட்சித்தலைவி அம்மா சட்டப் போராட்டம் நடத்தி, நமக்கு தீர்வு தந்த ஆட்சி அம்மாவினுடைய ஆட்சி என்பதை சொல்லிக் கொள்ளகடமைப்பட்டிருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.