முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தின் புதிய கட்டிட திறப்பு விழா

வெள்ளிக்கிழமை, 27 அக்டோபர் 2017      தூத்துக்குடி
Image Unavailable

 

திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தின் புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் நேற்று காலை கானொளி காட்சி மூலம் திறந்துவைத்தார். திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் திருச்செந்தூர் டிராவலர்ஸ் பங்களா எதிரில் கட்டப்பட்டு அதற்கான பணிகள் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், கானொளி காட்சி மூலம் இக்கட்டிடத்தை திறந்துவைத்தார்.

இதனைத்தொடர்ந்து திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தின் புதிய கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி மகேந்திரன் குத்துவிளக்கு ஏற்றிவைத்தார். தொடர்ந்து காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்செந்தூர் சார்பு நிதிமன்ற நீதிபதி திலிப் நிகோலஸ், திருச்செந்தூர் நீதித்துறை நீதிமன்ற நீதிபதிகள் சிவாஜி செல்லையா, தினேஷ்குமார், தாசில்தார் அழகர், டிஎஸ்பி தீபு, டவுன் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி மனோரஞ்சிதம், இன்ஸ்பெக்டர்கள் பிச்சையா, ரெகுராஜன், ஷிஜாராணி, விஜயகுமார், சிவலிங்கம் மற்றும் காவல்துறையினர் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து