முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் முன்னாள் மாணவ, மாணவியர் சங்க துவக்க விழா

ஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2017      தூத்துக்குடி
Image Unavailable

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி பிள்ளையன்மனையில் பொருளியல் துறையில் பயின்ற முன்னாள் மாணவ, மாணவியர் சங்க துவக்க விழா நடைபெற்றது. முன்னாள் மாணவர் ராஜேஷ் ஆரம்ப ஜெபம் செய்தார். துறைத்தலைவர்  சலோமி கிறிஸ்டிலைட் அனைவரையும் வரவேற்றார். மயிலாப்பூர் உதவி ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்ற மாணவர் ஐசக் பால்ராஜ் பொருளியல் துறை முன்னாள் மாணவ, மாணவியர் சங்கத்தினை துவக்கி வைத்தார். முன்னாள் துணை ஆட்சியர் அருமைநாயகம், முன்னாள் பொருளியல் துறைத்தலைவர் ராஜாமணி, சங்கரன்கோவில் மனோ கல்லூரி முதல்வர்  கிருபாகரன், போப் கல்லூரி முன்னாள் பேராசிரியர்  ஜெயசிங், மற்றும் முன்னாள் தலைமையாசிரியர் ரூபன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.  

பலர் பங்கேற்பு

தற்போது பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை பெறுவதற்கு பயிற்சி வகுப்புகள் நடத்திட தீர்மானிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர்  அருள்ராஜ் பொன்னுதுரை, துணை முதல்வர்  பாஸ்கர் ராஜபால், பொருளியல் துறை பேராசிரியர்கள் உட்பட 1970-ஆம் ஆண்டு முதல் பயின்ற முன்னாள் மாணவ, மாணவியர் திரளாக கலந்து கொண்டனர். பொருளியல் துறை பேராசிரியர் சுரேஷ் ஆபிரகாம் பிரதாப் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பொருளியல் துறைத்தலைவர் ஆலோசனையின்படி பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவ, மாணவியர்  செய்திருந்ததை கல்லூரிச் செயலர் எஸ்.டி.கே. ராஜன் பாராட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து