முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வால்பாறையில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகள் வழங்கும் விழா எம்.எல்.ஏ.கஸ்தூரிவாசு பங்கேற்பு

வியாழக்கிழமை, 2 நவம்பர் 2017      ஈரோடு
Image Unavailable

வால்பாறையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகள் வழங்கும் விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு, நகர செயலாளர் மயில் கணேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவில் வால்பாறை, முடீஸ், சோலையார், அட்டகட்டி உள்ளிட்ட அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள  440 மாணவர்களுக்கு மடிக்கணினிகள்  மற்றும் 450 மாணவர்களுக்கு மிதிவண்டிகள் ஆக மொத்தம் 5 பள்ளிகளில் உள்ள 890 மாணவர்களுக்கு வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு வழங்கி வாழ்த்துக்கூறினார். முன்னதாக அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராபின்சன் அனைவரையும் வரவேற்றார்.

இவ்விழாவில் ஆசிரியர் பெருமக்கள், நகர துணை செயலளர் பொன் கணேஷ், வழக்கறிஞர் ஆர்.ஆர்.பெருமாள், பேரவை தலைவர் பாபுஜி, கேஸ் கடை சண்முகம், வியாபாரிகள்சங்க தலைவர் ஜெபராஜ், நகர பேரவை செயலாளர் கேபிள் நரசப்பன், நகர பாசறை செயலாளர் ஜெ.மணிகண்டன்,மிச்சர் கடை முருகன் ,இளைஞரணிசெயலாளர் செல்கணேசன், கழக நிர்வாகிகள் சசிகுமார், சௌந்தரராஜன்,எம்.ஆர்.எஸ்.மோகன்,எஸ்.கே.எஸ்.பாலு  மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து