முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவாஸ் ஷெரீப் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சனிக்கிழமை, 4 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் பதவி வகித்தபோது அவரும் அவரது குடும்பத்தினரும் லண்டனில் சட்டவிரோதமாக சொகுசு வீடுகள் வாங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுபடி பாகிஸ்தான் பொறுப்புடைமை ஆணையம், நவாஸ் ஷெரீப் அவரது 2 மகன்கள், மகள், மருமகன் மீது வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை இஸ்லாமாபாத்தில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் மனைவி குல்சூமை கவனித்துக் கொள்ள நவாஸ் லண்டன் சென்றார். இதனால் ஊழல் வழக்கு விசாரணையின்போது ஆஜராகவில்லை. ஆனால், அவருக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து நவாஸ் நேற்று முன்தினம் இஸ்லாமாபாத் திரும்பினார்.
.
நவாஸ் மீதுள்ள 3 வழக்குகளை ஒரே வழக்காக மாற்ற கோரி லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் இந்த மனு குறித்து நவாஸ் வழக்கறிஞர் நேற்று எடுத்துரைத்தார். பின்னர் நீதிபதி, உயர் நீதிமன்ற நோட்டீஸ் வரவில்லை. எனவே 7-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து