முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை கலெக்டர் இல.சுப்பிரமணியன், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை இணைந்து டெங்கு கொசு ஒழிப்பிற்கென மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கலெக்டர் இல.சுப்பிரமணியன்,அவர்களின் நேரடிப் பார்வையில், டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் தினந்தோறும் நடைபெற்று வருகிறது.அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட மகாவிஷ்ணு தெருவில் வீடு வீடாக சென்று தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழு உள்ளதா எனவும், கழிவுநீர் வாய்க்கால்கள், தேவைற்ற பொருட்களான பழைய டயர்கள், மண்பாண்டங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், ஆட்டுஉரல்கள் ஆகியவற்றில் நீர் தேங்கி உள்ளதா எனவும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  சுகாதாரமற்ற முறையில் இருந்த வீடுகளுக்கு நகராட்சி ஆணையர் மூலம் நோட்டீஸ் வழங்க, கலெக்டர் அவர்கள் உத்தரவிட்டார்.மேலும் மகாவிஷ்ணு கோவில் தெருவில் புதியதாக கட்டப்பட்டு வரும் தனியார் வீட்டில் ஆய்வு மேற்கொண்டபோது, வீட்டின் மேற்புறத்தில் தண்ணீர் தேங்கி அதிக அளவு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  அவ்வீட்டின் உரிமையாளாருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கவும், அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆய்வு மேற்கொண்டதில், சுகாதாரமற்ற  முறையில், தண்ணீர் தேங்கி கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டதால், திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு ரூ.10,000ஃ- அபராதம் விதிக்கவும் நகராட்சி ஆணையருக்கு கலெக்டர் அவர்கள் உத்தரவிட்டார்.தொடர்ந்து, அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்தும், டெங்கு கொசு ஒழிப்பு குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியை சுத்தமாக பராமரித்தாலே டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்க முடியும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன், தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வி.மகேந்திரன், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, விழுப்புரம் வட்டாட்சியர் சுந்தரராஜன், விழுப்புரம் நகராட்சி ஆணையர் செந்திவேல், நகராட்சி மருத்துவ அலுவலர் ராஜா, நகராட்சி பொறியாளர் சுந்தரேசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து