எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவாரூர் மாவட்ட நன்னிலம் வட்டம் ஆண்டிபந்தல் ஊராட்சியில் 64 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் கலந்து கொண்டு ரூ.3 கோடியே 18 லட்;சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கே.கோபால் முன்னிலை வகிக்க, மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தலைமை வகித்தார்.
கடனுதவி
உணவுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது.. மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் அரசு ஏழை, எளிய சாதாரண மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறது.விவசாயிகளின் பாதுகாவலராகவும் திகழ்ந்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி,குடவாசல், நன்னிலத்தில் கல்லூரி வழங்கி மாணவ,மாணவிகளின் கல்லூரி படிப்புக்கு வழிகாட்டிய அரசு மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு. தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி காவேரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியீட்டு வெற்றி கண்டவர் முன்னாள் முதலமைச்சர் அம்மா ஆவர். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பயிர்க்காப்பீட்டு தொகையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் செலுத்திட வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 2016 – 2017 ஆம் ஆண்டில் 44 ஆயிரத்து 286 விவசாயிகளுக்கு ரூ.163 கோடியே 29 லட்சம் குறுகிய கால பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் நகைக்கடனாக 43 ஆயிரத்து 115 விவசாயிகளுக்கு 87 கோடியே 68 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் தொழில் முனைவோர் கடனாக 225 நபர்களுக்கு ரூ.54 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 2017-2018 நிதியாண்டில் தற்போது வரை 27 ஆயிரத்து 254 விவசாயிகளுக்கு குறுகிய கால பயிர்க்கடனாக ரூ.107 கோடியே 2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நகைக்கடனாக 25 ஆயிரத்து 540 விவசாயிகளுக்கு ரூ.56 கோடியே 19 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் தொழில் முனைவேர் கடனாக 51 நபர்களுக்கு ரூ.26 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுயஉதவிக்குழு கடன் , பண்ணைசாராக் கடன், மாற்றுத்திறனாளிகளுக்கு கடன், சிறுவணிகக் கடன் போன்ற பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் 137 கூட்டுறவு கடன் சங்கங்களில் தமிழகத்திலேயே எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் 130 கூட்டுறவு கடன் சங்கங்கள் முழுவதுமாக கணினிமயமாக்கபட்டுள்ளது.
எனவே கூட்டுறவுத்துறையானது சாதாரண மக்களின் குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் உயரவும், வாழ்வில் பின் தங்கியுள்ளவர்களின் சமூக பொருளாதார நிலை மேம்படுத்தவும் வழிவகை செய்கிறது. இன்றையதினம் 948 நபர்களுக்கு 3 கோடியே 18 லட்சம் மதிப்பிலான தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், மத்திய கூட்டுறவு வங்கி மூலம் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இக்கடனுதவிகளை நல்லமுறையில் பயன்படுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்தார். முன்னதாக கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு மாவட்ட அளவில் பேச்சு போட்டி,கட்டுரைப் போட்டியில் , ஒவியப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சிறந்த முறையில் சேவையாற்றிய கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களையும் உணவுத்துறை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கூட்டுறவு சங்களின் துணைத்தலைவவரும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான எஸ்.ஆசைமணி, மாவட்ட வருவாய் அலுவலர் க.சக்திமணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் காந்திநாதன், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் ரமணிதேவி, வருவாய் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி, தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணைத் தலைவர் ஆர்.கே.பி.விஸ்வநாதன், திருவாரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் அர்ச்சுணன், திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் கலியபெருமாள், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணைய துணைத்தலைவர் சி.பி.ஜி.அன்பு, நன்னிலம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சம்பத், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராமகுணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.