எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 9-வருவாய் வட்டங்கள் செயல்பட்டு வருகிறது. 10-வது வருவாய் வட்டமாக நம்பியூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் தோற்றுவிக்கப்பட்டு அதன் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் தலைமையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குத்து விளக்கேற்றி புதிய வருவாய் வட்டத்தை துவக்கி வைத்தார்.
புரட்சித்தலைவி அம்மா பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்கள். அம்மா அவர்களின் நல்லாசியுடன் நடைபெறும் இந்த அரசு அறிவித்த அனைத்து திட்டங்களையும் சிறப்பான முறையில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. நமது தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் இனி வரும் காலங்களில் மத்திய அரசு கொண்டு வரும் எந்த ஒரு பொதுத்தேர்வுகளையும் சந்தித்து அதில் சாதிக்கும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. மாணவ, மாணவியர்கள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற கூடுதல் கட்டணம் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியானது விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்படவுள்ளது. ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட்டதன் மூலம் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மேலும் கூடுதலாக அரசு பள்ளிகள் மற்றும் பள்ளி கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் மாணவ, மாணவியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்கள் அனைத்து தகவல்களையும் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ள வசதியாக ர்நடி டுiநெ என்ற திட்டமானது விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவியர்கள் தங்களது மாற்றுச் சான்றிதழ்களை இந்தியாவின் எந்தப்பகுதியில் இருந்தும் இணைதளம் மூலம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாணவ, மாணவியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு திட்டப்பணிகளை மிக துரிதமாக மேற்கொண்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்த்திடும் வகையில் ஈரோடு மேம்பால பணியானது இன்னும் 6 மாதத்திற்குள் விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஈரோடு மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றிடும் வகையில் 543 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஊராட்சி கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவியர்கள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடியும் பொழுதே அவர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் வகையில் தொழிற்பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பாடத்திட்டங்களை மாற்றி அமைத்திட 7 நபர் கொண்ட குழுவானது அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. புதிய பாடத்திட்டங்களை புரிந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாக ஆசியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் கோபிசெட்டிபாளையம் வட்டம் மற்றும் சத்தியமங்கலம் ஆகிய வட்டங்களை மறு சீரமைத்து புதிய 10-வது வட்டமாக நம்பியூர் வட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி ஆணை வெளிடப்பட்டதைத்தொடர்ந்து இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
நம்பியூர் பகுதி மக்கள் தங்கள் கோரிக்கைக்காக வட்ட தலைமையிடத்தை அடைய வெகுதூரம் செல்ல வேண்டி இருப்பதாலும், அரசின் நலத்திட்டங்கள் விரைந்து கிடைத்திடவும், பொருளாதார முன்னேற்றம் ஏற்படவும், 27 கிராமங்களுடன் நம்பியூரை தலைமையிடமாகக் கொண்ட புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையிலும் நம்பியூர் வருவாய் வட்டமானது உருவாக்கப்பட்டுள்ளது. நம்பியூர் வட்டம் புதிதாக உருவாக்கப்படும்போது கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் 9 கிராமங்களுடன் வேமாண்டம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய குறுவட்டம் உருவாகும். மேலும் கோபிசெட்டிபாளையம் வட்டம் காசிபாளையம் உள்வட்டத்தில் உள்ள கடத்தூர் கிராமத்தை புதிதாக உருவாக்கப்படும் நம்பியூர் வட்டத்தின் எலத்தூர் உள்வட்டத்தில் சேர்ப்பதால் காசிபாளையம் உள்வட்டத்தின் வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை 6-ல் இருந்து 5 ஆக குறையும். கோபிசெட்டிபாளையம் உள்வட்டத்தில் மொத்தம் உள்ள 15 கிராமங்களில் அளுக்குளி-அ,அளுக்குளி-ஆ, சோழமாதேவிக்கரை, கோட்டுப்புள்ளாம்பாளையம் ஆகிய 4 வருவாய் கிராமங்களை காசிப்பாளையம் உள்வட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
நம்பியூர் வட்டத்தில் 27 கிராமங்கள் மட்டுமே இருப்பினும், இவற்றில் அடங்கியுள்ள 6 ஆ வகை கிராமங்களையும் சேர்த்து 33 கிராமங்கள் உள்ளது. உத்தேசிக்கப்பட்ட நம்பியூர் வட்டத்தில் உள்ள 4 கிராமங்கள் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளபோதும் இவை நம்பியூர் வட்ட தலைமையிடத்திற்கு அருகில் உள்ளதால் பொதுமக்கள் எளிதாக அணுக இயலும். எனவே பொதுமக்கள் நலன் கருதி புதிதாக நம்பியூர் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக தோற்றுவிக்கப்படும் நம்பியூர் வட்டத்திற்கு 16 பணியிடங்கள் மறுபரவலமர்த்தல் மூலமும், 27 பணியிடங்கள் புதிதாக உருவாக்கியும் ஆக மொத்த 43 பணியிடங்கள், தொடர் செலவினமாக ரு.58,76,100/- மதிப்பிலும், தொடரா செலவினமாக ரூ.18,36,000/- மதிப்பிலும் புதிதாக ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களின் தேவையறிந்து அவற்றை நிறைவேற்றித்தருகின்ற அரசுக்கு உறுதுணையாக இருப்பதோடு, அரசு வழங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளை பெற்று தங்கள் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, கோபி வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
அமெரிக்கா: விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
22 Apr 2024நியூயார்க் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதிக்க நிபுணர் குழு அமைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவு
22 Apr 2024டெல்லி : கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதனை செய்ய நிபுணர் குழு அமைக்கும்படி டெல்லி எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை
22 Apr 2024மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.