முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசிகையுடன் செல்பி எடுத்த பாலிவுட் நடிகருக்கு காவல்துறை அறிவுரை

வியாழக்கிழமை, 23 நவம்பர் 2017      சினிமா
Image Unavailable

மும்பை, 'சாகசங்கள் செய்வதை சினிமாவுடன் நிறுத்திக் கொள்ளுங்கள், நிஜ வாழ்க்கையில் வேண்டாம்' என்று பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கு மும்பை காவல்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

முன்னதாக, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ஆட்டோவில் பயணித்த ரசிகை ஒருவர் அருகில் பாலிவுட் நடிகர் வருண் தவானின் கார் நிற்பதைப் பார்த்தார். உடனே அவரைப் புகைப்படம் எடுத்தார். அடுத்ததாக செல்பி எடுக்க முயன்ற ரசிகையிடம் போனை வாங்கி செல்பி எடுத்துக் கொடுத்தார் வருண். அப்போது கார் மற்றும் ஆட்டோவுக்கு வெளியே இருவரும் தங்கள் தலையை நீட்டியவாறு இருந்தனர்.
இதுதொடர்பாக புகைப்படத்தோடு செய்தி வெளியானது. அதைக் குறிப்பிட்டு தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட காவல்துறை, ''வருண் தவான், இத்தகைய சாகசங்கள் வெள்ளித்திரையில் செல்லுபடியாகும். ஆனால் கண்டிப்பாக மும்பை நகரச் சாலைகளில் இல்லை.

நீங்கள் உங்கள் வாழ்க்கையோடு உங்களின் ரசிகர்கள் மற்றும் சிலரின் வாழ்க்கையிலும் ஆபத்தை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். இளைஞர்களின் அடையாளமாகிய உங்களிடம் இருந்து சிறப்பான செயல்பாடுகளையே எதிர்பார்க்கிறோம்'' என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக பதிலளித்துள்ள வருண், ''மன்னிப்பு கோருகிறேன். அப்போது சாலையில் வாகனங்கள் அனைத்தும் நின்றுகொண்டுதான் இருந்தன. ரசிகையின் மனம் புண்படக்கூடாது என்ற எண்ணத்தில்தான் அவ்வாறு செயல்பட்டேன். இனி பாதுகாப்பையும் கருத்தில் கொள்வேன் '' என்று பதிவிட்டுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து