முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கௌரிசெட்டிப்பட்டி மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வியாழக்கிழமை, 23 நவம்பர் 2017      தர்மபுரி
Image Unavailable

 

பென்னாகரம் வட்டம் பிளியனூர் ஊராட்சி கௌரிசெட்டிப்பட்டி மகாசக்திமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.கௌரிசெட்டிப்பட்டியில் மகாசக்தி மாரியம்மன் கோயில் புதிய கோபுரம் மற்றும் மகாசக்தி மாரியம்மன் மகாசக்தி விநாயகர் அஷ்டபந்தனத்துடன் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

17-ம் தேதி வெள்ளிக்கிழமை அலய முகூர்த்தக்கால் நாட்டி முலைப்பாரி விட்டு கங்கனம் கட்டுதல் நடைபெற்றது.நேற்று முன்தினம் காலை முலைப்பாரி அழைத்து அம்மன் கரிவலம் நடைபெற்றது.பினர் கோபுர லச ஸ்தாபிதம் விநாயகர், மகாசக்தி மாரியம்மன் நவக்கிரகங்கள் எந்திரஸ்தாபிதம் பஞ்சலோகம் வைத்து கருவறையில் அம்மன் எழுந்தருளி அஷ்டபந்தனம் நடைபெற்றது.

108 மூலிகை யாம்,நாடி சந்தனம் தீபாரதனை மகாபூணாகுதி நடைபெற்றது.சகல தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் மகா அபிஷேகம் மற்றும் பால்குட அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆண்களும் பெண்களும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து