முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்பு செழியனுக்கு வக்காலத்து வாக்கும் நடிகர் - நடிகைகள்

வெள்ளிக்கிழமை, 24 நவம்பர் 2017      சினிமா
Image Unavailable

சென்னை, பைனான்ஸியர் அன்புச்செழியன் ரொம்ப நல்லவர், ஸ்வீட்டானவர், மரியாதையானவர் என்று நடிகை தேவயானி தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் அசோக் குமாரின் தற்கொலைக்கு காரணமான பைனான்ஸியர் அன்புச்செழியன் ஒரு காலத்தில் நடிகை தேவயானியை பணத்திற்காக மிரட்டியதாக பேசப்பட்டது.

இந்நிலையில் அன்புச்செழியன் பற்றி தேவயானி பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் தேவயானி கூறியிருப்பதாவது,

கொடுக்க வேண்டிய பணத்தை சரியான நேரத்தில் அன்புவிடம் கொடுத்துவிட்டோம். என்னை பொறுத்த வரைக்கும் எப்போது அவரை சந்தித்தாலும் ரொம்ப நல்லவர், ரொம்ப மரியாதையுடன் ஸ்வீட்டாக பேசுவார் பழகுவார்.

நான் அவரை இரண்டு முறை தான் சந்தித்துள்ளேன்.  நாங்கள் எல்லோரும் தயாரிப்பாளர்களாக அவரிடம் வாக்கு கேட்க சென்றபோது பார்த்திருக்கிறேன்.

அவர் எங்களுக்கு எந்த தொல்லையும் கொடுக்கவில்லை. படப்பிடிப்பு தளத்திற்கு வருவதோ தொல்லை கொடுப்பதோ இல்லை. ரொம்ப நைஸ், ஸ்வீட்டான நபர். எப்பொழுதுமே அப்படித் தான் பார்த்திருக்கிறோம்.
அவருடைய மகளுக்கு கூட தோல் அலர்ஜி இருக்கும்போது என் கணவரிடம் தான் டாக்டரை பரிந்துரைக்குமாறு கேட்டார். என் கணவர் தான் ஒரு நல்ல மருத்துவரை பரிந்துரை செய்தார். அவர் ரொம்ப நல்ல நைஸ், ஸ்வீட் பர்சன் என்றார் தேவயானி.

  டைரக்டர் சுந்தர் சி. கருத்து

அன்பு அண்ணன் நல்லவர், அவரை பற்றி மத்தவங்க சொல்வது எல்லாம் சுத்த பொய் என இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி. தெரவித்துள்ளார்.

பைனான்ஸியர் அன்புச்செழியனின் தொல்லை தாங்க முடியவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் அன்புச்செழியன் குறித்து இயக்குனர் சுந்தர் சி. கூறியிருப்பதாவது,

கடந்த 8 ஆண்டுகளாக என் தயாரிப்புகளுக்கு எல்லாம்  அண்ணனிடம் தான் பணம் வாங்கிக் கொண்டிருக்கிறேன். வருகிற நியூஸ் எல்லாம் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர் அதை எழுது வாங்கிவிட்டார், இதை எழுதி வாங்கிவிட்டார்னு வருகிறது.

உண்மையை சொல்லப் போனால் என்கிட்ட அது மாதிரி எதுவுமே கிடையாது. நான் பண்ணிக் கொண்டிருக்கிற கலகலப்பு 2க்கு கூட அன்பு அண்ணன் தான் பைனான்ஸ் பண்ணியிருக்கிறார். இந்த படத்திற்காக இவ்வளவு பணம் வாங்கிக் கொண்டோமே தவிர மத்தவங்க சொல்கிற மாதிரி வெத்து பேப்பரில் கையெழுத்து வாங்கிட்டாரு, பிளாங்க் செக்கில் கையெழுத்து வாங்கிட்டார்னு சொல்வது எல்லாம் சுத்தமாக வடிகட்டிய பொய். என்னுடைய அனுபவத்தில் அது போன்று எதுவும் நடக்கவில்லை.

அதே மாதிரி நான் பணம் கொடுக்க தாமதம் ஆகியிருக்கிறது. எனக்கே மனசாட்சி உறுத்தும். அண்ணன் ஒரு வாரம் மிஸ்ஸாகிறது என்றால் கூட பரவாயில்லை வரும்போது அனுப்புங்க என்பார்.

அதே மாதிரி சினிமா ரிலீஸுக்கு முன்னாடி எல்லா பைனான்ஸியரும் கழுத்தில் கை வைப்பாங்க. பணத்தை கொடுத்துவிட்டு தான் படத்தை ரிலீஸ் செய்யணும் என்பார்கள். ஆனால் அன்பு அண்ணன் அந்த மாதிரி நெருக்கடி கொடுத்ததே கிடையாது. சினிமா கஷ்டம் தெரிந்த ஒரு பைனான்ஸியர் அவர்.
இத்தனை வருடங்களில் அவருடன் ஒரு சின்ன மனக்கசப்பு கூட ஏற்பட்டது இல்லை. பணம் வேண்டும் என்றால் நடுராத்திரியில் கூட அவருக்கு போன் செய்து தாராளமாக கேட்கலாம் என்கிறார் சுந்தர் சி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து