முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் புள்ளியியலாளர் தேர்வு: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2017      சேலம்
Image Unavailable

 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் புள்ளியியலாளர்(ளுவயவளைவiஉயைn) தேர்வினை கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் பாலுசாமி ஆகியோர் நேற்று (26.11.2017) ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வு மேற்கொண்ட பிறகு கலெக்டர் தெரிவித்ததாவது.

கலெக்டர் பேட்டி

 

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் புள்ளியியலாளர் (ளுவயவளைவiஉயைn) தேர்விற்கு 1570 தேர்வாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் இன்றைய தினம் 1013 தேர்வாளர்கள் பங்கேற்று இத்தேர்வினை எழுதினர். இத்தேர்வு நேர்மையாக நடத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில் தேர்வு மையங்களில் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்வினை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும்படை, கண்காணிப்பு குழு, தலைமை கண்காணிப்பாளர் ஆகியோர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள் சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுபவர்களின் நுழைவு சீட்டு ஆகியவற்றை சரிபார்த்தல் போன்ற பணிகளை சிறப்பாக மேற்கொண்டனர்.

சேலம் மாவட்டத்தில் இன்றைய தினம் 5 மையங்களில் நடைபெறும் தேர்வு மையங்களில் ஒன்றான கோகுலநாத இந்து மகாஜன மேல்நிலைப்பள்ளியில் நேரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுது. இவ்வாறு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து