எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து மன்னித்துவிடுங்கள் என்று 'சக்கப் போடு போடு ராஜா' இசை வெளியீட்டு விழாவில் சிம்பு தெரிவித்தார்.
சேதுராமன் இயக்கத்தில் சந்தானம், வைபவி சாண்டியல்யா, விவேக், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சக்கப் போடு போடு ராஜா'. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார் சிம்பு. விடிவி கணேஷ் தயாரித்திருக்கிறார்.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இசையை வெளியிட்டார்.
இவ்விழாவில் சிம்பு பேசியதாவது: இசையமைப்பாளராக இந்த மேடையில் நிற்பது சந்தோஷமாக இருக்கிறது. இப்படத்தை நான் ஒப்புக் கொண்டதற்கு காரணம் சந்தானம். நல்ல திறமைசாலி ஆகையால் இவர் தமிழ் சினிமாவுக்கு வர வேண்டும் என நினைத்தேன். இன்றைக்கு அவர் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் என நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.
இசை என்பது ரொம்பப் பிடித்த விஷயம். இளையராஜா சாரின் இசையை கேட்டு வளர்ந்தவன் நான். அதே போன்று மைக்கேல் ஜாக்சனும் பிடிக்கும். இவர்கள் இருவரும் எனக்கு தூண்டுகோலாக இருந்திருக்கிறார்கள். அப்பாவும் சிறுவயதிலிருந்து குருமாதிரி கூடவே இருந்து இசையை சொல்லிக் கொடுத்திருக்கிறார். எனது மானசீக குருவாக ரஹ்மான் சாரைப் பார்க்கிறேன். பிறகு நண்பராக, குருவாக இருந்தவர் யுவன் சங்கர் ராஜா. நல்ல உள்ளம் கொண்ட மனிதர். என்னை புரிந்து கொள்வது மிகவும் கடினம்.
என்னை புரிந்துக் கொண்டு எனது டார்ச்சரை எல்லாம் தாங்கிக் கொண்டு, ஒரு நாள் கூட இப்படி பண்ணலாமே என்று சொன்னதே கிடையாது. மிக்க நன்றி யுவன் சார். நான் இன்றைக்கு இசையமைப்பாளராக உருவாகியிருப்பதற்கு அவர் ஒரு மிகப்பெரிய காரணம். தேவா சார், வித்யாசாகர் சார், ஹாரிஸ் ஜெயராஜ் சார், ஸ்ரீகாந்த் தேவா, ஜி.வி.பிரகாஷ், தரண், தமன், குறள் மற்றும் ப்ரேம்ஜி என நான் பணிபுரிந்த இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி.இந்த மேடையில் வாலி சார் இல்லாதது வருத்தமாக இருக்கிறது.
என் முதல் படத்திலிருந்து பாடல் வரிகள் எழுதியிருக்கிறார். இப்படத்துக்கு பாடல்கள் எழுதிய அனைவருக்கும் நன்றி. படமும் அற்புதமாக வந்திருக்கிறது.சிம்புவுக்கு பிரச்சினை என்றால் தனுஷ், தனுஷுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் சிம்பு. 'காதல் கொண்டேன்' படம் நானும் தனுஷ் சாரும் இணைந்து ஆல்பட் திரையரங்கில் இணைந்து பார்த்திருக்கிறோம்.
தன்னம்பிக்கை இல்லையென்றால் எப்படி வாழ்வது?. அன்றைய தினத்தில் நாம் இருவரும் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களாக வருவோம் சார் என்று தனுஷிடம் சொன்னேன். எங்கள் இருவருக்குள்ளும் போட்டி, பொறாமை இருக்கிறது என்று வெளியே சொல்கிறார்கள். ஆனால், எங்கள் இருவருக்குள்ளும் உண்மையான அன்பு இருக்கிறது. அந்த அன்பு என்றைக்குமே இருக்கும்.
அதற்காக இங்கு வந்திருக்கிறார். தன்னடக்கமானவர் என்றால் அது தனுஷ்தான்.அவருடைய உயரத்திற்கு தலைக்கனம் இருந்திருந்தால் காணாமல் போயிருப்பார். அவர் போயிருந்தால் நானும் போயிருப்பேன். பலரும் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி என கேட்கிறார்கள். அதற்கு காரணம் தனுஷ் தான். அவர் சரியான படங்களைத் தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதனால் எனக்கு எந்தவொரு பிரச்சினையுமே இல்லை என நினைக்கிறேன். என்ன செய்தாலும், "ஆமாம்டா என்ன இப்போ" என்று பேசிய பழகிவிட்டேன். பலரும் குறை சொல்லும் போது, நம் மீதும் ஏதோ தப்பு இருக்க வேண்டும் அல்லவா. தப்பு இல்லாமாலா சொல்லிக் கொண்டே இருப்பார்கள். என் மீதும் தப்பு இருக்கிறது.
அதையும் ஒப்புக் கொள்கிறேன். 'AAA' படம் சரியாக போகவில்லைதான். ரசிகர்களுக்காக ஜாலியாக செய்த படம் அது. கொஞ்சம் அதிக செலவானதால், 2- பாகங்களாக போக வேண்டியதாகிவிட்டது. அதனால் தயாரிப்பாளருக்கு மனக்கஷ்டம் இருந்தது. என்னவென்றால் படம் நடக்கும் போதோ, முடிந்த உடனேவோ அல்லது 1 மாதம் கழித்தோ சொல்லியிருக்கலாம். 6 மாதம் கழித்து வேறு யாரோ சொல்கிறார்கள் என்னும் போதுதான் வருத்தமாக இருக்கிறது.
நான் ஏதாவது தவறு செய்திருந்தால், இச்சமயத்தில் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் நல்லவன் என்று சொல்லவில்லை, என்ன தவறு செய்தேன் என்று எனக்குத் தெரியும்.இப்பிரச்சினையால் நடிக்க முடியுமா என்று கேட்கிறார்கள். ஆனால், மணிரத்னம் சார் 'நீ தான் நடிக்கிற' என்று சொல்லியிருக்கிறார்.
அவருக்கு என் மீது எப்படி இவ்வளவு நம்பிக்கை என்று தெரியவில்லை. அதிகபட்சமாக போனால் தமிழ் சினிமாவில் நடிக்கக் கூடாது என 'ரெட்' போடுவார்கள். நடிக்கவில்லை என்றால் என்ன, எங்கப்பா - அம்மா திறமைசாலியாகதான் வளர்த்திருக்கிறார்கள். படத்தில் நடித்துதான் ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை.
சினிமாவில் தொடர்ந்து நடிப்பதற்கு ரசிகர்கள் மட்டுமே காரணம். என்ன செய்தாலும், ரசிகர்களை விட்டு போய்விட மாட்டேன்.எனக்கு இந்த உலகத்திற்கு பிரச்சினை இருக்கிறது. அது என்னவென்று தற்போதுதான் கண்டுபிடித்தேன். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்வார்கள்.
ஆனால், நான் இந்த வரிசையில் பாலோ செய்யவில்லை. எனது வரிசையில் முதலில் தெய்வம்தான். தெய்வம் கொடுத்தது தான் வாழ்க்கை, ஆகையால் அவரை பின்னால் போடுவதற்கு மனதில்லை. உலகம் ஒரு வரிசையில் பார்த்தால், நான் வேறு மாதிரி பார்க்கிறேன்.
இது தான் எனக்குள் இருக்கும் பிரச்சினையே.திடீரென்று தனுஷ் மீது நடிப்பு என்றதொரு பாரத்தைப் போட்டார்கள். அதை இறக்கி வைக்காமல், தொடர்ச்சியாக போராடி வருகிறார். அவருக்கு பக்கத்தில் கடவுள் எனக்கொரு இடம் கொடுத்திருக்கிறார் என்றால், அதையே மிகப் பெரிய இடமாக தான் நினைக்கிறேன்.
அவரைப் போன்று திடீரென்று வராமல், பிடித்து ரசித்து இந்த துறைக்குள் வந்தேன். ரசிகர்களின் அன்பும், ஆதரவும் இருக்கும் வரை வேறு எதைப் பற்றியும் கவலையில்லை.நான் ஏதாவது தவறு செய்திருந்தால், உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து மன்னித்துவிடுங்கள்.இவ்வாறு சிம்பு பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.