முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 18 டிசம்பர் 2017      கடலூர்
Image Unavailable

கடலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்வு   நாள் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே,   தலைமையில்  நடைபெற்றது.இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டர் அவர்களிடம் நேரில் அளித்தனர்.

கோரிக்கைகள் அடங்கிய மனு

 மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மொத்தம் 511 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த இம்மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டும் மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என கலெக்டர்  அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு தெளிவான பதிலை அளிக்கவேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில் கலெக்டர் அவர்களிடம் மாற்றுத்திறனாளி சிறப்பு சக்கர நாற்காலி கோரி மனு கொடுத்ததில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு பண்ருட்டி வட்டம் மருங்கூர் அஞ்சல் வடக்குத்தெரு சிவலிங்கம் மகன் மணிவேல் அவர்களுக்கு ரூ.20,000- மதிப்பீட்டில் முதுகு  தண்டுவடத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலியை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே,   வழங்கினார்.குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி)  கூஷ்ணாதேவி, தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) சேதுராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் தினேஷ் ஆகியோர் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து